Tuesday, September 30, 2008

நோன்பின் கடமைகள்

மு‌ஸ்‌லி‌ம் ம‌க்க‌ள் நோ‌ன்‌பிரு‌ந்து த‌ங்களது கடமையா‌ற்‌றி ர‌ம்ஜா‌ன் ப‌ண்டிகை‌க் கொ‌ண்டாடு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த நேர‌த்‌தி‌ல், நோ‌ன்‌பி‌ன் கடமைக‌ள் ப‌ற்‌றி உ‌ங்க‌ளுட‌ன் ப‌கி‌ர்‌ந்து கொ‌‌ள்‌கிறோ‌ம்.

1. பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது.

webdunia photoWD
2. முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக (பதிலாக) ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

3. பைத்தியக்காரர்கள், ந‌ன்மை‌-‌தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் நோன்பு நோற்பது கடமை‌யி‌ல்லை. நோன்புக்கு பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியது‌மி‌ல்லை.

4. சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

5. பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

6. கற்பமாக இருக்கும் பெண் அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

7. மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

8. 'தீ' மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது, பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.


நோன்பை முறிக்கும் செயல்கள்!

1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.

2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்க‌ள் (மருந்து, குளுக்கோஸ் போன்றவைக‌ள்) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.

5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.

No comments:

Post a Comment