Sunday, September 28, 2008

மல்லாகம் பகுதியில் இரவு வேளையில் திருட்டு

மல்லாகம் பகுதியில் உள்ள ஜயனார் கோவிலடி பனங்கட்டித் தொழிற்சாலை ஒழுங்கைப் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளில் முகத்தை துண்டால் மறைத்துக் கட்டிய ஆயததாரிகள் மிகவும் துணிகரமான முறையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்கள்

கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கிராம அலுவலர் பாலபத்தமன் வீட்டின் மதில் சுவரைப்பாய்ந்து ஆயுதங்களுடன் சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் அங்கிருந்து சுமார் ஜந்து லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளார்கள் இந்த சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து பறிப்பட்ட திருடர்கள் பனங்கட்டடித் தொழிற்சாலை அமைந்துள்ள ஒழுங்கையில் உள்ள கதிர்காமத்தம்பி என்பவருடைய வீட்டிற்குச் சென்று கொள்ளையிட் முயன்ற வேளையில் வீட்டார் சத்த்மிட்டதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் கொண்டுவந்த கத்தியையும் கைவிட்டு தப்பி ஓடியுள்ளாhகள் இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்ட்டுள்ளது
E-mail to a friend

No comments:

Post a Comment