Monday, May 10, 2010

எதிர்வரும் 12 முதல் 18 வரை இராணுவ வெற்றி வாரம் : அமைச்சு தீர்மானம்







விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் நிறைவடைவதைத் தொடர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான கால பகுதியை இராணுவ வெற்றி வாரமாகக் கொண்டாடுவதற்குப் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் முதல்நாளான 12 ஆம் திகதி மத்திய மகாணத்திலும் 13 ஆம் திகதி ஊவா, கிழக்கு, வட மாகாணங்களிலும், 14 ஆம் திகதி வடமேல் மாகாணத்திலும் 15 ஆம் திகதி தென் மாகாணத்திலும், 16 ஆம் திகதி வட மத்திய மாகாணத்திலும் 17 ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.

அதற்கு மேலதிகமாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தலைமையில் சர்வ மத வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.

இதன் பிரதான நிகழ்வாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துமுகமாகவும் உயிரிழந்தவர்களை நினைவுகூருமுகமாகவும் அநுராதபுரம் நுவர வாவியில் விளக்கேற்றும் நிகழ்வு ஒன்றும் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment