Sunday, May 9, 2010

30 வருடங்களின் பின் கிளிநொச்சி நீதிமன்றம் நாளை திறப்பு _ வீரகேசரி இணையம் 5/9/2010 1:58:29 PM Share _Follow Virakesari on Twitter சுமார்







சுமார் 30 வருட காலத்தின் பின், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நாளை 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் செயல்படவுள்ளதாக அரச இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் முன்னர் இயங்கிய கட்டடம் சேதமடைந்துள்ளதால், அதற்கு அருகிலுள்ள தனியார் கட்டடம் ஒன்றிலேயே நீதிமன்றம் இயங்கவுள்ளது.

குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் நீதிமன்ற கட்டிடத்தை வைபவ ரீதியாக காலை 9.00 மணிக்குத் திறந்து வைப்பார்.

கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ___

No comments:

Post a Comment