நீதிமன்றம் முன்னர் இயங்கிய கட்டடம் சேதமடைந்துள்ளதால், அதற்கு அருகிலுள்ள தனியார் கட்டடம் ஒன்றிலேயே நீதிமன்றம் இயங்கவுள்ளது.
குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் நீதிமன்ற கட்டிடத்தை வைபவ ரீதியாக காலை 9.00 மணிக்குத் திறந்து வைப்பார்.
கிளிநொச்சி நீதிமன்றுக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம் ஆகிய நீதிமன்றங்களில் கடமையாற்றிய அலுவலர்கள் கடந்த முதலாம் திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ___
No comments:
Post a Comment