Sunday, May 9, 2010

புதிய ஆணைக்குழு அமைக்கும் இலங்கையின் அறிவிப்பு சர்வதேச விசாரணையை திசைத்திருப்புவதற்கான முயற்சி _





தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சர்வதேச மரபுகள் மீறப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் புதிய ஆணைக்குழுவொன்றை அமைக்கும் திட்டமானது சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை திசை திருப்புவதற்கான மற்றொரு முயற்சியென மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்றின் மூலம் உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.

இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் .

குழுவொன்றை அமைப்பதை தடுப்பதற்கு பல மாதகால பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்' தொடர்பான ஆணைக்குழு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி வுற்ற பின்னர், சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளிக்கும் ஆவண மொன்றில் பான் கீ மூனுடன் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டார். ஆனால், காத்திரமான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வில்லை..

"பொறுப்புடைமை தொடர்பாக சர்வதேச சமூகம் குரல் எழுப்பும் ஒவ்வொரு தடவையும் இலங்கை நீண்டகாலத்தை எடுத்துக்கொண்டு, எதையும் சாதிக்காத ஓர் ஆணைக்குழுவை அமைக்கும்' என மனித உரிமைகள் கண்காணிப்பதற்கனான ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். யுத்த விதி மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட குழு கண்டறிந்த விபரங்களை வெளியிடுவதற்கு 2010 ஆண்டு ஆண்டு ஏப்ரல் மாதம் கால எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் இன்னும் அதை வெளியிடவில்லை. அக்குழு அமைக்கப்பட்ட போது அது பொறுப்புக்கூறுவதை தவிர்த்துக்கொள்வதற்கான வெறும் கண்துடைப்பே என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. ஐ.நா.வின் மதிப்பீட்டின்படி 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13000 பேர் காயமடைந்துள்ளனர். வேறு சில மதிப்பீடுகள் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அரசாங்கப் படையினரால் மீறல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை..

ஜனாதிபதி உட்பட அரசாங்கத் தரப்பினர் மீண்டும் மீண்டும் வலியுறுதியுள்ளனர். ஆனால் பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்த்தபுஷ்டியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மே 6 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் மோதல்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாகவும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவொன்றை அமைக்கப்போவதாக அறிவித்தது..

சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் மீறப்பட்டமை தொடர்பாகவும் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் தொடர்பாக வும் அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தொடர் பாகவும் ஆராயப்படும் என அரசாங்க இணை யத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையின் கிரிமினல் சட்டத்தின்படி அத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாகவோ இலங்கை அல்லது சர்வதேச சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தோ அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அரசாங்க அறிக்கையின்படி இந்த ஆணைக்குழுவில் 7 இலங்கையர்கள் இடம்பெறுவர். ஆனால் சர்வதேச பங்களிப்பு எதுவும் இல்லை. மோசமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குற்றமிழைத்தவர்களை மன்னித்தல் தொடர்பான சர்வதேச விமர்சனங்களை திசை திருப்புவதற்காக இத்தகைய ஆணைக்குழுக் களை அமைக்கும் நீண்டகால வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததிலிருந்து குறைந்த பட்சம் 10 ஆணைக்ழுக்களை அமைத்துள்ளது. ஆனால் அவற்றில் எதுவும் குறிப்பிடத்தக்க பெறுபேற்றை ஏற்படுத்தவில்லை. .

இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல் சம்பங்கள் குறித்து விசாரிப்பதற்கு 2006 ஆம் ஆண்டு நவம்பர் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முற்றிலும் தோல்விகரமானதாக இருந்தது. சர்வதேச நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவொன்று விசாரணைகள் வெளிப்படையாகவும் சர்வதேச முறைமைகளுக்கு ஏற்ற வகையிலும் இல்லாததால் 2008 ஆம் ஆண்டு இராஜினாமாச் செய்தது. .

குறிப்பிடப்பட்ட 16 மனித உரிமை மீறல் சம்பவங்களில் 7 சம்பவங்கள் தொடர்பாக மாத்திரம் அக்குழு விசாரணை நடத்தியிருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த ஆணைக்குழுவை கலைத்தார். அதன் அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவில்லை. பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோனை வழங்குதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் முயற்சியைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வாரகாலம் மேற்கொண்ட முயற்சிகளின் பின்னர் புதிய ஆணைக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment