Monday, May 10, 2010

கண்ணிவெடி வெடித்ததனால் பிரான்ஸ் நாட்டவர் மரணம்







வவுனியா மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் போது கண்ணிவெடியொன்று தவறுதலாக வெடித்ததனால் பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் இன்று காலை சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளார்.

இந்நிலையில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற அம்புலன் வண்டி சடலத்தை மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போது விபத்துக்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment