Tuesday, May 4, 2010

இந்திய விசா முகவர் நிலையத்தை இன்று





இந்தியாவுக்கான விஸா விண்ணப்பங் களை ஏற்பதற்கான முகவர் அலுவலகம் இன்று பிற்பகல் 3 மணிக்கு யாழ். பிறவுண் வீதியில் 89 ஆம் இலக்க கட்டடத்தில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்ட விருக்கின்றது.
இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா இந்த அலுவலகத்தைத் திறந்து வைக்க விருக்கிறார்.
இந்த நிலையம் திறந்து வைக்கப்படுவ தன் மூலம் இனிமேல் இந்திய விஸாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கொழும்பு சென்று அலையாமல் யாழ்ப்பாணத்திலேயே தமது விஸா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விஸாக் களை யாழ்ப்பாணத்திலேயே உரியவர்களுக்கு விநியோகிக்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இன்று திறந்து வைக்கப்படவி ருக்கும் வி.எம்.எஸ். குளோபல் முகவர் நிறு வனமே இந்திய விஸா விண்ணப்பங்களை ஏற்றுச் செயற்படும் முகவர் நிலையமே கொழும்பிலும் இந்திய விஸா விண் ணப்பங்களைக் கையாண்டு வருவதுடன் உலகில் 46 நாடுகளில் 345 அலுவலகங் கள் மூலமாக முகவராக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment