Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

Friday, December 23, 2011

திம்புவில் எல்.ரி.ரி.ஈ. கையாண்டதைப் போன்ற உபாயத்தை த.தே.கூ. கையாள்கிறது-அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

பொலிஸ், காணி அதிகாரங்களைக் கோரி காலத்தை விரயமாக்கக்கூடாது எனவும் உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்துமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் அரசாங்கம் கோரியுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கூறிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் எதிர்மறையான நிலைப்பாட்டில் உள்ளததாகவும் அரசாங்கம் கலந்துரையாடத் தயாரில்லாத விடயங்களில் அதிகார பரவலாக்கத்தை வலியுறுத்தி நிற்பதாகவும் தெரிவித்தார்.

திம்புப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எல்.ரி.ரி.ஈ. வெளியேறியபோது அவ்வியக்கம் கையாண்டதைப் போன்ற உபாயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாள்கிறது எனவும் அவர் கூறினார்.

'அரசாங்கம் 31 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கும். இதற்காக 19 பேரின் பெயர்களையும் அறிவித்துள்ளது. ஆனால் த.தே.கூட்டமைப்பு தனது அங்கத்தவர்களின் பெயர்களை இதுவரை அறிவிக்கவில்லை. அரசாங்கத்துடன் த.தே.கூட்டமைப்பு அவர்களின் அபிலாஷைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எல்.ரி.ரி.ஈ. வெளியேறியபோது கையாண்டதைப் போன்ற உபாயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாள்கிறது.

த.தே.கூட்டமைப்பின் எதிர்மறையான மற்றும் கடும்போக்கு நிலைப்பாடு காரணமாக அதனுடன் பேசுவது கடினமானது. யுத்தம் முடிந்தமையும் சமாதானம் உதயமாகியமையும் தமிழ் மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. அது உண்மையல்ல. வடக்கில் சமாதானம், சட்டம் ஒழுங்கு, அபிவிருத்தியில் 5 சதவீத முன்னேற்றம் ஏற்பட்டதாக ஏற்றுக்கொள்வதற்கும் த.தே.கூ. மறுக்கிறது' அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக சில மேற்குல நாடுகள் சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளமை உற்சாகமளிப்பதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

'சிலர் அரசாங்கம் இந்த அறிக்கையை அரசாங்கம் வெளியிடாது எனக் கூறினார்கள். ஆனால் ஆனால் குறுகிய காலத்தில் ஆணைக்குழுவுடன் சிபாரிசுகளுடன்கூடிய அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளளது.

தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்துக்காக ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்க வேண்டும்' எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறினார்.

Monday, June 28, 2010

ஓமந்தையில் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுமதி மறுப்பு- ஜ.நா விசாரணைக்குழு அமைப்புக்கு எதிராக அரசு பழிவாங்கல்

இன்றைய தினம் ஓமந்தையில் சோதனைச்சாவடியில் வைத்து வன்னி செல்ல சென்ற அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். ஜ.நா விசாரணைக்குழு அமைத்ததுக்கு பழிவாங்கும் முகமாக இதனை இலங்கை அரசாங்கம் செய்துள்ளது..

Monday, June 14, 2010

விசுவமடு பாலியல் வல்லுறவு வழக்கில் நான்கு இராணுவத்தினரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு







விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நீதவான் சிவகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்;தார்கள். இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந் ஆறு இராணுவத்தினரோடு 30 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியபோது, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும், சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்த ஏனைய சாட்சிகளும் எதிரிகளை அடையாளம் காட்டியுள்ளனர்.

இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட 4 பேர் மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர் வித்தியாதரன் வடமாகண சபை தேர்தலில் போட்டியிடுவாரா?

எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு தான் தயார் என சுடர் ஒளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் என்.வி.வித்தியாதரன் தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரான வித்தியாதரன் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக தமிழ்மிரர் இணையதளத்தளத்திற்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த வாரம் இது சம்பந்தமாக இலங்கையில் உள்ள சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் தன்னை சந்தித்து சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசியலில் இறங்க வேண்டும். அந்த அடிப்படையில் எதிர்வரும் வடமாகண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் படி வேண்டினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தயார் என்றால் தான் போட்டியிட தயார் என்றேன்.

இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி சாதகமான பதில் தருவதாக கூறினார்கள். அவர்களின் பதிலை எதிர்பார்த்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களுடன் இருந்து மிகவும் கஷ்டப்பட்டவன் என்ற வகையில் வடமாகண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட பொருத்தமானவன் என நினைப்பதாக ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்தார்

இன்று சர்வதேச இரத்த தான தினம் : 106 பேர் இரத்த தானம்







இன்றைய சர்வதேச இரத்த தான நிகழ்வில், கொழும்பு தேசிய இரத்த மாற்று வங்கியில் 106 பேர் இரத்த தானம் செய்துள்ளதாக வைத்தியசாலை பொறுப்பாளர் டாக்டர் நாமல் பண்டார வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, நாடு தழுவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் இரத்த தானம் செய்துள்ளனர். இன்று நாடு தழுவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் சர்வதேச இரத்த தான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. _

கி.மா.சபை உறுப்பினர்கள் நாடு திரும்பியும் இந்தியாவில் தங்கியிருக்கும் பிள்ளையான்

தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமே தவிர, இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் அல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களையும்உள்ளடக்கிய குழு ஒன்று கடந்த வாரம் இந்தியாவின் கேரளா பகுதிக்கு சென்றிருந்தது.

இக்குழு உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பினர். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடு திரும்பாமல் புதுடில்லியில் தங்கியுள்ளார்.

இது சம்பந்தமாக இந்தியாவில் தங்கியுள்ள முதலமைச்சருடன் தமிழ்மிரர் இணையதளம் நேரடியா தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு அவர், தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமாகும். இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் இங்கு வரவில்லை.

ஒரிரு நாட்கள் இங்கு கழித்து விட்டு, கேரளா சென்று இரண்டாவது குழுவாக இந்தியா வந்துள்ள எமது மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளேன். அதன் பிற்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளேன் என்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்

மாடு,பன்றி போன்றவற்றால் தொற்றக்கூடிய "foot and mouth" நோய் அநுராதபுரத்தில் பரவல்

மாடு , பன்றி போன்றவற்றால் தொற்றக்கூடிய "foot and mouth" என்ற நோய் மத்திய மாகணத்தில் அதிகரித்துருகின்றது. அத்துடன் இந்நோய் கன்றுக்குட்டிகள் மற்றும் பண்ணைகள் காரணமாக அநுராதபுர மாவட்டத்திற்கும் பரவுவதாக சுகாதார திணைக்களத்தின் மிருக உற்பத்தி பிரிவு பணிப்பாளர் வைத்தியர் சந்திரசோம டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்நோய் மிருகங்களுக்கிடையில் மிக விரைவில் பரவக்கூடிய ஒரு நோயாகும். இந்நோய் பரவுவதற்கு பிரதான காரணம் மாடுகளின் நடமாட்டமே என்று அவர் குறிப்பிட்டார்.

மன்னாரில் கடத்தப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிஸில் தஞ்சம்







மன்னார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுப் பின் தப்பி வந்து பொலிஸிடம் தஞ்சமடைந்தார்.

இவர் கடத்தப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 3 லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டே இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவர் தப்பி வந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி நாளை இலங்கை வருகிறார்

ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி நாளை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், இலங்கை வரும் யசூசி அகாஷி, அரசாங்க அதிகாரிகள், எதிர்த்தரப்பினரின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்திக்கவிருப்பதாகவும் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்தது.

இந்த சந்திப்பின்போது, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பிலும் யசூசி அகாஷி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் ஜப்பானியத் தூதரகம் குறிப்பிட்டது.

மேலும், இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட சமாதானத்தை எட்டுவதற்கான அரசியல் தீர்வு தொடர்பில் யசூசி அகாஷி கலந்துரையாடவிருப்பதாகவும் ஜப்பானியத் தூதரகம் கூறியுள்ளது.

மீள்குடியேற்றக் கிராமங்களுக்கு விஜயம் செய்யவிருக்கும் யசூசி அகாஷி , வடக்கில் ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், இடம்பெயர்ந்தோருக்கான திட்டங்கள் குறித்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

யசூசி அகாஷி யின் 20ஆவது இலங்கைக்கான விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, June 13, 2010

இராணுவத்தினரின் ஒத்திகை; காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது

கொழும்பு, காலி முகத்திடல் முதல் செரமிக் சந்தி வரையான (ஹில்டன் ஹோட்டல் வீதி உட்பட) பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் பகுதியில் நடைபெறவுள்ள இராணுவ வெற்றி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே குறித்த பிரதான வீதி மூடப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

Friday, June 11, 2010

மாணவன் தாக்கி சக மாணவன் உயிரிழப்பு

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவனின் தலையை பிடித்து சக மாணவன் குழாய் கிணற்றில் தாக்கியதால் காயத்திற்குள்ளானவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான மாணவன் குறித்த மாணவனின் கழுத்தை நெறித்தும் குழாய் கிணற்றில் பிடித்து தாக்கியதாலும் காயத்திற்குள்ளா மாணவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனமடுவ வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

இவர்கள் இருவருக்குமிடையில் தண்ணீர் போத்தல் ஒன்றுக்காகவே சண்டை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

ஆயுதங்களை விநியோகிப்பதன் மூலம் இலங்கைக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்த இந்தியா முனைப்புக் காட்டுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்த விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் எந்த ஒரு அடித்தளமும் இல்லாமல் கூறப்பட்டதாகவும் இந்திய இராஜதந்திரி ஒருவர் குறிப்பிட்டார்.

அமைச்சர்களான சிலர் இன்னமும் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர் நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க தெரிவிப்பு




30வருட பயங்கர வாதத்திலிருந்து விலகி ஜன நாயகத்துக்குள் நுழைந்து அமைச்சர்களான சிலர் இன்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கின்றனர் என்று ரவி கருணா நாயக்க எம்.பி.நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
சட்டவிரோத ஆயுதங்களைக் களைவது தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளன. பிரதேச சபை உறுப்பினர்கள் கூட இப்படியான ஆயு தங்களை வைத்திருக்கின்றனர். ஜன நாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் இவ்வகையான ஆயுதங்கள் அனைத்தையும் களைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத ஆயுதங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். அவர்களுக்கு உரிமம் தேவைப்பட்டால் உரிமம் வழங்கமுடியும்.
30 வருட பயங்கரவாதத்தில் இருந்து விலகி ஜனநாயகத்துக்குள் நுழைந்து அமைச்சர்களாகியவர்களும் ஆயுதங்களை வைத்துள்ளனர். இதனால் பிரச்சினை வரு கின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் இன்னும் 10,15 வருடங்களில் நிலைமை மோசமாகும்.
அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ ஆயுதங்களை வைத்திருக்கத் தேவையில்லை. கிழக்கில் அரசியல் கட்சி கள் ஆயுதங்கள் வைத்துள்ளன என்று அமைச் சர் கருணாவே சொல்கிறார்.
நாடுமுழுவதும் உள்ள இவ்வாறான சட்டவிரோத ஆயுதங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும். கட்சி பேதங் களை மறந்து நாம் அனைவரும் ஒன்றி ணைந்து இந்த விவகாரத்தில் செயலாற்ற வேண்டும். என்றார்.

மேர்வின் சில்வாவின் லேட்டஸ்ட் காமெடி


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அல்லது வடக்கில் பணியாற்றிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஜெனரல் சரத் பொன்சேக்கா ஈடுபட்டால், தான் அவரை கொன்று தான் மரணிக்க தயார் என பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் நேற்று (10) நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி , விடுதலைப்புலிகளுக்கு எதிராக வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் இரகசியங்களை சர்வதேசத்தின் மத்தியில் முன்வைத்துள்ளதாகவும் இதனால் அவருக்கு எதிராக தனியான சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். இராணுவத்தினருககு எதிராக ஜெனரல் சரத் பொன்சேக்கா வெளியிட்டுள்ள தகவல்கள், இலங்கையின் இராணுவத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் குணரட்ன, சவேந்திர சில்வா, ஜகத் டயஸ் போன்ற போர் வீரர்களை காட்டிக்கொடுப்பதற்காக பொன்சேக்கா வெளியிட்;;டுள்ள கருத்துக்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Thursday, June 10, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவின் கென்யா பயணம்;பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும்

சபாநாயகர் சமல் ராஜபக்ஸவினால் கோரிக்கைக் கடிதமொன்று கையளிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சங்கத்தின் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

குறித்த கோரிக்கை விடுக்கப்படாத பட்சத்தில் இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினறுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை, குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்குவதா? இல்லையா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கும் என்று அமைச்சின் பேச்சாளரான லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

ஆபாச விளம்பரப்பலகை, சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தீர்மானம்

கொழும்பு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆபாச விளம்பரப் பலகைகள் மற்றும் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பெண் பொலிஸாரும் சிறுவர் சபையும் இணைந்து தீர்மானித்துள்ளன.

அத்துடன், கவர்ச்சிப் படங்களைப் பிரசுரிக்கும் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண் பொலிஸாரும் சிறுவர் சபையும் இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், கொழும்பு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆபாச விளம்பரப் பலகைகள் மற்றும் படங்களை அகற்றும் நடவடிக்கைகளை இவர்கள் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்படும் ஆபாச இணையதளங்களை தடைசெய்வதற்கான நடவடிக்கையை ஏற்கனவே பெண் பொலிஸார் மற்றும் சிறுவர் சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கிராண்ட்பாஸில் கொள்கலன் கவிழ்ந்ததில் பெரும் வாகன நெரிசல்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் கொள்கலனொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியிலுள்ள இலங்கை மின்சார சபையின் மதில் சுவரில் மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதனால் குறித்த மதில் சுவர் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பஞ்சு ஏற்றி வந்த கொள்கலன், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மின்சார சபையின் மதில் சுவரில் மோதி குடைசாய்ந்துள்ளது.

இதனால் கொழும்பு-கண்டி வீதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடைசாய்ந்துள்ள கொள்கலனை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் தாம் பொதுமன்னிப்பை பெற்றுள்ளேன்: டக்ளஸ் தேவானந்தா




இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் அனைத்து அரசியல் தலைவர்களும் பொதுமன்னிப்பை பெற்றுள்ளார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் இந்தியா. கொம். இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

1986 ஆம் ஆண்டு சென்னை சூழமேடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நேற்று சென்னை மேல் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதைவிட டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் 3 வழக்குகள் உள்ளன.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப் பந்தப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனக்கும் ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னை கட்டுப்படுத்தாது.

எனினும் சட்டரீதியான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முகங்கொடுக்கவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இந்தியாவுக்கு தற்போது சட்ட விரோதமாக வரவில்லை. உரிய சட்டப்படி வந்துள்ளேன். நான் இந்தியா வந்து செல்ல எந்த தடையையும் அரசு விதிக்கவில்லை. அந்த பட்டியலில் நான் இல்லை.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர், இது தொடர்பில் கருத்துரைக்கையில், இந்தியாவுக்குள் பிரவேசிக்காதபடியான கண்காணிப்பு பட்டியலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

போஷாக்கிற்காக 500 மில். ரூபா செலவிடாத அரசு ஐஃபா விழாவுக்கு 800 மில்லியன் ரூபா செலவிட்டது: சஜித் கண்டனம்



இலங்கையை அச்சுறுத்தியுள்ள போஷாக்கின்மை குறைபாட்டை நிவர்த்திக்க 500 மில்லியன் ரூபாவை செலவிட தயாரில்லாத அரசு இந்திய நடிகர்களை அழைத்து நடத்திய களியாட்டத்துக்கு 800 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக ஐ.தே.க.வின் பா.உ. .சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாஸ மேலும் கூறியதாவது;

இலங்கையில் நீண்டகால போஷாக்கின்மையால் 4 இலட்சம் சிறுவர்களும் வயதுக்கு ஏற்ற நிறையின்றி 5 இலட்சம் சிறுவரும் வயதுக்கு ஏற்ற உயரமின்றி 2 இலட்சம் சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் சனத் தொகையில் 30 வீதமானோர் பெண்கள் இவர்களில் 15 இலட்சம் பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 க்கு 20 வீதமான பெண்கள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விற்றமின் ஏ குறைபாட்டால் 5 வயதுக்கு குறைந்த 25 வீதமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரையில் திரிபோஷ திட்டம் செயலிழந்து போயுள்ளது. அத்திட்டத்தை முன்னெடுக்க தற்போதைய அரசிடம் எந்தத் திறமையும் இல்லை.

இலங்கையில் 100 க்கு 20 வீதமானோர் செல்வந்தர்களாகவுள்ளனர். அதேபோல் 100 க்கு 20 வீதமானோர் மிகவும் வறுமைக்குட்பட்டவர்களாவுள்ளனர்.

எனவே இவ்வாறு வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை இலக்கு வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினையால் கல்வி மட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஷாக்கின்மை பிரச்சினையை தனியாக சுகாதார அமைச்சினால் மட்டும் தீர்த்து வைக்க முடியாது.

தேசிய போஷாக்கு உபாயத்தை கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள போஷாக்கின்மை பிரச்சினையை தீர்க்க 500 மில்லியன் ரூபா போதுமானது. ஆனால் இதனை செலவிடத் தயாரில்லாத அரசு இந்திய நடிகர்களை அழைத்து 800 மில்லியன் ரூபாவை செலவிட்டு களியாட்ட விழா நடத்துகின்றது.

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!







பொது இடங்களில் தவறான முறையில் நடந்துகொள்ளும் காதல் ஜோடிகளைக் கைது செய்து எச்சரிக்கை விடுத்துவரும் பொலிஸார், காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் எனக் காதலர்களிடம் வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.

குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 200இற்கும் அதிகமான காதல்ஜோடிகள் இவ்வாறு கைதாகி விடுதலை பெற்றுள்ளனர்.

கொழும்பில் பொது இடங்களில் கூடும் காதலர்கள் எல்லைமீறி நடந்துகொள்வதால் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன