| இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். |
தமிழக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து புதுடில்லியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் மன்மோகன்சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மன்மோகன்சிங் அளித்துள்ள பதில்: இலங்கை சம்பவங்கள் வேதனையளிக்கிறது. டில்லியில் உள்ள சிறிலங்கா தூதர அதிகாரியை அழைத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நிலவரங்களைக் கேட்டறிந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு இராணுவ ரீதியான தீர்வு காண முடியாது. இலங்கையில் நடைபெறும் போரில் அப்பாவித் தமிழர்கள் பலியாவதைத் தடுத்து பரிவு காட்ட வேண்டும் என்றார் அவர். |
Wednesday, October 15, 2008
தமிழக அனைத்து கட்சிக்கூட்டத் தீர்மானம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கருத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment