இன்றைய தினம் மெனிக்பாம் வலயம் 2 ல் தேடுதல் வேட்டை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 500 க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.இந் நடவடிக்கைக்கென 35 பேர் கொண்ட விசேட பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினரும் கொழும்பிலிருந்து வந்துள்ளனர்.இதேவேளை 12 பொலிஸார் முகாமிலிருந்து விசாரணைக்கென அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இவர்கள் முகாமினுள் இருந்து பலரை பணம் பெற்றுக்கொண்டு வெளியே செல்ல அனுமதித்துள்ளனர்.இதில் பல இராணுவ அதிகாரிகளும் ,ஒட்டுக்குழு உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.