Sunday, November 30, 2008

இலங்கையில் குட்டி போட்ட Mitsubishi Black

Lankan News Photo From : In Sri Lanka ANYTHING is possible

புலிகளின் தாக்குதலில் ஆழ ஊடுருவும் அணியின் கட்டளைத் தளபதி மேஜர் லலித் ஜெயசிங்க பலி!

விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியின் கட்டளைத் தளபதியான மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் நாசகாரத் தாக்குதலை நடத்த வந்த மேஜர் லலித் ஜெயசிங்க தலைமையிலான 8 அடங்கிய ஆழ ஊடுவுரும் அணியினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த தளபதியை காவிக்கொண்டு பிறிதொரு மறைவிடத்தில் வைத்து குறித்த தளபதிக்கு காயத்திற்கு கட்டுப்போட்டு சிகிற்சை அளித்துக்கொண்டிருந்த போது, மீண்டும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி அவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியின் பல பகுதியில் லலித் ஜெயசிங்க தலைமையிலான ஆழ ஊடுருவும் அணியினர் நாசகாரத் தாக்குதலை நடத்தி பலரின் உயிரை காவுகொண்டனர். இதற்காக சிறீலங்கா இராணுவத்தில் வழங்கப்படும் மிகவும் உயர்ந்த விருதான "வீர விக்கிரம விபூசன" விருதையும், ஏனைய பல விருதுகளையும் மேஜர் ஜெயசிங்க பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகல்: புதிய உள்துறை அமைச்சராக சிதம்பரம் நியமனம்


இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார். மும்பாயில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து பிரதமர் அவரைப் பதவி விலகுமாறு பணித்துள்ளார். இதற்கு அமைவாகவே உள்துறை அமைச்சரின் பதவி விலகல் இடம்பெற்றது.

நாட்டின் புதிய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவியேற்றுள்ளார். ஆண்டுகளாக நடந்த பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களுக்கு உளவுப் பிரிவின் தோல்வியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உளவுத்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிவராஜ் பாட்டீல் மும்பாய்த் தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.

நேற்று பிரதமர் நடத்திய மிக முக்கியமான உயர் மட்டக் கூட்டத்துக்கு பாட்டீல் அழைக்கப்படவில்லை. மேலும் நேற்று கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் ஆகியோருக்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கடும் கருத்துத் தெரிவித்தனர்.

அவரை உடனே நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந் நிலையில் இன்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளார் சிவராஜ் பாட்டீல். அதில் மும்பை தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் இப்போது ஜகார்தாவில் சுற்றுப் பயணத்தில் உள்ள ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பப்பட்டது. அவர் பாட்டீலின் ராஜினாமாவை உடனே ஏற்றுக் கொண்டுவிட்டார்.

அதே போல ப.சிதம்பரத்தை உள்துறை அமைச்சராக நியமித்து பிரதமர் வெளியிட்ட உத்தரவுக்கும் ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளித்துவிட்டார். இதையடுத்து சிதம்பரம் உடனடியாக உள்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

வன்னியில் ஏதிலிகள் முகாம் மீது வான் தாக்குதல்: இருவர் பலி! 18 பேர் படுகாயம்



சிறீலங்காப் படையினரின் வான் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பதினெட்டுப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிறீலங்காப் வான்படையினருக்குச் சொந்தமான கிபிர் யுத்த வானூர்தகிள் கிளிநொச்சி கல்லாறு நாதன்குடியிருப்பு அமைந்துள்ள ஏதிலிகள் குடியிருப்பு மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் தருமபுரம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள்

01. சுதர்சன் சிவகுமார் (5 அகவை)
02. ராமன் ராமசாமி (80 அகவை)

படுகாயமடைந்தவர்கள்

01. தாயனந்தன் பவித்திரா (5 அகவை)
02. ராஜேந்திரன் லோகினி (7 அகவை)
03. ஆனந்தன் சித்திரா (9 அகவை)
04. ராஜேந்திரன் ரசிந்தா (10 அகவை)
05. செல்வம் (15 அகவை)
06. ராஜேந்திரன் தவச்செல்வி (16 அகவை)
07. ஆனந்தன் வேலவன் (18 அகவை)
08. சிவகுமார் ராஜகுமாரி (27 அகவை)
09. ராசேந்திரன் (28 அகவை)
10. நல்லையா புஸ்பாவதி (28 அகவை)
11. ராஜேந்திரன் (33 அகவை)
12. முருகேசு ருகுணுதேவி (33 அகவை)
13. ஆனந்தன் கமலாதேவி (38 அகவை)
14. கண்ணதாஸ் அமிர்தவள்ளி (40 அகவை)
15. சங்கரப்பிள்ளை (55 அகவை)
16. நாகராஜ் (55 அகவை)
17. பழனியம்மா (77 அகவை)
18. நல்லையா ஜசிந்தா (10 அகவை)

மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு பணிப்பு

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இயல்பு நிலைக்கு மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டு அரச சார்ப்பற்ற நிறுவனங்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சாட்டி மூன்று வெளிநாட்டு அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களை நாட்டைவிட்டு அனுப்பவுள்ளதாக பெயர் குறிப்பிடாத அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

மனிதாபிமான பணியில் ஈடுபட்ட தொண்டு நிறுவனங்கள் வன்னி பகுதியில் விடுதலை புலிகள் பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்கு கனரக வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நோர்வே மக்கள் உதவி அமைப்பு (Norwegian Pepples's Aid ), நெதர்லாந்து போரூட் (FORUT), சோபா (ZOA), ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மக்களை சென்றடையவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த நிறுவனங்கள் எக்காலப்பகுதியில் வெளியேற்றப்படவுள்ளார்கள் என்பது குறித்த எத்தகவல்களையும் வெளியிட மறுத்துள்ளனர்.

Thursday, November 27, 2008

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை



தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

இலங்கை ராணுவ வெற்றி நிரந்தரமற்றது


ஏறக்குறைய 1/3 ராணுவம் போரில் காயப்பட்டோ, மரணமடைந்தோ, தப்பி ஒடியோ உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை வைத்து இவர்களால் பெரிய நிலப்பரப்பை பாதுகாப்பது கடினம், விடுதலை புலிகள் எப்போது வேண்டுமானாலும் ஊடறுப்பு செய்து முன்னேறுவது மிகச்சுலபம்.
இந்த ராணுவ வெற்றிகள் எல்லாம் நிரந்தரமற்றது.

இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இதற்கான காரணம் 'வன்னி நடவடிக்கை" எனப்படும் பெரும் படை நடவடிக்கை ஒன்றை இராணுவம் ஆரம்பித்தது தான். இது முடிவுக்கு வரவில்லை. ஆனால், கடந்த 21 மாதங்களாக இழுபட்டு செல்கின்றது.

எனினும் இந்த நடவடிக்கையை 9 தொடக்கம் 12 மாதங்களில், நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

மிகப்பெரும் படை நடவடிக்கை

இந்த மிலேனியத்திற்கு முன்னர் 18 மாதங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை ஈழப்போர் வரலாற்றில் நடைபெற்ற எல்லா சமர்களுக்கும் தாய் சமராக விளங்கியது.

ஏனெனில் இராணுவம் மூன்று டிவிசன்களை கொண்ட (53, 55, 56) 30,000 இராணுவத்;;தையும், சிறப்பு படையணி, கொமோண்டோ படையணி என்பவற்றையும், பின்னனி களமுனகளில் ஆயிரக்கணக்கான கடற்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்களையும் பயன்படுத்தியிருந்தது.

இந்த நடவடிக்கையில் பீரங்கிகள், ரி-54, ரி-55 டாங்கிகள், கிபீர், எஃப்-7 மிகையொலி விமானங்கள், எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்திகள் என்பவற்றின் துணையுடன் அதிகளவு சூடு வலுவையும் பிரயோகித்திருந்தது.

ஆனால், தற்போதைய படை நடவடிக்கையில் இராணுவம் ஐந்து முழுமையான டிவிசன்களையும் (56, 57, 58, 59, 63) இரண்டு பகுதியான டிவிசன்களையும் (61, 62), மூன்று சிறப்பு படையணி றெஜிமென்ட், இரண்டு கொமோண்டோ பிரிவுகள் என்பவற்றையும் பின்னணி களமுனைகளில் இரண்டு டிவிசன்களையும் (டிவிசன்கள்-21-மன்னார், 22-மணலாறு) பயன்படுத்தி வருகின்றது.

வடபோர் முனையில் இரு தாக்குதல் படையணிகள் (53, 55) கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான 12 கி.மீ நீளமான அச்சில் நிலைகொண்டுள்ளன.

கொள்கை ரீதியாக கணிப்பிட்டால் 'வன்னி நடவடிக்கையில்" 60,000 தொடக்கம் 65,000 படையினர், 15,000 மேலதிக படையினரின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

சூட்டு வலுவும் 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையில் பயன்படுத்தியதை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம். கனரக பீரங்கிகள், 122 மி.மீ பல்குழல் உந்துகணை செலுத்திகள், ரி-54, ரி-55 ரக டாங்கிகள், கவசத்தாக்குதல் வாகனங்கள், எஃப்-7, கிபீர், மிக்-27 தாக்குதல் வானூர்திகள், எம்ஐ-24, எம்ஐ-35 தாக்குதல் உலங்குவானூர்திகள் என்பவற்றை அரசு பயன்படுத்தி வருகின்றது.

வான்படையின் தாக்குதலும் அதிகம், வன்னி பகுதி மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட குண்டுகளை வீசியுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட தற்போதைய நவீன வெடி மருந்தானது 18 கிலோ தொன் ரிஎன்ரி வெடிமருந்துக்கு இணையானது. ஹிரோசிமாவில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் நிறை 13 தொடக்கம் 18 கிலோ தொன் ரிஎன்ரி வெடிமருந்துக்கு ஒப்பானது.

எனவே, ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைகொண்ட வெடிமருந்துகள் வன்னியில் வீசப்பட்டுள்ளன.

பாதுகாப்பு செலவீனங்களை கருத்தில் எடுத்தால் தற்போதைய படை நடவடிக்கையில் அரசு கடந்த 21 மாதங்களில் 267.75 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளது (சுள 139.6 டிடைடழைn கழச 2007 யனெ 166.4 டிடைடழைn கழச 2008) இது 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையுடன் ஒப்பிடும் போது 300 விழுக்காடு அதிகம் (சுள 46.6 டிடைடழைn கழச 1997 யனெ 57.2 டிடைடழைn கழச 1998). “வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை காலப்பகுதியில் அரசு 432 மில்லியன் ரூபாய்களை மாதம் ஒன்றிற்கு செலவிட்டிருந்தது. ஆனால், தற்போது அது 1275 மில்லியன் ரூபாய்களை மாதம் ஒன்றிற்கு செலவிட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்கு அரசு 500 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாகவும், இதன் படி ஒரு விடுதலைப்புலி உறுப்பினரை கொல்வதற்கு 50 மில்லியன் ரூபாய்களை அது செலவிட்டுள்ளதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். இதுவும் தற்போதைய அதிக செலவுமிக்க போருக்கான ஒரு ஆதாரம்.

மேற்கூறப்பட்ட காரணிகளின் மூலம் தற்போதைய 'வன்னி படை நடவடிக்கை" என்பது ஈழப்போர் வரலாற்றில் மிகவும் நீண்டதும், பெரியதும், அதிக செலவுமிக்கதுமான ஒரு நடவடிக்கை என்ற முடிவுக்கு படைத்துறை அவதானிகள் வந்துள்ளனர். இது உலகில் நடைபெற்ற சமர்களிலும் மிக நீண்ட சமராகும்.

வெளிநாட்டு படைத்துறை உதவிகள்

சிறிலங்காவின் தற்போதைய படை நடவடிக்கை வெளிநாட்டு படைத்துறை நிபுணர்களின் ஒத்துழைப்புக்களுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (பெரும்பாலும் அமெரிக்கா, இந்திய படைத்துறை அதிகாரிகள்). அவர்கள் களமுனைகளுக்கு வெளியில் இருந்து மட்டுமல்லாது களமுனைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த செப்ரெம்பர் மாதம் வவுனியா படை தலைமையகம் மீது வான்புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் இரு இந்திய படை அதிகாரிகள் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் விமானங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், சிறிலங்கா வான்படையின் தாக்குதல்களையும் நெறிப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகளை இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இதன் பிந்திய நிகழ்வாக, கிளிநொச்சியின் தென்மேற்கு பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் 57-2 ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் செனரத் பண்டாரா அண்மையில் சிறப்பு பயிற்சிக்காக இந்திய சென்றிருந்தார். ஒன்றரை வருடங்கள் அவர் வன்னி களமுனைகளில் பணியாற்றிய பின்னர் இந்தியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு நடவடிக்கையின் பின்னரான ஆய்வு (யுகவநச யுஉவழைn சுநஎநைறள-யுயுசு) என கருதப்படுகின்றது. அமெரிக்க இராணுவம் இத்தகைய நடவடிக்கையின் பின்னரான ஆய்வு செயற்பாடுகளை அறிமுகப்படுத்தியதுடன், அதனை பின்பற்றியும் வருகின்றது. நடவடிக்கை காலப்பகுதியில் ஏற்பட்ட சம்பவங்களை ஆராய்வது அதன் குறிக்கோள், இது வருங்கால நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும்.

சிறிலங்காவின் பொருளாதாரத்தையும், அதன் ஆயுதப்படைகளையும் மேம்படுத்துவதில் இந்தியா, அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் உதவி வருவது தெளிவானது. இதன் மூலம் அவர்கள் பல வழிகளில் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர். மத்திய ஆசியாவின் வளங்களுக்கான நுழைவு வழியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்க தலைமையிலான இந்த அணியினர் தமிழ் மக்களின் உரிமைகளை புறம் தள்ளி சிறீலங்கா அரசுடன் இணைந்துள்ளன.

படையினரின் தாக்குதல் நிலை என்ன?

58 ஆவது டிவிசன் பூநகரிக்கு நகர்ந்துள்ளது அது தற்போது பரந்தன் சந்தியை நோக்கி நகர முற்பட்டு வருகின்றது. 57 ஆவது படையணி கிளிநொச்சிக்கு தெற்கே நிலைகொண்டுள்ளது. அது கிளிநொச்சியை அடைந்து 58 ஆவது படையணியுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றது.

இதனிடையே, 62 மற்றும் 63 ஆவது படையணிகள் கிளிநொச்சியில் இருந்து மாங்குளம் வரையிலான பகுதிகளில் மேற்குப்புறமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

59 ஆவது படையணி குமுழமுனையை கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு கடந்த 17 ஆம் நாள் தெரிவித்திருந்தது.

இதனிடையே, 53 மற்றும் 55 ஆவது படையணிகள் முகமாலை களமுனைகளில் இருந்து தென்புறமான நகர முற்பட்டு வருகின்றன.

பூநகரி கைப்பற்றப்பட்டதும், சிறிலங்கா இராணுவம் மாங்குளம், கிளிநொச்சி மற்றும் முகமாலை ஆகிய மூன்று முனைகளில் கடந்த வாரம் (15-17) பாரிய நகர்வுகளை மேற்கொண்டிருந்தது.

பூநகரி கைப்பற்றப்பட்டதனால் விடுதலைப் புலிகளின் உளவுரண் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற கணிப்பில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒரு படை நடவடிக்கையை பொறுத்த வரையில் போரிடும் தரப்பினரின் உளவுரண்; முக்கியமானது.

எனினும், மூன்று நாட்கள் நடைபெற்ற கடுமையான மோதல்களில் இராணுவம் கடும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்த மூன்று நாட்களில் 200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான படையினர் தென்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் த்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூநகரியை கைப்பற்ற கடந்த சனிக்கிழமை (15.11.08) நடைபெற்ற சமரில் 8 அதிகாரிகளும் 48 படையினரும் கொல்லப்பட்டதுடன், 311 படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மூன்று நாட்களிலும் 256 படையினர் கொல்லப்பட்டதுடன், 611 பேர் காயமடைந்துள்ளனர்.

எனினும் தினமும் இழப்பு தொடர்பான தகவல்களை வெளியிடுவதை இராணுவம் கடந்த மாதம் முதல் தவிர்த்து வருகின்றது. இது படை நடவடிக்கையை பாதிக்கும் என்பது அவர்களின் கருத்து.

நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் கடந்த 10 மாதங்களில் (ஒக்டோபர் 31 வரை) 1,269 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 9,403 பேர் காயமடைந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் எதனையும் நடத்தவில்லை. எனினும் படைத்தரப்பின் இழப்புக்கள் அதிகம்.

விடுதலைப் புலிகளின் உத்திகள் என்ன?

விடுதலைப் புலிகளின் உளவுரண்; உயர் நிலையில் உள்ளது என்பதை இந்த சம்பவங்கள் கட்டுகின்றன. முன்னைய அனுபவங்களில் இருந்து விடுதலைப் புலிகள் தமது தாக்குதல் மற்றும் தற்காப்பு திட்டங்களை வகுத்துள்ளனர். சில பகுதிகளில் இராணுவம் நகரமுடியாத முன்னனி நிலைகளை அமைத்துள்ளனர். இதுவே அவர்கள் இந்த பெரும் நடவடிக்கைக்கு எதிராக மேற்கொண்டுள்ள தயாரிப்புக்கள். இதன் மூலம் இராணுவத்தை பெரும் பிரதேசத்தில் உள்வாங்கி தாக்குவது அவர்களின் உத்தி. அவர்கள் பெரும் சமருக்கு தயாராகி வருகின்றனர். தமது படைவளங்களை பெரும் மரபு வழி சமருக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றனர். புதிய படையணிகளையும், கனரக ஆயுத பிரிவுகளையும் (பீரங்கி, மோட்டார், டாங்கி எதிர்ப்பு, விமான எதிர்ப்பு படையணிகள்) அவர்கள் பின்னிருக்கையாக கொண்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் போரியல் உத்திகள் தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு நீண்ட அனுபவம் உண்டு. இது அவர்கள் முன்னைய சமர்களில் இருந்து பெற்றுக்கொண்டது. இதன் அடிப்படையிலேயே அவர்கள் தமது வளங்களை தக்கவைத்து வருகின்றனர்.

இராணுவத்தின் தாக்குதல் உத்திகளின் குறைபாடுகள்

இராணுவம் பலமுனை அழுத்தங்களை விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்த முனைந்து வரும் போதும் மறுபுறமாக அவர்கள் நீண்ட நிலப்பரப்பில் பரவலடைந்துள்ளனர்.

58 ஆவது மற்றும் 21 ஆவது டிவிசன்கள் 82 கி.மீ நீளமான ஏ-32 நெடுஞ்சாலையை தக்கவைப்பதற்கு முயன்று வருகின்றன.

62 மற்றும் 63 ஆவது டிவிசன்கள் கிளிநொச்சி தொடக்கம் மாங்குளம் வரையிலான 50 - 60 கி.மீ நீளமான களமுனையில் நகர முற்படுகின்றன. 22, 57 மற்றும் 59 டிவிசன்கள் கொக்குத்தொடுவாய் தொடக்கம் மன்னாரின் கரையோரம் வரையிலான 115 கி.மீ நீளமான களமுனைiயும், அக்கராயன் தொடக்கம் கிளிநொச்சி வரையிலான களமுனைகளையும் தக்கவைக்க முயல்கின்றன.

வடபோர் முனையில் 53 மற்றும் கடந்த சனிக்கிழமை (15.11.08)55 ஆவது டிவிசன்கள் 12 கி.மீ நீளமான பகுதியை பாதுகாத்து வருகின்றன. வவுனியாவின் வடபுறம் 56 மற்றும் 61 ஆவது டிவிசன்கள் 20 - 25 கி.மீ நீளமான முன்னனி நிலையை கொண்டுள்ளன.

கொள்கை ரீதியாக, இராணுவம் 275 தொடக்கம் 290 கி.மீ நீளமான முன்னனி நிலைகளை கொண்டுள்ளது. இந்த பகுதிகளின் புவியியல் அமைப்பை கருதினால் இந்த களமுனைகளை நீண்டகாலம் தக்கவைப்பது சாத்தியமற்றது. விடுதலைப் புலிகள் இந்த முனையின் எந்த புள்ளியிலும் இலகுவான ஊடறுப்புக்களை மேற்கொள்வதன் மூலம் இராணுவத்தை பொறிக்குள் சிக்க வைக்க முடியும்.

மேலும் தற்போதைய நடவடிக்கையில் இராணுவம் அதிகளவான படையினரை இழந்து வருகின்றது. கடந்த 10 மாதங்களில் 1269 பேர் கொல்லப்டப்டதுடன், 9403 பேர் காயமடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ள போதும் இந்த நடவடிக்கையின் மொத்த இழப்பு மிக அதிகம். இந்த காலப்பகுதியில் 25,000 படையினர் தப்பியோடியுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவித்துள்ளது.

அரசு இழப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் போது குறைத்தே வெளியிடுவதுண்டு. அவற்றில் காணாமல் போவோர், படையில் இருந்து தப்பியோடியவர்கள் தெரிவிக்கப்படுவதில்லை. இதுவும் முன்னணி நிலைகளை தக்கவைப்பதில் இராணுவத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றது.

படை நடவடிக்கைக்கு பின்னால் உள்ள அரசியல் அனுகூலங்கள்

விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் அதுவல்ல. அரசுக்கு பல வேறு நோக்கங்கள் உள்ளன. வன்னியில் பெரும் நிலப்பரப்பை கைப்பற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் தயக கோட்பாட்டுக்கான புவியியல் அமைப்பை சிதைத்து விடுவது ஒரு திட்டம்.

வன்னியில் விடுதலைப் புலிகளின் படை கட்டமைப்புக்கள், நிர்வாக கட்டமைப்புக்கள் என்பன உண்டு அதனை தக்கவைப்பதற்காக விடுதலைப் புலிகள் படை நடவடிக்கைளை மூர்க்கமாக எதிர்ப்பார்கள்.

எனவே, வலிந்த தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகளை களமுனைகளுக்கு இழுத்து அவர்களின் பலத்தை அழித்து விடலாம் என்பது இரண்டதவது உத்தி.

எனவே தான் அரசு அதிக படை வளத்தையும், சூட்டு வலுவையும் பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளின் படைபலத்தை அழித்து தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு இராணுவ ரீதியில் நிரந்தர தீர்வை கண்டுவிட அரசு முயல்கின்றது.

மேலும் இந்த போர் வெற்றிகளின் மூலம் தென்னிலங்கையில் தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவும் அரசு முயல்கின்றது. அவை தான் தற்போதைய படை நடவடிக்கைகளின் பின்னால் ஒளிந்துள்ள திட்டங்கள்.

படை வளம், ஆயுத வளம், பொருளாதார வளம் மற்றும் வெளிநாட்டு உதவிகள் என்பவற்றால் அரசு வலுவாக உள்ளது.

எனவே படை வலுச்சமநிலை அரசுக்கு சார்பாகவே உள்ளது. ஈழப்பிரச்சனைக்கு எதிரான இந்த இணைந்த திட்டங்களை முறியடிப்பதற்கு உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும். இதுவே தற்போது கொதி நிலையில் உள்ள சம்பவம். களமுனைகளுக்கு அப்பால் இது மெல்ல மெல்ல வலுப்பெற்றும் வருகின்றது.

தமிழ் நாட்டின் எழுச்சி முக்கியமானது, தமிழ் மக்களின் துணிவும், அர்ப்பணிப்பும் தமிழ் மக்களின் உரிமையை பெறுவதற்கான சக்திவாய்ந்த ஆயுதம். அதுவே விடுதலைப் புலிகளின் வலிந்த சமருக்கு முன்னால் உள்ள முக்கிய காரணியுமாகும்.

இந்த கட்டுரை சிறிலங்கா கார்டியன் இணையத்தளத்தில் வெளிவந்த ஆங்கில கட்டுரையின் தமிழ் வடிவமாகும்.

குடாநாட்டை காவு கொண்டது இயற்கை அனர்த்தம் மழை, வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

சுழல் காற்றும் கோரதாண்டவம்; பெருமளவு சொத்துகள் நாசம்

தொடர்ந்து இரு தினங்களாக கொட்டிய அடைமழையாலும் சுழல் காற்றாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பேரழிவு ஏற்பட்டிருப்பதுடன், பல்லாயிரக்கணக்கான கரையோரப் பகுதி மக்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர்.

வெள்ளத்தால் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் நாசமடைந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்வு முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

வட பிராந்திய கரையோரம் மையம் கொண்டிருந்த தாழமுக்கம் இலங்கைக்கப்பால் நகர்ந்து சென்று விடுமென வானிலை ஆராய்ச்சித் திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது. இலங்கைக்கு சமீபமாக மையம் கொண்டிருந்த தாழமுக்கமே சிறிய புயலாக உருவெடுத்ததாகத் திணைக்களம் கூறியது. ஆயினும் இந்தக் காலநிலை மாற்றத்தால் வடபகுதி தொடர்ந்து பாதிக்கப்படும் நிலைமை இருப்பதாகவும் திணைக்கள அறிக்கைகள் தெரிவித்தன.

யாழ். மாவட்டத்தில் கடந்த இரு தினங்கள் தொடர்ச்சியாக பெய்ந்த பெருமழை, சுழல் காற்று காரணமாக பலகோடி ரூபா பெறுமதியான கட்டிடங்கள், சொத்துகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பாரிய மரங்கள் வீழ்ந்தும் அழிந்துள்ளன. சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மரங்கள் சுழல் காற்றினால் முறித்து வீசப்பட்டும் வேரோடு சாய்ந்துமுள்ளன.

குடாநாட்டின் எந்தப் பகுதியும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. சகல பெருந் தெருக்களிலும் பாரிய மரங்கள் வீழ்ந்து குடாநாட்டுக்கான தரைப்பாதைகள் வாகனங்கள் செல்ல முடியாதளவுக்கு போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது.

நாவாந்துறை, பண்ணை, குருநகர், பாசையூர், கொழும்புத்துறை, பருத்தித்துறை, கச்சாய், மாதகல் பகுதிகளில், கடல் அலைகள் வீறு கொண்டு கரையோரப்பகுதிகள் எங்கும் கடல் நீர் புகுந்துள்ளது.

கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின் யாழ். குடா நாட்டின் வரலாற்றில் இரண்டு நாள் மழையினாலும் கோர சுழல் காற்றினாலும் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் நான்கு அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டதால் ஹட்டன் நஷனல் வங்கிக் கிளை, யாழ்ப்பாணம் பஸ் நிலைய கடைகள் ஆகியவற்றுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி உட்பட தாழ் நிலங்களிலுள்ள சகல பாடசாலைகளும் நீரில் மூழ்கியுள்ளது. நகரின் பாரிய வடிகால்களை மேவி நீர் பாய்ந்தமையால் வடிகாலை அண்டிய பகுதி வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளன.

யாழ்ப்பாணம் கற்குளம் கிராமத்தில் ஆறு அடி உயரத்துக்கு வெள்ளம் நிற்பதாகக் காண முடிகின்றது.

இடம்பெயர்ந்த மக்கள் ஞஸ்மானியாகக் கல்லூரி, புதுப்பள்ளிவாசல், கொட்டடி நமசிவாயம் வித்தியாலயம், லைடன்கட்டிடம், கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கம், நாவாந்துறை சென்.ஜேம்ஸ் ஆலயம் உட்பட அனைத்துப் பாடசாலைகள், பொது மண்டபங்கள் ஆலயங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இரு நாள் மழை வெள்ளம் இப்படியான அனர்த்தத்தை ஏற்படுத்துமென எவரும் அறிந்திராத நிலையில் இரவோடிரவாக உடுத்த உடுப்புடன் உயிர்ப் பாதுகாப்புத் தேடி ஓடினர்.

யாழ்ப்பாணம் பழைய கோட்டைக்கு அருகில் அமைந்த இராணுவ முகாமுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் இரவோடிரவாக அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

திருநெல்வேலி வானிலை ஆய்வு மையம் தகவல் தருகையில்;

இரு நாட்களாக 320 மில்லி மீற்றர் மழை பெய்திருப்பதாகவும் இன்று காலநிலை சீராகும் எனவும் கூறினர். வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கமே குடாநாட்டில் அதிக மழை விழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினர். நேற்று மாலை குடாநாட்டில் காற்றின் வேகம் தணிந்ததுடன் மழையும் ஓய்ந்திருந்தது.

நேற்று குடாநாட்டில் எந்தவொரு வர்த்தக நிறுவனமும் திறக்கப்படவில்லை. சந்தைகள் கூடவில்லை. பாடசாலைகள் இயங்கவில்லை, அலுவலகங்களில் எந்த அதிகாரியோ, ஊழியர்களோ வேலைக்கு வராமையால் செயற்பாடு இழந்து காணப்பட்டது. வங்கிகள் எதுவும் திறக்கப்படவில்லை. உணவுச்சாலைகள் திறக்கப்படாமையால் பேக்கறிகள் முன் நீண்ட கியூவரிசையில் பாண்வாங்குவதற்காக முண்டியடித்தனர். யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் ஒரு சில வைத்தியர்கள் கடமையில் இருந்த போதும் மக்கள் குறைவாகவே சிகிச்சை பெறவந்தனர். யாழ். மாவட்டத்திலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதால் வீடுகள், ஒழுங்கைகள், பிரதான வீதிகள் எல்லாம் இரண்டடி வெள்ளம் தேங்கியுள்ளது.

சகல பிரதேச செயலர் பிரிவுகளிலும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் அகதிகளுக்கு மூன்று நாளைக்கு சமைத்த உணவை வழங்குமாறு சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்க அதிபரை வேண்டியுள்ளார். மேலும் சொத்து சேத விபரங்களை உடனடியாக மதிப்பீடு செய்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டியுள்ளார்.

குடாநாட்டில் ஐயாயிரம் ஹெக்டர் நெல் வயல்களில் வெள்ளம் மூடியுள்ளது. பயிர் அழுகி அழியும் அபாயம் உருவாகியுள்ளது. வெங்காயம், புகையிலை, மரக்கறி செய்கையும் சகல பகுதிகளிலும் நாசமாகியுள்ளன. வாழைத்தோட்டங்கள் எண்பது சதவிகிதமாகவும் வீடுகளில் குலைதள்ளிய பல்லாயிரம் வாழை மரங்களும் நாசமாகியுள்ளன. கடற்றொழிலாளர்களின் வள்ளங்கள் கடல் நீரால் அடித்துத் தள்ளப்பட்டுள்ளன. நேற்றுக் காலை கடற்றொழிலாளர் கொட்டும் மழையிலும் இவ்வள்ளங்களை மீண்டும் கரைக்கு கொண்டு வந்தனர்.

மழை, சுழல் காற்று அனர்த்தங்களால் மின்கம்பிகள் உடைந்தாலும் மின்கம்பங்கள் எல்லா வீதிகளிலும் அறுந்து தொங்குவதால் சேதமடைந்த மின்கம்பிகளுக்கு மாற்றீடு செய்வதிலும் சில தினங்கள் எடுக்குமென்பதால் குடாநாட்டுக் கான் மின் விநியோகம் சீர்குலைந்துள்ளது.

குடாநாட்டுக்கான சி.டி.எம்.ஏ. தொலைபேசி முற்றாக செயலிழந்த நிலையில் கேபிள் தொலைபேசிகளும் மழை சுழற் காற்று அனர்த்தங்களால் பரவலாக செயலிழந்துள்ளன.

இயற்கை அனர்த்தங்களினால் குடாநாடு முழுவதும் சோபையிழந்துள்ளதுடன், வாழ்க்கையும் சீர்குலைந்து குடாநாட்டில் நேரம் தவறாது நடைபெறும் ஆலயங்களில் நித்திய பூஜைகள் நேற்று நடைபெறவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் அன்றாடம் பொருட்களை வாங்கி உணவு தயாரிக்கும் குடும்பங்கள் பொருட்களை வாங்க முடியாமல் பட்டினியாக நேற்றுக் காலம் கடத்தியமை வேதனையைத் தருவதாக அமைந்திருந்தது.

வட பிராந்திய போக்குவரத்துச் சபை பஸ்கள் காலையில் ஒருசில சேவைகளை நடத்திய போதும் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில பெருவெள்ளம் நிற்பதால் பஸ்களைத் தரித்து நிறுத்த முடியாமையாலும் வீதிகளில் மரங்கள் வீழ்ந்து வீதித் தடை இருப்பதாலும் சேவையை நடத்த முடியாதென நிறுத்தினர்.துரதிர்ஷ்டவசமாக கிராமப் புறங்களில் இருந்து நகரப்பாடசாலைகளுக்கு வந்த மாணவர்கள் பஸ் சேவை இன்மையால் எட்டு மைல் தூரத்தை நடந்தே சென்றனர். செய்தி கிடைத்த நேரத்தில் குடாநாட்டில் மழை ஓய்ந்து சில இடங்களில் வெள்ளம் வடிந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மும்பை ஹோட்டலில் மேலும் 4 பயங்கரவாதிகள்!








மும்பை தாஜ் நட்சத்திர விடுதியில் ஊடுறுவியுள்ள பயங்கரவாதிகளுடன் காவல் துறையினரும், தேச பாதுகாப்புப் படையினரும் நடத்திவரும் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், இன்னமும் 4 அல்லது 5 பயங்கரவாதிகள் விடுதிக்குள் மறைந்திருக்கக்கூடும் என்று ராணுவ மேஜர் ஆர்.கே. ஹூடா தெரிவித்துள்ளார்.

தாஜில் தங்கியிருந்த பலர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டப் பின்னரும், இன்னமும் 40 முதல் 50 விருந்தினர்கள் இருக்கலாம் என்றும், அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார். இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அடங்குவர்.

இதற்கிடையே நண்பகல்வாக்கில் விடுதிக்குள் இருந்து 2 உடல்கள் வெளியே கொண்டுவரப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், தாஜ் ஹோட்டல் தாக்குதலில் சுமார் 10 முதல் 12 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவர்களில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

எஞ்சிய பயங்கரவாதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் பயங்கரவாதிகள் கொல்லப்படுவார்கள் என்றும் பாட்டீல் கூறினார்.

ஒபராய் பகுதியை கடற்படையினரும், ராணுவத்தினரும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாஜ் விடுதிக்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Wednesday, November 26, 2008

அனைத்துலகமே எதிர்பார்க்கும் மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் சொல்லப்போவது என்ன?

அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது.

மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை இடம்பெறப்போகும் இந்த உரையில் தலைவர் பிரபாகரன் என்ன சொல்லப் போகின்றார் என்பதை தாயகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி, தமிழக தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் அனைத்துலக சமூகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.

தாயக மண் விடுதலைக்காக தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள் அனைவரையும் போற்றும் மாவீரர் நாள் உரையை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை நிகழ்த்தவுள்ளார்.

தாயக மண் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரவரலாறான மாவீரர்கள் அனைவரையும் போற்றும் மாவீரர் நாள் தமிழீழ மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது.

மாவீரர்கள் அனைவரையும் போற்றும் இன்றைய தூய நாளில் மாவீரர் துயிலும் இல்லங்கள்-மாதிரித் துயிலும் இல்லங்கள்-மாவீரர் நினைவு இல்லங்கள்-ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அதேவேளை, மக்களின் வதிவிடங்களிலும் மாவீரர்கள் போற்றப்படும் நிகழ்வு கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நாளில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள்

தாயக மற்றும் தமிழக நேரம் பிற்பகல் 5:40 நிமிடத்துக்கும்

அவுஸ்திரேலிய சிட்னி, மெல்பேர்ண் நேரம் இரவு 11:10 நிமிடத்துக்கும்

நியூசிலாந்து நேரம் அதிகாலை 2:10 நிமிடத்துக்கும்

கனடாவின் ரொறன்ரோ நேரம் காலை 7:10 நிமிடத்துக்கும்

ஐரோப்பிய நேரம் பிற்பகல் 1:10 நிமிடத்துக்கும்

பிரித்தானிய நேரம் பிற்பகல் 12:10 நிமிடத்துக்கும்

சிங்கப்பூர், மலேசிய நேரம் இரவு 8:10 நிமிடத்துக்கும்

மாவீரர் நாள் உரையை நிகழ்த்தவுள்ளார்.

தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரையைத் தொடர்ந்து மாவீரர் நினைவொலி 6:05 நிமிடத்துக்கு எழுப்பப்படும்.

தொடர்ந்து 6:06 நிமிடத்துக்கு அகவணக்கம் இடம்பெறும்.

6:07 நிமிடத்துக்கு முதன்மைச்சுடரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஏற்ற, சமநேரத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களின் முதன்மைச் சுடர்களை தளபதிகள் ஏற்ற, மாதிரி மாவீரர் துயிலும் இல்லங்கள்-நினைவு இல்லங்கள்-ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இதில் உலகத் தமிழினம் முழுமையாக கலந்து கொள்ளவுள்ளது.

தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையினை தாயகத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் புலிகளின் குரல் வானொலியின் ஊடாகவும் அதன் இணையத்தளத்தின் ஊடாகவும் புலம்பெயர் நாடுகளில் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து தமிழ் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவற்றின் இணையத்தளங்களின் ஊடாகவும் உலகம் வாழ் தமிழர்கள் நேரடியாக கேட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இணையத்தளங்கள் வருமாறு:

புலிகளின் குரல் வானொலி - www.pulikalinkural.com

லண்டன் ஐபிசி வானொலி - www.ibctamil.co.uk

கனடிய தமிழ் வானொலி - www.ctr24.com

ஐரோப்பிய தமிழ் வானொலி - www.tamilfm.eu

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - www.atbc.net.au

ரிவிஐ - www.tviondemand.com

ஐரோப்பிய தொலைக்காட்சி - www.eurotvlive.com

வளரி தொலைக்காட்சி - www.valary.tv

வட போர்முனையில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கு நினைவு மண்டபம் திறப்பு



வட போர்முனையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவான மண்டபம் முரசுமோட்டையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

போராளி யாழவன் தலைமையில் இன்று புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை வட போர்முனை நிர்வாகப் பொறுப்பாளர் வேந்தன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை வட போர்முனை பொறுப்பாளர்களில் ஒருவரான மகேஸ் ஏற்றினார்.

மாவீரர்களின் பொதுத் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை முருகானந்தா மகா வித்தியாலய முதல்வர் திருமதி இதய சிவதாஸ் ஏற்றினார்.

மலர்மாலையினை மாவீரனின் உடன்பிறப்பு தயா சூட்டினார்.

தொடர்ந்து, மண்டபத்தில் 200-க்கும் அதிகமான மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலர்மாலைகள் சூட்டப்படடன.

இதேவேளை, எல்லைப் படை மாவீரர்களின் நினைவாலயம் வட்டக்கச்சி இராமநாதபுரம் கிழக்கில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் இந்த நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான தேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் செம்பியன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியை கல்மடு இராமநாதபுரம் வட்டப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.

எல்லைப்படை மாவீரர்களின் நினைவாலயத்தினை ஓய்வுபெற்ற முதல்வர் தணிகையன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

மாவீரர்களின் பொதுத் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை ஏற்றி, மலர்மாலையினை இராமநாதபுரம் கிழக்கு பாடசாலை முதல்வர் புண்ணியமூர்த்தி சூட்டினார்.

நிகழ்வில் கருத்துரையினை தணிகையன் ஆற்றினார்.

அதேவேளை, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பார்த்தீபன் தலைமையில் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பொதுச்சுடரினை முள்ளியவளை கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உமைநேசன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லப் பொறுப்பாளர் சைமன் ஏற்றினார்.

நிகழ்வில் சிறப்புரையினை வற்றாப்பளை வட்டப் பொறுப்பாளர் பரன் ஏற்றினார்.

இதேவேளை, மணலாறு கட்டளை பணியகப் போராளிகளால் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைத்து மாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பொதுச்சுடரினை உமைநேசன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை மணலாறு கட்டளைப் பணியகத் தளபதி கேணல் ஜெயம் ஏற்றினார்.

மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி, மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

நிகழ்வில் உரையினை முள்ளியவளை நுண்கலைக் கல்லூரி முதல்வர் திருமதி மணிமொழி கிருபாகரன் நிகழ்த்தினார்.

அதேவேளை, உடையார்கட்டு கோட்டத்தில் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவு இடத்தில் நிதித்துறையின் சேரன் நிறுவனத்தைச் சேர்ந்த குயிலின்பன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்சுடரினை சேரன் வாணிப நிறைவேற்றுப் பணிப்பாளர் இளம்பருதி ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை உடையார்கட்டு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஞானவேல் ஏற்றினார்.

தொடர்ந்து, மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, புதுக்குடியிருப்பில் சிறப்பாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபத்தில் நிதித்துறையின் கணக்கு ஆய்வுப் பொறுப்பாளர் அறவாணன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரினை மருத்துவ பிரிவின் மருத்துவப் போராளி தேவா ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பருதி ஏற்றினார்.

முதன்மை மாவீரர்களின் திருவுருவப்டங்களுக்கு சுடரேற்றி மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

அதேவேளை, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள திருகோணமலை மாவட்ட தொடர்பகத்தில் திருகோணமலை மாவட்ட மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் தென்னவன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் பொதுச்சுடரினை மாவீரரின் தந்தை சிறீதரன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை திருகோணமலை மாவட்ட தளபதி வசந்தன் ஏற்றினார்.

தொடர்ந்து, மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு பெற்றோர்கள், போராளிகளால் சுடரேற்றி, மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

இதேவேளை, புதுக்குடியிருப்பில் சோதியா படையணி மாவீரர்களின் திருவுருவப்படம் வைக்கப்பட்ட மாவீரர் மண்டபத்தில் போராளி இசைஅறிவு தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரினை புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை சோதியா படையணி தளபதிகளில் ஒருவரான மதுரம் ஏற்றினார்.

தொடர்ந்து, மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடரேற்றி, மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

நிகழ்வில் எல்லைப்படை பொறுப்பாளர் காளித் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதேவேளை, புதுக்குடியிருப்பில் காவல்துறை பணிமனை, நீதிமன்றம், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனைகளில் மாவீரர் எழுச்சி நாள் தொடக்க நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இனியவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகப் பொறுப்பாளர் திருக்குமரன் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன் ஏற்றினார்.

மாவீரர்களின் பொதுத் திருவுருவப்படத்திற்கு எழுமதி கரிகாலன் சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார்.

இதேவேளை, ரீ.ஆர். ரெக் நிறுவனத்தில் மாணவர் கதிர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை ரீ.ஆர். ரெக் முதல்வர் பிரதாபன் ஏற்றினார்.

மாவீரர்களின் பொதுத்திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்மாலைகள் சூட்டப்பட்டன.

நிகழ்வில் உரையினை விரிவுரையாளர் கருணாகரன் நிகழ்த்தினார்.

அதேவேளை, புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வட்டத்தில் மாவீரர் மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரணைப்பாலை வட்ட மாவீரர் செயற்பாட்டுக்குழுச் செயாலளர் தேன்மொழி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

முன்னதாக செந்தூரன் சிலையடியில் இருந்து மாவீரர் பெற்றோர் அணியிசை வகுப்புடன் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுச்சுடரினை மாவீரரின் தந்தை புஸ்பராசா ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்றினார்.

மாவீரர் மண்டபத்தினை புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்ளார் சி.இளம்பருதி நாடா வெட்டி திறந்து வைத்தார்.

மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு மாவீரர்களின் பெற்றோர்களால் சுடரேற்றி மலர்மாலைகள் சூட்டப்பட்டுள்ளன.

நிகழ்வில் மாணவர்களின் மாவீரர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கருத்துரைகளை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம், புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி ஆகியோர் நிகழ்த்தினர்.

மட்டக்களப்பில் முடக்கப்பட்டு வரும் "அப்பாச்சி குறூப்"





மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பான செய்திகள் சகல ஊடகங்களிலும் வெளிந்திருந்தன. ஆனால் இந்தக்கொலைபற்றிய திடுக்கிடும் தகவலொன்றை இப்பொழுது தருகின்றோம்.


மட்டக்களப்பு நகருக்குள் ஊடுருவியுள்ள சுமார் நுற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவினரை தேடியழிக்கும் முகமாக கடந்த 4 மாதங்களுக்கு முன் மட்டக்களப்பிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலராலும், புளொட் உறுப்பினர்கள் சிலரைக் கொண்டும் ஒரு மோட்டார் படையணி அமைக்கப்பட்டது. கறுப்பு நிற 6 அப்பாச்சி மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட இந்தப் படையணியில் இருவர் வீதமாக 12 பேர் அங்கம் வகித்தனர். நன்கு பயிற்றப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்தவர்களும் இதெற்கென தயார்படுத்தப்பட்ட புளொட் உறுப்பினர்கள் சிலரும் இதில் உள்ளடங்கியதாக இப்படையணி உருவாக்கப்பட்டது. இப்படையணிக்கு மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புளொட் அலுவலகத்திலிருந்த புளொட் ராஜன் என்பவர் பொறுப்பாக இருந்தார்.

இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால் இப்படையணிக்குத் தேவையான சகல பராமரிப்புச் செலவுகளையும். ர்p.எம்.வி.பி யினரே ஏற்றுக்கொண்டிருந்தனர். பிள்ளையானின் ர்p.எம்.வி.பியினருக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் சுமார் இரண்டரைக்கோடி ரூபா நிதியிலிருந்து ஒருதொகைப்பணம் இப்படையணிக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்ததாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர். இந்த மோட்டார் சைக்கிள் படையணியான "அப்பாச்சி குறூப்புக்கு" பொறுப்பாக இருந்த புளொட் ராஜன் வந்தாறு மூலை செங்கலடி பிரதேசத்தில் வைத்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்குப்பின்னர் இப்படையணி சிலகாலம் முடங்கியிருந்த பின்னர் மீண்டும் தமது கைவரிசையை காட்ட ஆரம்பித்தது.

மட்டக்களப்பு நகர வீதிகளில் மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை 7 மணிக்குப் பின்னர் வலம்வரும் இவர்கள் வீதிகளில் நடமாடும் இளைஞர்களை விசாரணைசெய்து துன்புறுத்துவதுடன் மக்கள் முன்னிலையில் வைத்து கடத்திக்கொண்டு செல்வதை இந்த அப்பாச்சி குறூப் வழக்கமாகக் கொண்டிருந்தது. இதனால் மட்டக்களப்பு மக்கள் அப்பாச்சி குறூப் என்றால் பயந்து நடுங்கினர். கறுப்புநிற தலைக்கவசத்துடனும், கரிநிற உடைகளுடன் அப்பாச்சி மோட்டார்சைக்கிள்களில் தொடராக இவர்கள் வலம்வரும்போது. யாராவது குறுக்கே சென்றால் அவர் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளாக்கப்படுவது வழமையாக நடைபெற்றுவந்த ஒரு விடையம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பட்டிருப்புப்; பகுதியில் இந்த குறூப்பைச்சேர்ச்த இருவர் மோட்டார் சைக்கிளுடன் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் கடத்திச்செல்லப்பட்டிருந்தனர்.

கடந்த மாதம் சிந்தாண்டிப் பகுதியில் இவர்கள் கடத்தல் ஒன்றுக்காக வேகமாக சென்றபொழுது இருவர் மரத்துடன் மோதுண்டனர். ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பொலநறுவைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

பின்னர் இன்று களுவாஞ்சிக்குடி எருவில் கோடைமேடு பகுதியில் குளக்கட்டு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட கிளோமோர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தற்பொழுது இந்த அப்பாச்சி குறூப்பில் 6 பேரே மீதமாக உள்ளதாகவும் இக்குழுவுக்கு மேலதிகமாக ஆட்களைச்சேர்ப்பதற்கு கருணாகுழுவைச்சேர்ந்தவர்கள் இணைக்கப்படவுள்ளதாகவும் முக்கிய தகவலொன்று தெரிவிக்கின்றது.

வன்னியில் அடைமழை: இடம்பெயர்ந்தோர் பாரிய அவலம்



வன்னிப்பெரு நிலப்பரப்பில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் கடும் காற்றினால் பெரும் அழிவுகளும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதில் இருவர் உயிரிழந்தும் உள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் குளங்கள் நிரம்பி வழிகின்ற நிலையில் மக்கள் பெரும் அவலங்களை சந்தித்து வருகின்றனர்.

வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.

உடையார்கட்டுக்குளம்-விசுவமடுக்குளம் என்பன நீர் நிரம்பிய நிலையில் அவற்றின் கீழ் வாழும்மக்கள் பாதுகாப்பை தேடிக்கொள்ளுமாறும் இயன்ற வரை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.



மழையுடன் கடும் காற்று வீசி வருவதால் மரங்கள் வீழ்ந்துள்ளன. வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

இந்நிலையில் மக்களின் பாதிப்பு தொடர்பில் தமிழீழ காவல்துறை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்பன துரிதமாக உதவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் புதுக்குடியிருப்பு கல்வி அலுவலகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

தொடர் மழையினால் மழை வெள்ளம் அலுவலகத்தினுள் புகுந்ததன் காரணமாக மாணவர்களின் பாடப் புத்தகங்கள் நனைந்துள்ளன. மேலும் கல்வி உபகரணங்கள் பாதிப்படைந்துள்ளன.



கட்டட நெருக்கடிக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு கல்வி அலுவலகம் மழையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக புதுக்குடியிருப்பு கோட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பின் இரணப்பாலை-ஆனந்தபுரம்-கைவேலி-வள்ளிபுனம்- உடையார்கட்டு-மல்லிகைத்தீவு உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

புதுக்குடியிருப்பு நகரினுள் தொடர் வெள்ளம் பாய்ந்ததன் காரணமாக ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதுக்குடியிருப்பு சிறீ சுப்பிரமணியா வித்தியாசாலை வெள்ளத்தில மூழ்கிக் காணப்பட்டுள்ளது.

நகரில் உள்ள பத்துக்கும் அதிகமான வணிக நிலையங்கள் பாதிப்படைந்துள்ளன.

இதில் ஐந்துக்கும் அதிகமான தொழில் நிறுவனக் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

தொடர் மழை காரணமாக புதுக்குடியிருப்பில் பாடசாலைகள் இயங்கவில்லை.

வீதிகளின் குறுக்காக நீர் வடிந்தோடுவதால் புதுக்குடியிருப்பின் சில வீதிகளால் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, விசுவமடு மேற்கு அதிசய விநாயகர் கோவிலடி 10 ஆம் கட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் காரணமாக 500-க்கும் அதிகமான குடும்பங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளப் பாதிப்பு அதிகமாகவுள்ளது. சேதம் பற்றி விபரங்கள் திரட்டப்படுகின்றன.

இதேவேளை, விசுவமடு றெட்பானா பகுதியில் இடம்பெயர்ந்து இடைக்கால வீட்டில் தங்கியிருந்த இளம் பெண்ணொருவர் இன்று புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

விஜயகுமார் குணவதி (வயது 23) எனும் இளம் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார். இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, உடையார்கட்டு வடக்கில் வயல் பாக்கச் சென்ற ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சூசைப்பிள்ளை மரியதாஸ் (வயது 52) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

54வது அகவையில் வாழ்த்து


அண்ணன் என்று சொல்லடா
தமிழ் மன்னன் என்று சொல்லடா
பிரபாகரன் எனும்
தமிழ் வீரனை..!

அவன் பேச்சில் ஒரு மூச்சடா
மூச்சில் கூட தமிழடா
தமிழ் மானம் காக்கும் வீரம்
அவன் தோள்களில்..!

படை நடத்தம் சிங்களம்
பதறிப் போகும் பாரடா
அண்ணன் படையின் வீரம்
மாழ்வதில்லைப் பாரடா..!

சண்டைக்களத்தில் அவன் வாழ்வடா
சாவுக்கும் அஞ்சாத வீரன்டா
தமிழ் மானம் அவன் உயிரடா
சயனைட் காவும் தோழனடா அவன்..!

அண்ணன் தலைமையில்
வேங்கைகள் பாரடா..
தமிழீழத்தின் மலர்வடா
வெறும் கைகளில் இல்லையடா
நீயும் நில்லடா
அண்ணன் வழியில் கரங்கோர்த்தே..!

வாழ்த்தடா வாழ்த்து
அண்ணனை வாழ்த்து
54வது அகவையில் வாழ்த்து
வாழ்த்தும் போதே
வீரம் வரும்...
விழித்தெழுந்து நடவடா
அண்ணன் பாதையில்
தாய் மண்ணை மீட்க..!


நன்றி யாழ் இணையம்.

Tuesday, November 25, 2008

வீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு


யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை. நீண்டகால போரினால் களைப்படைந்த சராசரி யாழ்ப்பாண மக்கள், சமாதானத்திற்காக ஏங்குகின்றனர், என்ற யதார்த்தத்தை பதிவு செய்த தொலைக்காட்சி வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு யுத்தம் காரணமாக இலங்கையின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவாக காட்சி தருகின்றது. போர்ச்சூழல் உருவாக்கிய பொருளாதாரக் கஷ்டங்கள், மரணபயத்துடன் அஞ்சி அஞ்சி வாழும் நிலைமை, போன்றவற்றை சாதாரண மக்களை பேட்டி கண்டு,அவர்களின் பிரச்சினையை உலகம் பார்க்கும் வகை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. பெரும்பாலான ஊடகங்கள் போரைப் பற்றி மட்டுமே அறிவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சாதாரண மக்களின் அவலங்களை தேடிச் சென்று படம் பிடித்த, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.


பெல்ஜியம் மீது தாக்குதல்? - வீடியோ பயங்கரவாதம்


பெல்ஜியத்தின் பிரதான செய்தி நிலையங்களின் ( VRT, VTM) முகவரிகளுக்கு, ஒரு டி.வி.டி. தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் வீடியோ செய்தி அது. நான்கு நிமிடங்களே ஓடும் அந்த வீடியோ படத்தில், அல் கைதா பாணியில் முகமூடியணிந்த மூன்று நபர்கள், சைகைகள் மூலம் சொல்ல வரும் செய்தி, நெதர்லாந்து மொழியில் (பெல்ஜியத்தின் தேசிய மொழிகளில் ஒன்று) உப தலைப்புகளாக காட்டப்படுகின்றது. செய்தி நிலையங்கள், ஆரம்பத்தில் இந்த வீடியோ குறித்து கவனமெடுக்காவிட்டாலும், உடனடியாக காவல் துறையிடம் கையளித்து விட்டன. இன்று நெதர்லாந்து, பெல்ஜிய தொலைக்காட்சி சேவைகள் அந்த வீடியோவை ஒளிபரப்பி விட்டதாலும், ஏற்கனவே நெதர்லாந்து மொழி இணையங்களில் உலாவுவதாலும், தமிழ் பதிவுலக வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.



வீடியோ செய்தியின் சுருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பு

அந்த வீடியோ மடல், ஏற்கனவே நியூ யார்க், மாட்ரிட், லண்டன், ஆகிய நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை மேற்கோள் காட்டி ஆரம்பமாகின்றது: "பெல்ஜிய மக்கள் சரித்திரத்தில் இருந்து பாடம் படிக்க வேண்டும். நீங்கள் வாழ்வதற்காக அவா கொண்டிருப்பதைப் போல, நாம் சாவதற்காக அவா கொண்டுள்ளோம். எமது பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்யும் உங்கள் மீது நாம் இரக்கம் கொள்ள மாட்டோம்."

அண்மையில் பெல்ஜிய அரசு, ஆப்கானிஸ்தானுக்கு படைகளையும், F-16 யுத்த விமானங்களையும் அனுப்பி வைத்தமை குறிப்பிடப்படுகின்றது: "உங்களது அரசாங்கம் சொந்த நலன் கருதி எடுக்கும் முடிவுகளால், உங்கள் இரத்தமும் ஆறாக ஓடும் என்பதை மறக்க வேண்டாம். இதிலிருந்து தப்ப ஒரேவழி, பெல்ஜிய அரசு தனது படைகளை, ஆப்கானிஸ்தானில் இருந்தும், பிற முஸ்லீம் நாடுகளில் இருந்தும் திருப்பி அழைக்குமாறு, நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். உங்கள் அரசின் செயல்களுக்கு நீங்களும் பொறுப்பு."

பெல்ஜிய இணையத்தளமான "Indymedia België" க்கு, கடந்த வியாழன் இந்த டி.வி.டி. கிடைத்த போதும், அதன் ஆசிரியர் பீடம் அனுப்பியவர்களின் நோக்கம் தெரியாததால் பிரசுரிக்க மறுத்து விட்டது. யாரும் இது போன்ற வீடியோ தயாரிக்கலாம் என்ற நிலையில், சில மோசடிக்காரரின் ஏமாற்று வேலையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. உண்மையான பயங்கரவாதிகள் எப்போதாவது முன்கூட்டியே அறிவித்து விட்டு குண்டுவைப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

குஞ்சுப்பரந்தன் முறியடிப்புத் தாக்குதல் தொடர்பான புகைப்படத் தொகுப்பு


கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்காப் படையினரால் குஞ்சுப் பரந்தன் நோக்கிய மும்முனை முன்னகர்வு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 43 அதிகமான படையினர் கொல்லப்பட்டும் மேலும் 70 அதிகமான படையினர் காயமடைந்திருந்தனர். முறியடிப்புத் தாக்குதலின் பின்னர் அங்கு நடத்த தேடுதல் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டப்பட்ட படையினரின் சடலங்களையும் மற்றும் படைக்கருவிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருந்தனர். அக்காட்சிகளின் புகைப்படத் தொகுப்பு வருமாறு:-

உருத்திரபுர மோதலில் உயிரிழந்த படையினரின் உடலங்கள்


உருத்திரபுரத்தில் மோதலின் பின்னர் தேடுதல் நடத்தும் போராளிகள்


குஞ்சுப்பரந்தன் மோதல் கொல்லப்பட்ட படையினரின் ஒரு தொகுதி உடலங்கள்


உருத்திரபுரம் - குஞ்சுப்பரந்தன் மோதல்களில் கைப்பற்ற படைக்கருவிகள்


குஞ்சுப்பரந்தன் மோதலில் 50 கலிபர் தாக்குதல் நடத்தும் போராளி


மோதலின் முன்னரங்க நிலையில் பி.கே எல்.எம்.ஜி சுடுகலனுடன் போராளி


முறியடிப்புத் தாக்குதலின் பின்னர் வீதியால் செல்லும் போராளி அணிகள்


கைப்பற்றப்பட்ட ஏகே சுடுகலனுக்குரிய நடுத்தர ரவைகள் மற்றும இணைப்பிகள், ரவைக்கூடுகள்


கைப்பற்றப்பட்ட ஏகே-2 வகைச் சுடுகலன்கள், ஆர்.பி.ஜி உந்துகணைகள்

Monday, November 24, 2008

தமிழீழத் தேசிய தலைவருக்கு உங்களின் குரலிலேயே வாழ்த்து தெரிவிக்க

தாயகம் எங்கும் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள் நாளை தொடங்குகிறது



தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர்களுக்கான எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்று தொடங்குகின்றன.

இந்நிகழ்வுகளுக்காக தமிழீழ தாயகம் எழுச்சிக்கோலம் பூண்டிருக்கின்றது.

எங்கும் சிவப்பு-மஞ்சள் வர்ண கொடிகள் கட்டப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்கள் கொண்ட மாவீரர் மண்டபங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கவுள்ளன.

பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றல், திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை எடுத்தல், நினைவுரைகள் எனும் ஒழுங்கில் எழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று காலை 8:30 மணிக்கு ஏற்றப்படும் தேசியக்கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாள் நிகழ்வு முடிவடையும் போது இறக்கப்படும்.

பொது நிறுவனங்கள், பள்ளிகளில் இன்று தொடக்கம் 27 ஆம் நாள் வரை ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின்னர் பிற்பகல் 12:00 மணிக்குப் பின்னரும் மாலை 6:00 மணிக்கு முன்பாகவும் இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும்.

இதற்கான ஒழுங்குகள் அனைத்து இடங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பில் மிதிவெடியில் சிக்கி படையினர் ஒருவர் பலி! மற்றொருவர் காயம்


மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரி பகுதியில் மிதிவெடியில் சிக்கி சிறீலங்காப் படைச் சிப்பாய் கொல்லப்பட்டுள்ளார் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் வாகனேரி பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரரே விடுதலை புலிகள் வைத்த மிதிவெடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சிப்பாய் பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

"பாரிய பதிலடித் தாக்குதலை நடத்துகின்றனர் புலிகள்- 27 படையினர் பலி- 70 பேர் படுகாயம்": அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டது சிறிலங்கா



கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய பதிலடித் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டதாகவும் 70 பேர் படுகாயமடைந்ததாகவும் அவர்களில் சிலர் மீண்டும் படையணிகளில் இணைய முடியாத நிலையில் உள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
"புதுமுறிப்புக்குளம் மற்றும் தென்முறிகண்டி பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் பாரிய பதிலடி நடவடிக்கைக்கு 57ஆம் படையணி உள்ளானது. இதில் படைத்தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70 பேர் படுகாயமடைந்துள்ளனர். 70 பேரில் 35 பேருக்கு சிறு காயங்களும் மேலும் சிலர்- மீண்டும் படையணிக்குத் திரும்ப இயலாத நிலையில் காயமடைந்தும் உள்ளனர்" என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா பிரச்சனை தீர்ந்தது : லண்டன் புறப்பட்டார் வைகோ, லண்டன் புறப்பட்டார் வைகோ

லண்டனில், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் எம்.பி.க்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் வரும் 26ஆம் தேதி லண்டனில் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும்படி வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.



இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பொடா நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார் வைகோ. பொடா கோர்ட்டும் வைகோ லண்டன் செல்ல அனுமதி வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி காலை அவர் சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் வைகோவுக்கு விசா கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டதாக செய்தி பரவியது. இதுகுறித்து பிரிட்டிஷ் தூதரகம் சார்பில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.


எனினும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகச் பேசிவருவதால், வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று வைகோவுக்கு லண்டன் மாநாட்டில் கலந்துகொள்ள பிரிட்டிஷ் தூதரகம் விசா வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்திய நேரப்படி 24ம் தேதி இரவு 8.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார் வைகோ. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அவரை விமானநிலையம் சென்று வழி அனுப்பி வைத்தனர்.

உண்டியல் பணத்தை இலங்கை தமிழர் நிதிக்கு வழங்கிய மாணவி

உண்டியல் பணத்தை இலங்கை தமிழர் நிதிக்கு வழங்கிய மாணவி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் ஏ.கே.எஸ்., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ராமலட்சுமி பாரதி உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
அவர் உண்டியலில் சிறுகசிறுக சேமித்து வைத்திருந்த 494 ரூபாயை, ஆசிரியர் உதவியுடன் "டிடி' எடுத்து இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக , தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டிக்கு தபாலில் அனுப்பிவைத்தார்.

முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பெற்றோர் தந்த ரூபாயை வீணாக செலவழிக்காமல் சேமித்து அதை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கிய "மனிதாபிமானமிக்க' ராமலட்சுமி பாரதிக்கு கலெக்டர், ஆசிரியர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பீகார் வெள்ள சேத நிவாரணத்திற்கும் ராமலட்சுமி பாரதி, 494 ரூபாய் "டிடி' எடுத்து அனுப்பியுள்ளார்.

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: இருவர் பலி; நால்வர் படுகாயம்



அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சசாறு வனப்பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3:05 நிமிடமளவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

விமல் வீரவன்சவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும்படி ஜே.வி.பி. வேண்டுகோள்


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் 10 பேரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் மக்கள் விடுதலை முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில், இவர்கள் செயற்பட்டுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் விமல் வீரவன்ச உள்ளிட்ட பத்து பேரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவிடம் ரில்வின் சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

போரினால் இரண்டரை லட்சம் மாணவர்களின் கல்வி பாதிப்பு -யுனிசெப்


இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைள் பாதிப்படைந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், சிறுவர்கள் தங்களது ஆரம்பக் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக 65 ஆயிரம் பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உபகரணங்கள் பொதியிடப்பட்டு வருவதாகவும் யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் மாணவர்கள் கல்வியைத் தொடரும் வகையில் 35 தற்காலிக கல்விக் கூடங்களை யுனிசெப் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Sunday, November 23, 2008

கருணாநிதியை தோற்கடித்த மகிந்த: கொழும்பு வார ஏடுகள் புகழாரம்



தமிழ்நாட்டின் அழுத்தங்களை முறியடித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் போரை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தென்பகுதியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில, சிங்கள வார ஏடுகள் தமது மகிழ்சியை தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அந்த வார ஏடுகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகிந்த ராஜபக்ச கடந்த 17 ஆம் நாள் தனது 63 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த பிறந்த நாள் அவருக்கு இரண்டு மகிழ்ச்சியான தகவல்களை கொண்டிருந்தன. ஒன்று பூநகரி பிரதேசத்தை படையினர் கைப்பற்றியது. இரண்டாவது தமிழ்நாட்டின் அழுத்தத்தை முறியடித்தது.

போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறும், வான் தாக்குதல்களை நிறுத்துமாறும் தமிழக மக்களும் முதல்வர் கருணாநிதியும் மேற்கொண்ட அழுத்தங்களை மகிந்த வெற்றிகரமாக தோற்கடித்து போரை தொடர்ந்து மேற்கொண்டு வருவது தென்பகுதி ஊடகங்களில் பாரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடம்பெற்று வரும் போருக்கு இந்திய மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதால் உற்சாகம் அடைந்த மகிந்த விடுதலைப் புலிகளை சரணடையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார் என அந்த ஏடுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஆட்சி புரியும் இந்திய மத்திய அரசின் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தமிழகம் ஏறத்தாழ 39 உறுப்பினர்களை கொண்டுள்ள போதும் அதன் வலிமையை புறந்தள்ளி சிறிலங்கா அரசு இந்திய மத்திய அரசை தனது பிடிக்குள் கொண்டு வந்துள்ளது பெரும் ஆச்சரியமானது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நல்ல நாள் பார்க்கும் மகிந்த



சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலினை நடத்துவதற்கு சோதிடர்களிடம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நல்ல நாள் கேட்டிருக்கின்றார் என்று கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசின் பக்கம் தாவிய 17 உறுப்பினர்களும் தற்போது நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டாம் என மகிந்தவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால், தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாத நிலையில் மகிந்த உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலினை நடத்துமாறும் சோதிடர்கள் மகிந்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உகந்த நல்ல நாட்களாக டிசம்பர் 9, 13 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களை குறித்து கொடுத்துள்ளனர்.

டிசம்பர் 9 நல்ல நாள் என மகிந்த தீர்மானித்துள்ளார்.

இதனிடையே, இந்த வருடத்தின் இறுதியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக அரசின் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், சித்திரை புதுவருடத்திற்கு முன்னரே தேர்தலை நடத்தும் திட்டம் உள்ளதாக வேறு சிலர் தெரிவித்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு முனைகளில் இலக்கு வைக்கப்படும் பரந்தன்: யுத்தமுனைகளில் இருந்து அகற்றப்பட்ட பெருமளவு படையினர்


வடக்கில் போர்முனை எந்தப் பக்கம் திரும்பப் போகிறது? பூநகரிக்கு வந்துவிட்ட படையினர் அடுத்து எங்கு செல்லப் போகின்றனர்? அக்கராயன்குளத்தை தாண்டிவிட்ட படையினர் எப்போது கிளிநொச்சி செல்வர்? கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து புறப்பட முனையும் படையினர் அடுத்த இலக்கை எப்படித் தாண்டப் போகின்றனர்? மாங்குளம் சந்திக்கு வந்த படையினரின் அடுத்த இலக்கு என்ன? மணலாறில் முன்னேறும் படையினர் எங்கு நிற்கின்றனர்? என்ற கேள்விகளே அனைவராலும் எழுப்பப்படுகிறது.

வன்னியிலும் யாழ்.குடாவிலும் அனைத்து முனைகளிலும் கடும் சமர் நடைபெற்று வருகிறது. எல்லா முனைகளிலும் முன் னேறி புலிகள் வசமிருக்கும் ஏனைய பகுதிகளுக்குள்ளும் நுழைந்துவிட வேண்டுமென படைத்தரப்பு முனைப்புக் காட்டுகிறது. பாரிய ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றபோதும் ஆயுத பலத்தின் மூலம் வன்னிக்குள் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டுமென்று அரசும் படைத்தரப்பும் நினைக்கின்றன. இதனால் தான் வன்னிப் போரில், போரிடும் ஆற்றல்மிக்க படையணிகளெல்லாம் பேரிழப்புகளைச் சந்தித்து, - கூர் மழுங்கிச் சிதைந்து போயிருக்கும் நிலையிலும் புதிய புதிய படையணிகளைக் களமிறக்கியாவது இந்த யுத்தத்தில் வெற்றி பெற்று விட வேண்டுமென அரசு தீவிர அக்கறை காட்டுகிறது.

மன்னார் - பூநகரி வீதியில் (ஏ-32) முன்னேறிய படையினர் தங்கள் இலக்கை அடைந்து விட்டனர். தற்போது பூநகரியில் நிலைகொண்டுள்ள படையினர் சங்குப் பிட்டி - கேரதீவு கடல் பாதையூடாக யாழ். குடாநாட்டுடன் தொடர்புகளை மேற்கொண்டிருக்க வேண்டும். பூநகரி வரை வந்த படையினருடன் தொடர்புகளை ஏற்படுத்த யாழ்.குடாவிலும் படையினர் தயாராகவேயுள்ளனர். ஆனாலும் இதுவரை அவர்களால் இந்தக் கடல்வழிப் பாதையால் யாழ்.குடாநாட்டுக்குள் செல்ல முடியவில்லை. இதனால், பூநகரியிலிருந்து ஏ-9 வீதியிலுள்ள பரந்தன் சந்தி நோக்கி பாரிய முன்நகர்வை மேற்கொள்ள வேண்டிய படையினர், கிளாலி மற்றும் முகமாலை ஊடாக தெற்கு நோக்கி முன்நகர வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

பூநகரியைக் கைப்பற்றினாலும் பூநகரி - பரந்தன் வீதியை கைப்பற்றி பரந்தன் சந்திக்குச் சென்றால், பரந்தனுக்கு வடக்கே ஆனையிறவு முதல் முகமாலை வரையான பகுதிகள் மோதல்கள் எதுவுமின்றி படையினர் கைகளில் விழ யாழ்.குடாநாட்டுக்கான ஏ-9 தரைவழிப் பாதையைத் திறக்க முடியும். இல்லையேல் பூநகரி ஊடாகச் செல்லும் சங்குப்பிட்டி -கேரதீவு கடல் பாதைக்கும் ஆபத்தேற்படும். இதனால்தான் பூநகரிக்குச் சென்று சங்குப்பிட்டியை அடைந்தும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் கடல்வழியாகச் சென்று கேரதீவு ஊடான பாதையை படையினரால் திறக்க முடியாதுள்ளது. தற்போதைய நிலையில் இந்தக் கடல்வழிப் பாதைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்துள்ளது. ஆனையிறவுக்கு மேற்கேயுள்ள இந்தக் கடல் வழிப் பாதையை புலிகளால் தாக்க முடியும். இதனாலேயே, படையினர் பூநகரியைக் கைப்பற்றியும் சங்குப்பிட்டி - கேரதீவு கடல் பாதையைத் திறக்க தயக்கம் காட்டுகின்றனர். படையினர் இந்தப் பாதையைத் திறக்க வேண்டுமானால் முகமாலை முதல் பரந்தன் வரை நிலைகொண்டுள்ள விடுதலைப்புலிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் அதற்கு இரு வழிகள் உள்ளன. பூநகரியிலிருந்து பரந்தன் வீதியூடாக ஏ-9 வீதியிலுள்ள பரந்தன் சந்தியை நோக்கி முன்னேறுவது அதிலொன்று. மற்றையது, கிளாலி மற்றும் முகமாலைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து தெற்கு நோக்கி முன்னேறி பளை, இயக்கச்சி, ஆனையிறவு பின்னர் பரந்தனைக் கைப்பற்றுவது. இதில் எந்தப் பாதையைக் கைப்பற்றி பரந்தன் சந்திக்கு படையினர் செல்வதென்பதுதான் தற்போது படையினர் மத்தியிலுள்ள பெரும் கேள்வியாகும். எனினும் இவ்விரு பாதையையும் கைப்பற்றுவதற்கான பலத்த முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ள போதிலும் கடந்த வாரம் இவ்விரு பகுதிகளிலும் இடம்பெற்ற பாரிய சமர்களில் படையினர் மிக மோசமான இழப்புகளைச் சந்தித்துள்ளதால் அடுத்து என்ன செய்வதென்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மன்னாரிலிருந்து பூநகரி வரையான சுமார் 80 கிலோ மீற்றர் தூரம் வரை வந்த படையினருக்கு, பூநகரிக்கு கிழக்கே பரந்தன் சந்திவரையான 30 கிலோ மீற்றர் பாதையைக் கைப்பற்றுவது கடினமாயிராதெனக் கருதப்பட்டது. பூநகரிநோக்கி படையினர் ஏ-32 வீதியூடாக முன்நகர்ந்த போது அவர்களுக்கு பக்கவாட்டுத் துணையாக ஏ-32 வீதிக்கும் ஏ-9 வீதிக்கும் இடையால் நகர்ந்த படையினர் தற்போது பூநகரி-பரந்தன் வீதியில் நல்லூர் வரை முன்னேறியுள்ளனர். பூநகரியிலிருந்து நல்லூர் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இதனால் அந்த வீதியில் மேலும் 20 கிலோ மீற்றர் தூரத்தை கைப்பற்றினால் படையினரால் பரந்தன் சந்தியைச் சென்றடைந்து ஏ-9 வீதியைக் கைப்பற்றி விட முடியும். ஆனால் இந்த வீதியில் படையினரின் முன்நகர்வு முயற்சிக்கெதிராக புலிகள் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த வீதியில் பரந்த பொட்டல் வெளிகள் இருப்பதால் திறந்த வெளிக் களமுனையில் புலிகளின் மிகக் கடுமையான பதில் தாக்குதலுக்கு மத்தியில் படைநகர்வை மேற்கொள்வது பலத்த இழப்புகளை ஏற்படுத்தும்.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பூநகரி - பரந்தன் வீதியில் மிகவும் உக்கிர மான சமர் நடைபெற்றுள்ளது. இந்தச் சமரில் படையினர் பேரிழப்புகளைச் சந்தித்துள்ளனர். மிகப்பெரிய இராணுவ அணியொன்றை குறிப்பிட்டளவு தூரம் முன்னேற விட்ட புலிகள் அந்தப் படையணியை பொறிக்குள் சிக்கவைத்து கடும் தாக்குதலை நடத்தி பலத்த இழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் படையணி புலிகளின் பொறிக்குள் சிக்கியதை அறிந்து அவர்களை மீட்க மற்றொரு படையணி சென்றபோது அந்தப் படையணி மீதும் புலிகள் மிகக் கடும் தாக்குதலை நடத்தி அவர்களுக்கும் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 250 படையினர் வரை கொல்லப்பட்டும் 800 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியுள்ளார். பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலைக்கு மட்டும் ஒரு நாளில் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் படுகாயமடைந்த பல நூற்றுக் கணக்கான படையினர் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் கூட பூநகரிச் சமரில் படையினருக்கு மிகப்பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ள தாக வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.

பூநகரி - பரந்தன் வீதியில் முன்னேறி பரந்தன் சந்தியை கைப்பற்றிவிட்டால் அதற்கு வடக்கே முகமாலை வரையான பகுதிகள் எதுவித மோதலுமின்றி படையினர் வசமாகி விடுமென்பதால் இந்த வீதியூடாக பாரிய படை நகர்வுக்கு திட்டமிடப்பட்டது. எனினும் கடந்த சனிக்கிழமை (15 ஆம் திகதி காலை) படையினர் பூநகரியை கைப்பற்றிய போது, கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளிலிருந்து யுத்த டாங்கிகள் சகிதம் பாரிய படைநகர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பூநகரியை படையினர் கைப்பற்றிவிட்டதால் பரந்தனுக்கு வடக்கே புலிகளின் நிலைகளுக்கு ஆபத்தேற்பட்டு விடுமென்பதால் புலிகள் எவ்வாறான நிலையிலிருக்கிறார்களென்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கிலேயே கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் இந்தப் பாரிய படை நகர்வு முயற்சி இடம்பெற்றது. எனினும் கிளாலியிலும் முகமாலையிலும் புலிகள் காட்டிய கடும் எதிர்ப்பும் படையினருக்கு அவர்கள் ஏற்படுத்திய மோசமான உயிர்ச்சேதமும் கிளாலி - முகமாலையிலிருந்து மட்டுமல்ல பூநகரியிலிருந்தும் பரந்தன் நோக்கி படையினர் முன்னேறுவதற்கு அவர்கள் அனுமதிக்கப் போவதில்லையென்பதை தெளிவுபடுத்தியது.

பூநகரியைக் கைப்பற்றிய பின் சங்குப்பிட்டி - கேரதீவு கடல் பாதையூடாக குடாநாட்டிலுள்ள 40,000 படையினரில் பெருமளவானோரை வன்னிக்குள் நகர்த்துவதன் மூலம் முல்லைத்தீவு நோக்கி அடுத்து மேற்கொள்ளவுள்ள பாரிய படைநகர்வுக்கு பெரும் பலத்தை சேர்க்க முடியுமென படைத்தரப்பு கருதியது. ஆனாலும் இந்தக் கடல் வழிப் பாதைக்கு ஆனையிறவு முதல் கிளாலி மற்றும் முகமாலைப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள புலிகளால் ஆபத்தேற்படுமென்பதையும் படையினர் உணர்ந்திருந்தனர்.

சங்குப்பிட்டிக்கும் கேரதீவுக்குமிடையில் கடல்வழியால் போக்குவரத்துக்கள் மேற்கொள்ளப்பட்டால் அந்தப் போக்குவரத்தை புலிகளால் சுலபமாகத் தடுக்க முடியும். அவர்களது ஷெல் வீச்சு மற்றும் மோட்டார் தாக்குதல் எல்லைக்குள் மட்டுமல்லாது இந்தக் குறுகிய கடல்வழிப் போக்குவரத்துக்கு கடற் புலிகளாலும் பேரச்சுறுத்தலேற்படுமென்பதால் இதுவரை இந்தப் பாதையை படையினர் திறக்கவில்லை. இதனால் இந்தப் பாதையூடாக குடாநாட்டிலிருந்து பூநகரிக்கு படையினரைக் கொண்டு வரவும் முடியவில்லை. வன்னியில் கடந்த இரு வருடங்களாக இடம்பெற்ற போரில் 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணியே ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்தப் படையணிகளே இலங்கைப் படையினரில் மிகவும் வலுவான போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகளாயிருந்தன. ஆனாலும் வன்னிப் போரில் சிக்கி இந்தப் படையணிகள் பெரிதும் சிதைந்து போய் விட்டன.

அவற்றின் கூர் மழுங்கிப் போய் விட்டதால், மிக நீண்ட காலமாக போர் நடவடிக்கையில் ஈடுபடாது குடாநாட்டில் நிலைகொண்டிருந்த 53 ஆவது மற்றும் 55 ஆவது படையணிகளை அடுத்த கட்ட படை நகர்வுக்கு பயன்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டிருந்தது. பூநகரியைக் கைப்பற்றியதும் 53ஆவது மற்றும் 55ஆவது படையணியைப் பயன்படுத்தி முகமாலையிலிருந்தும் பூநகரியிலிருந்தும் புலிகளுக்கு இரு முனைகளில் பாரிய நெருக்கடிகளைக் கொடுப்பதே படையினரின் திட்டமாகும். கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து இந்தப் படையணிகள் பாரிய முன்நகர்வை மேற்கொள்ளும் அதேநேரம் இந்தப் படையணிகளின் ஒரு பகுதியை சங்குப்பிட்டி - கேரதீவு கடல்வழியாக பூநகரிக்குள் தரையிறக்கி அங்கிருந்து பரந்தனை நோக்கி பாரிய முன்நகர்வை மேற்கொள்வதும் அவர்களது திட்டமாகும்.

ஆனாலும் பரந்தன் முதல் கிளாலி வரை நிலைகொண்டுள்ள புலிகளால் சங்குப்பிட்டி - கேரதீவு கடல் பாதைக்கு பலத்த அச்சுறுத்தல் ஏற்படுமென்பதால் இந்தக் கடல்பாதை இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் பூநகரிக்குள் குடாநாட்டிலிருந்து பெருமளவு படையினரை வரவழைத்து படையினரின் ஆட்பலத்தை வெகுவாக அதிகரித்து பூநகரியிலிருந்து பரந்தனை நோக்கி பெருமெடுப்பில் மேற்கொள்ளவிருந்த படைநகர்வுத் திட்டம் சாத்தியப்படவில்லை. பூநகரியிலிருந்து நகர்ந்து சென்று பரந்தன் சந்தியைக் கைப்பற்றி ஏ -9 வீதியையும் கைப்பற்றினால் பரந்தனுக்கு வடக்கே ஆனையிறவு, இயக்கச்சி, பளை,முகமாலை மற்றும் கிளாலியில் நிலைகொண்டிருக்கும் புலிகள் படையினர் பரந்தன் சந்திக்கு வர முன்னர் பரந்தனைக் கடந்து முல்லைத்தீவுக்குள் சென்றுவிடவேண்டிய நிலையேற்படுமென படைத்தரப்பு கருதுகிறது. இதன் மூலம் கிளாலி மற்றும் முகமாலையில் நிலைகொண்டுள்ள படையினர் எதுவித மோதல்களுமின்றி ஏ-9 வீதியூடாக அடுத்த நிமிடமே பரந்தன் சந்திக்கு வந்துவிட முடியுமெனப் படைத்தரப்பு கருதியது.

எனினும் கடந்த சனிக்கிழமை கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிராக புலிகள் மிகக்கடும் பதில் தாக்குதலை நடத்தினர். தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பாரிய முன்நகர்வு முயற்சியில் படையினர் பேரிழப்புகளைச் சந்தித்தனர். எதிர்பார்த்த பலனெதுவும் கிட்டவில்லை. 200க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 300 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துமுள்ளனர். 53 ஆவது மற்றும் 55 ஆவது படையணிகள் சந்தித்த மிகப்பெரும் இழப்பு இதுவென்பதுடன் இந்த முனைகளூடாக தெற்கு நோக்கி ஒரு அடி கூட முன்வைக்க புலிகள் அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் படையினர் நன்கறிந்து கொண்டனர்.

எனினும் இந்தச் சமரில் படையினருக்கு ஒரு சிறு ஆறுதலேற்பட்டது. முன்னர் பூநகரி புலிகள் வசமிருந்த போது புலிகள் பூநகரியிலும் தங்கள் ஆட்லறி நிலைகளை அமைத்து கிளாலி மற்றும் முகமாலைப் படையினர் மீது மிகக் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் இம்முறை புலிகளின் ஆட்லறிகள் பூநகரியில் இல்லாததால் படையினருக்கு ஏற்படவிருந்த மேலதிக இழப்புகள் ஓரளவு தவிர்க்கப்பட்டன. அதேநேரம், தற்போது பூநகரியை படையினர் கைப்பற்றிவிட்டதால் படையினரால் அங்கு ஆட்லறி நிலைகளை அமைத்து கிளாலி மற்றும் முகமாலையில் நிலைகொண்டுள்ள புலிகளுக்கு பின்புறத்திலிருந்து பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது எனலாம்.

[ தினக்குரல் ] விதுரன்