Wednesday, December 23, 2009

எம் தலைவன் குறிப்புக்கள் சில





தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், 'தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ''போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்'' என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ''எடுத்தால் எங்கே வைப்பது'' என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் 'ஏழு தலைமுறைகள்'. அதில் 'இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

''ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?'' என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ''யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.''

''பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை'' என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. 'தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

'இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், 'பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ''தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்'' என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

'உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ''நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!''

''ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?'' என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

'தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

Tuesday, December 22, 2009

துவாரகாவா இசைப்பிரியாவா?

வ்
விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகர னின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன! 'துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!' என்று புலம்பியவர்கள், 'பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய மகளையும் இப்படி பலியாக்கியதா சிங்கள ராணுவம்' என்று கொதிப்போடு பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

சீரழிக்கப்பட்ட இசைபிரியா!

துவாரகாவின் சாயலை நினைவூட்டும் அந்த புகைப் படத்தில் உள்ளதாகச் சொல்லப்படும் இசைபிரியா விடுதலைப் புலிகள் மட்டுமின்றி, தமிழீழ ஆதரவுப் பிரமுகர்கள் மத்தியிலும் பிரபலமான ஒரு முகம்தானாம்! அவருடைய தோற்றம் போலவே, குரலும் மிக இனிமை யானது! அதனாலேயே, இயக்கத்தின் 'நிதர்சனம்' என்ற பிரிவில் போராளியாக இணைந்த அவருக்கு, தமிழீழத் தேசியத் தொலக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணியும் ஒதுக்கப்பட்டதாம். இவர் கடற்புலிகளின் துணை கட்டளைத் தளபதியாக இருந்த சீறிராம் என்பவரின் மனைவி என்றும் தகவல்கள் வந்தபடி உள்ளன.

''மே மாதம் 15-ம் தேதி நடந்த ராணுவத் தாக்குதலின் போது இசைபிரியாவுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. எல்லோரும் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிய அந்தத் தருணத்தில், அவரைக் காப்பாற்ற ஆள் இல்லாமல் போய் விட்டது. ராணுவத்தினர் நெருங்கி வந்துவிட்டதால், காயப்பட்டு துடித்த இசைபிரியாவை புலிகளா லும் மீட்டெடுக்க முடிய வில்லை. வலியோடு போராடிக் கொண்டிருந்த இசைபிரியா ராணுவத்தி னர் கையில் சிக்கிவிட்டார்...'' என்று கூறும் இலங்கை பத்திரிகை யாளர்கள் சிலர், மேற்கொண்டு சொல்லும் தகவல் கண்ணீரைப் பெருக்கெடுக்க வைக்கிறது -

''ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த அந்த நிலையிலும் பதினைந்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இசைபிரியாவை சின்னா பின்னமாக்கி இருக்கிறார்கள். கடைசிக்கட்டப் போரில் ஈடுபட்ட ராணுவத்தினர் சிலரிடம் அந்த நிமிடங்களில் வக்கிரமாகப் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவே இருப்பதாகத் தெரிகிறது!'' என்கிறார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள். கடைசிக்கட்டப் போரில் தப்பிய சிலரிடம் பேசியதை வைத்தே இவர்கள் இப்படி விவரிக் கிறார்கள்.

'இது துவாரகாவின் புகைப்படம்' என்று ஒரு பக்கம் இணைய தளங்களில் வெளியானபடி இருக்க... இன்னொரு பக்கம் மீடியாக்களை சந்தித்த இலங்கை ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார, 'யுத்தத்தில் துவாரகாவின் சடலமோ பிரபாகரன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் சடலமோ மீட்கப்படவில்லை. இணையதளங்களில் வெளியாகியிருக்கும் அந்தப் படம் துவாரகாவினுடையது போல் தெரியவில்லை' என மறுத்து வைத்தார்.

போர்க்களத்தில் துவாரகா!

''அயர்லாந்தில் தன்னுடய உயர் படிப்பை மேற்கொண்டிருந்த துவாரகா, யுத்தம் கொடூர கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில் தன் தந்தையைப் பார்க்க வேண்டுமென்று ஈழத்துக்கு வந்திருந்தது உண்மைதான். இறுதிக்கட்ட சமரில் அவரும் ஆயுதமேந்திப் போராடினார். ஆனால், அவர் வீர மரணமடைந்தாரா, தப்பி வெளியேறினாரா என்பதெல்லாம் இது வரை தெரியாத விஷயம்!'' என்ற கருத்தைச் சொல்லும் இலங்கை முக்கியஸ்தர்கள் சிலர்,

''இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளைத் தவிர்த்து வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழ்ப் பெண்கள் பொதுவில் சிவப்பாக இருக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். இயக்கத்தில் வட பகுதியைச் சேர்ந்த மாநிறமான பெண்களே பிரதானமாக இடம்பெற்றிருந்ததால், புகைப்படத்தில் உள்ள பெண் சிவப்பாக இருப்பதை வைத்தே அதை துவாரகா என்று சுலபமாக நம்பி விட்டார்கள் பலர். இசைபிரியாவும் நல்ல சிவப்பு நிறம் கொண்டவர். அதுவும்கூட இணைய தளங்களில் இப்படி தவறான தகவலாக வெளியாகக் காரணமாகியிருக்கலாம்!'' என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில்தான், 'பிரபாகரன் எந்த பங்கமும் இன்றி உயிரோடுதான் இருக்கிறார்' என்று சொல்லும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரான

பழ.நெடுமாறன், துவாரகா விவகாரம் இத்தனை நாள் கழித்து திடீரென்று இணைய தளங்கள் மூலம் பரவுவதன் பின்னால் இந்தியா மற்றும் இலங்கையின் உளவு அமைப்புகள் இருப்ப தாகக் கூறுகிறார். வருகிற 26, 27 தேதிகளில்

தஞ்சாவூரில் நடத்தவிருக்கும் உலகத் தமிழர் மாநாட்டில் இதன் பின்னே உள்ள சதி குறித்து விவரமாக முழங்கும் முடிவில் இருக்கும் நெடுமாறனை நாம் நேரில் சந்தித்தபோது, ''வருடா வருடம் ஏதாவதொரு தலைப்பில் உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம். இந்த வருடம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடாக நடத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் ஈழத்தின் விடிவுக்கான கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!'' என்ற நெடுமாறனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்.

''பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கிளம்பிய பரபரப்புகளே முடிவுக்கு வராத நிலையில், திடீரென அவர் மகள் துவாரகா இறந்ததாக படத்தோடு திகீர் கிளம்பியிருக்கிறதே?''

''பிரபாகரனை கொன்று விட்டதாக மார்தட்டிய ராஜபக்ஷே அதை வைத்தே ஜெயித்துவிடலாம் என எண்ணி அதிபர் தேர்தலை அறிவித்தார். ஆனாலும், போரை முன்னின்று நடத்திய ஃபொன்சேகாவே இப்போது ராஜபக்ஷேக்கு எதிராக நிற்கிறார். அதனால், 'வெற்றி பெறுவோமோ... மாட்டோமோ...' என்கிற பதற்றம் ராஜபக்ஷேக்கு உண்டாகிவிட்டது. உடனே தங்களது உளவு அமைப்பு களின் மூலமாகவே துவாரகா விவகாரத்தை திடீரெனக் கிளப்பத் தொடங்கி விட்டார்கள். இப்படிச் செய்வதன் மூலமாக போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பதிய வைத்துக் கொண்டே இருக்க ராஜபக்ஷே திட்டமிடுகிறார். முதலில் பிரபாகரன், பிறகு மதிவதனி, பாலச்சந்திரன் பற்றி திட்டமிட்டு பரபரப்புக் கிளப்பியவர்கள், இப்போது துவாரகா குறித்தும் பரபரப்பு கிளப்புகிறார்கள்.

எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல் களின் அடிப்படையில் சொல்கிறேன்... துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது அவர் கிடையாது. இப்போதைக்கு அதைத் தான் சொல்ல முடியுமே தவிர, மேற்கொண்டு இதுபற்றி சொல்ல முடியாது.''

''அப்படியென்றால் துவாரகாவின் படமாகக் காட்டப்படுவது யார்?''

''அது இசைபிரியா என்கிற பெண் போராளி யின் சடலம். 'நிதர்சனம்' புகைப்படப் பிரிவில் பணியாற்றிய இசைபிரியா, புலி களின் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். ஆண், பெண் என்றெல்லாம் பாராமல்... களத்தில் ஆயுதமேந்தி இருப்பவர்கள் - நிராயுதபாணியாக நிற்பவர்கள் என்றும் பாராமல்... இரக்கமற்று ராஜபக்ஷே ராணுவம் வீழ்த்தித் தள்ளிய பட்டியலில் அடங்குவார் இசை

பிரியா! ''

''பிரபாகரன் கொல்லப்படவில்லை என்று எதை வைத்து உறுதியாகச் சொல்கிறீர்கள்?''

''சிங்கள உளவுத் துறையும், இந்தியாவின் 'ரா'வும் எந்த விஷயத்தை அறிய போராடிக் கொண்டிருக்கின்றனவே... அதனை எப்படி நான் விளக்கிவிட முடியும்? அவர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக இரு நாட்டு உளவுத் துறையும் எந்தளவுக்கு போராடிக் கொண்டிருக்கின்றன என்று உள் வட்டத்தில் விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். சிங்கள ராணுவத்தின் கையில் தன் உடல் சிக்கும் அளவுக்கு விடக் கூடியவரா பிரபாகரன்? அவருடைய சாமர்த்தியங்களைப் பற்றி நம்மைவிட சிங்கள ராணுவத்துக்கு நன்றாகத் தெரியும்! பிரபாகரன் என் உடன்பிறவா தம்பி. அவரைப் பற்றி சிங்கள ராணுவம் அறியாததும் எனக்குத் தெரியும். சிங்கள ராணுவம் காட்டிய சடலத்தைப் போல்தான் அவர் இருப்பார் என நினைப்பவர்கள் வேண்டுமானால், அந்த விஷமப் பிரசாரத்தை நம்பலாம். ஆனால், பிரபாகரன் அப்படியான உருவத்தில் இருக்க மாட்டார் என்பது அவரை அருகிலிருந்து அறிந்தவர் களுக்குத்தான் தெரியும். பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் புலிகளை அடியோடு அழித்து விட்டதாகவும் கொக்கரிக்கும் சிங்கள ராணுவம், கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கோடிக்கணக்கில் ஆயுதங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பது ஏன்? எந்த பயத்தில்? இதிலிருந்தே தெரியவில்லையா?''

''பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இந்திய அரசிடம் இலங்கை அரசு கொடுத்துவிட்டதாகச் சொல்லப் படுகிறதே?''

''இந்தக் கேலிக்கூத்துக்கு என்னுடைய பதிலாக, ஜூ.வி. வாசகர்கள் நன்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல் கிறேன். மதுரை அருகே உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். அவருடைய கணவரே அந்தம்மாவைக் கொலை செய்துவிட்டதாக ஒரு வழக்கு நடந்தது. பாண்டியம்மாளின் சடலம் காட்டப்பட்டது. 'நான்தான் கொன்றேன்!' என கணவரே வாக்குமூலம் கொடுத்தார். தகுந்த சாட்சியங்களோடு விசாரித்து, கோர்ட்டில் அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், திடீரென ஒரு நாள் பாண்டியம்மாள் கோர்ட்டில் வந்து நின்றார். அதன் பிறகுதான் போலீஸ் செய்த அத்தனை ஜோடிப்புகளும் வெட்டவெளிச்சமானது. உடனே நீதிபதி பாண்டியம்மாளின் கணவரிடம், 'நீயே உன் மனைவியைக் கொலை செய்ததாக முதலில் ஒப்புக் கொண்டது ஏன்?' எனக் கேட்டார். 'என்னை அடிச்சே அப்படியரு வாக்குமூலத்தை போலீஸ் வாங்கிட்டாங்க...' எனச் சொன்னார் பாண்டியம்மாளின் கணவர்.

தமிழ்நாடு போலீஸ் செய்த ஜோடிப்பு இந்தளவு என்றால், ஒரு நாட்டின் ராணுவம் எத்தகைய ஜோடிப்புகளை செய்யும் என்பதை எண்ணிப் பாருங்கள். பாண்டியம்மாளின் கதைதான் பிரபாகரன் விவகாரத் திலும் நடக்கிறது. உண்மை வெளிச்சத்துக்கு வரும் நாளில், சில அவசர லாபங்களுக்காக வெற்றிப் புராணம் பாடியவர்கள் வெட்கப்பட்டு நிற்கப் போகிறார்கள்.''

''பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் மூலமாகவோ, புலிகளின் தரப்பிலிருந்தோ உங்களுக்கு என்ன விதமான தகவல் வந்தது?''

''அப்படியரு தகவல் வராமல் எப்படி அவர் உயிரோடு இருப்பதாக நான் சொல்வேன்? நம்பத் தகுந்த செய்தி யாரிடமிருந்து வரவேண்டுமோ... அங்கிருந்தே வந்தது. ஆனாலும், எனக்கு வந்த தகவல்கள் குறித்து இப்போதைக்கு நான் ஏதும் சொல்லக் கூடாது. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பரப்புவதன் மூலமாக தமிழின எழுச்சியை அடியோடு அடக்கிவிட இந்திய அரசு நினைக்கிறது. ஆனால், எப்போதுமே தமிழகத்தில் கொண்டாடப்பட்டிராத மாவீரர் தினம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எதை வீழ்த்தத் துடிக்கிறார்களோ... அது வீறுகொண்டு விரிந்து கொண்டிருப்பதால், அடுத்தடுத்து இன்னும் பல கதைகளைக்கூட இரு நாட்டு உளவு அமைப்புகளும் பரப்பக் கூடும்!''

''பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரான கே.பி-யே அவர் கொல்லப்பட்டதாக அறிக்கை விட்டாரே?''

''அப்படியரு அறிக்கையை வெளியிட வைத்ததே இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' தான். ஈழப் போர் முடிவுக்குப் பின்னர் இலங்கையின் இணக்கம் சீனா பக்கம் திரும்பியது. அதனால் இலங்கையை எச்சரிக்கும் விதமாக கே.பி-யை வளைத்தது ரா. 'கே.பி. மூலமாக புலிகள் படையை நாங்கள் மறுபடியும் உருவாக்கத் தயங்க மாட்டோம்' என இலங்கையை ரா எச்சரித்தது. கூடவே கே.பி. மூலமாக பிரபாகரன் இறந்து விட்டதாகவும், அடுத்த தலைமை தான்தான் என்றும் அறிவிக்க வைத்தது. 'ரா'வின் இந்த செயல்பாடு சிங்கள அரசுக்கு பெரிய தலைவலியாக அமைய... அவர்கள் சில நாடுகளின் துணையோடு கே.பி-யை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இந்த விஷயத்தில் சிங்கள அரசிடம் ரா. தோற்றுப் போனதுதான் உண்மை!''

''பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்ததாக செய்திகள் கசிகிறதே?''

''ராஜீவ் காந்தி கொலைக்கு புலிகள்தான் காரணம் என விசாரணை அதிகாரிகள் பரப்பிக் கொண்டிருந்த நேரத்தில், அதில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த ரெங்கநாத் என்கிற வீடு புரோக்கர் மிக முக்கிய விஷயம் ஒன்றை நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தார். அதுபற்றி மீடியாக்களிடமும் சொன்னார். அதைப் பார்த்த சோனியா காந்தி, உடனடியாக அந்த ரெங்கநாத்தை சந்திக்க விரும்புவதாக சொல்லி இருக்கிறார். அப்போது ரெங்கநாத் என் அலுவலகத்தில் இருந்தார். உடனே என்னிடம் ஓடோடிவந்த தங்கபாலு, கௌரிசங்கர் இருவரும் அந்த விஷயத்தைச் சொன்னார்கள். ரெங்கநாத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நான் சொன்னவுடன், உரிய பாதுகாப்புக்கு வழி செய்யப்படும் என அர்ஜுன் சிங் டெல்லியிலிருந்து அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையில் நான் ரெங்கநாத் ஸ்டேட்மென்ட்டை வீடியோ பதிவு செய்து டெல்லிக்கு அனுப்பினேன். அதைக் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்த்த சோனியா, உடனடி யாக ரெங்கநாத்தை சந்தித்தே ஆகவேண்டுமென விரும்பினார்.
தக்க பாதுகாப்புடன் சோனியாவை சந்தித்த ரெங்கநாத் இப்போது சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தொடர்பான சில விஷயங்களை ஆதாரபூர்வமாகப் போட்டுடைத்தார். அன்றிலிருந்து சி.பி.ஐ-யின் முக்கிய அதிகாரி ஒருவரை தன் வீட்டுப் பக்கம் வரவே கூடாது என சோனியா எச்சரித்த சம்பவமும் நடந்தது. இதெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும், ஈழத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சாவின் விளிம்பில் நின்று கதறியபோது, போரை நிறுத்த சோனியா எந்த முனைப்பும் காட்டவில்லை. அவர் நினைத்திருந்தால்... ஒரே நிமிடத்தில் போரை நிறுத்தி இருக்க முடியும். ஆனாலும் காங்கிரஸ் அரசு அதற்கு முயலாதது சில சந்தேகங்களை விதைக்கத்தான் செய்கிறது.

சோனியாவை இயக்கிக் கொண்டிருக்கும் சில இந்திய அதிகாரிகள் இலங்கை விவகாரத்தில் திட்டமிட்டு நிறைய மோசடிகளைச் செய் தார்கள். இலங்கைக்கு பக்க பலமாக இருக்கவும், தமிழர்கள் கொன்றழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கவும் செய்த அந்த அதிகாரிகள், அதற் காக எக்கச்சக்கமான பணத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தமிழ் உயிர்களை பாழாய்ப்போன பணம்தான் காவு வாங்கிவிட்டது! ஈழத்தைச் சுடுகாடாக்க இந்தளவுக்கு முனைப்புக் காட்டிய இந்திய அதிகாரிகள், அதற்கு விலையாக இந்தியாவின் பாதுகாப்பை பலி கொடுத்துவிட்டார்கள். இலங்கையில் கால் பதித்துவிட்ட சீனா... தமிழகத்தில் இருக்கும் அணுமின் நிலையங்கள் பக்கம் ஆயுதத்தைத் திருப்ப எவ்வளவு நேரமாகிவிடப் போகிறது?!'' என்று பட்டென முடித்துக் கொண்டார் பழ.நெடுமாறன்.

அடுத்து நாம் சீமானிடமும் பேசினோம். ''இசை பிரியாவின் உடலைக் காட்டி துவாரகா இறந்ததாகச் செய்தி பரப்புவதன் மூலமாக தமிழர்கள் மீது உளவியல் போரை சிங்கள அரசு தொடுக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழீழத்துக்கு நான் போயிருந்தபோது புலிகளின் தொலைக்காட்சிக்காக என்னை பேட்டி கண்டவர் இசைபிரியா. தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தவர். புலிகளின் வெற்றிச் செய்திகளை மிகுந்த உற்சாகத்தோடு சொல்லி, புலித் தளபதிகளின் பாராட்டுகளைப் பெற்றவர் இசைபிரியா. அவருடைய படத்தை அலங்கோலமாக வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் கூனிக்குறுக வைத்திருக்கிறது சிங்கள அரசு'' என்றார் வேதனையோடு.

Thursday, December 17, 2009

யாழிலிருந்து சகல வாகனங்களும் கட்டுப்பாடுகள் இன்றி ஏ-9 பாதையால் பயணிக்க அனுமதி: யாழ்.அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 பாதை போக்குவரத்துச் சம்பந்தமாகப் பின்வரும் ஏற்பாடுகள் இன்று முதல் (18.12.2009) நடைமுறைக்கு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

1. ஏ-9 பாதையூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தனியார் வாகனங்கள் உட்பட சகல வாகனங்களும் காலை 6.00 மணியில் இருந்து பிற்பகல்; 4.00 மணிவரை கட்டுப்பாடுகள் இன்றி பயணத்தை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2. வவுனியா மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை கட்டுப்பாடுகள் இன்றி யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் சகல பொதுப் பேருந்துகளும் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் சகல தனியார் பேருந்துகளும் யாழ்.தனியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் தொடரணி சேவை இன்றி பஸ்களில் பயணிகள் ஏற்றப்பட்ட உடன் நேரடியாக ஏ-9 பாதையூடாக வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கலாம்.

இவ் வீதியால் பயணிக்கும் வாகனங்கள் தேவைக்கு ஏற்ப இடைக்கிடை இராணுவத்தின் சோதனை நிலையங்களில் பரிசோதிக்கப்படும்.

இப்பாதையில் பயணத்தை மேற்கொள்ளும் சகல வாகன சாரதிகள், நடத்துநர்கள், உதவியாளர்கள், பயணிகள் யாவரும் இச் செயற்பாட்டிற்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டப்படுகின்றனர். இத்தகவல் யாழ. மாவட்ட கட்டளைத்தளபதியினால் நேற்று மாலை (17.12.2009) யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்ட

Wednesday, December 16, 2009

இலங்கை அரசின் துரோகமும் வஞ்சகமும்

விடுதலைப்புலிகள்


துரோகமும் வஞ்சகமும் வெகுசீக்கிரமே வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பார்கள். அதுவும், சேர்ந்து சதி செய்தவர்களுக்குள் சண்டை ஆரம்பித்துவிட்டால் இன்னும் வேகமாகவே வெளிவரும். அதிகாரப் பங்கீட்டு ஆசையில், மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் சரத் ஃபொன்சேகாவுக்கும் ஏற்பட்ட மோதலில், பல்வேறு ரகசியங்களைத் தினமும் வெளியிடுகிறார் சரத் ஃபொன்சேகா. 'நான் ராணுவப் புரட்சி செய்யப்போவதாகச் சந்தேகப்பட்டு, இந்தியாவின் உதவியை மகிந்தா கேட்டார். இந்தியக் கடற்படை நமது எல்லையில் அக்டோபர் 15-ம் தேதி காத்திருந்தது' என்பது சரத் வீசிய முதலாவது அஸ்திரம். உடனே, அதிர்ச்சியில் அதிர்ந்த இந்தியா, 'அப்படி எதுவும் நடக்கவில்லை' என்று மறுத்தது. அடித்துப் புரண்டு கொழும்புக்கு ஓடினார் அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

இப்போது இரண்டாவது அஸ்திரத்தை வீசியிருக்கிறார் சரத். மனசாட்சியுள்ள அனைவர் மனதையும் திடுக்கிடவைக்கும் கோரக் கொலையாக நடந்த சம்பவம் அது. புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன், சமாதானச் செயலர் புலித்தேவன், முக்கியத் தளபதி ரமேஷ் ஆகிய மூன்று பேருடன் அவர்கள் குடும்பத்தினரும் இணைந்து வெள்ளைக் கொடியைக் கையில் தாங்கிச் சரணடைவதற்காக நடந்து வரும்போது நாலாபுறமும் இருந்து பாய்ந்து வந்த அலுமினியக் குண்டுகள் அவர்களைச் சல்லடையாகக் துளைத்தெறிந்த சம்பவம், சமீபகாலச் சரித்திரத்தில் வேறு எங்கும் நடக்காத துரோகக் கதை. வெள்ளைக் கொடியில் ரத்தச் சிதறல்கள் விழுந்ததை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்தன. மனித உரிமை அமைப்புகள் இதைக் கண்டித்தன. 'அவர்கள் சமாதானத்துக்காக வரவில்லை' என்று சிங்கள அதிகாரிகள் மறுத்தார்கள். இன்று அரசியலில் குதித்து, 'அடுத்த ஜனாதிபதி நான்தான்' என்ற கனவில் மிதந்துகொண்டு இருக்கும் சரத் ஃபொன்சேகா, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். "நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் நார்வே மற்றும் வெளிநாட்டுத் தரப்புகள் மூலமாகச் சரணடையப் போவதை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷேவுக்குச் சொன்னார்கள். இந்தத் தகவலை கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பசில் சொல்லியிருக்கிறார். அதன்படி வெள்ளைக் கொடியும் வெள்ளை ஆடையும் அணிந்து இவர்கள் மே 17-ம் தேதி அதிகாலை சரணடையலாம் என்று சொல்லப்பட்டது. அப்போது 58-வது படையணித் தளபதியான சவேந்திர சில்வாவுக்கு கோத்தபய ராஜபக்ஷே ஓர் உத்தரவு போட்டார். 'யாரும் சரணடையக் கூடாது. அனைவரையும் சுட்டுக் கொல்லுங்கள்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி அனைவரும் கொல்லப்பட்டார்கள்"- இதுதான் சரத் விவரிக்கும் செய்தி. இலங்கையின் போர்க் குற்றத்துக்கு இதைவிட முக்கியமான ஆதாரம் வேறு தேவையில்லை. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. 'நான் அப்படிச் சொல்லவே இல்லை!' என்று மறுத்திருக்கிறார் ஃபொன்சேகா.

இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவருக்குமே உள்காய்ச்சல் ஆரம்பித்திருக்கிறது. இதுபற்றி சிங்கள ராணுவத்தின் தளபதிகள் கருத்துச் சொல்ல மறுத்துள்ளார்கள். 58-வது படையணித் தளபதி சவேந்திர சில்வாவும் கருத்துச் சொல்ல மறுத்துள்ளார். 'புலிகள் சரணைடையப் போகும் தகவலை எனக்குத் தொலைபேசி மூலம் சொல்லியிருந்தார்கள்!' என்கிறார் நார்வே சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சோல்கிம். "நார்வேயிடம் இருந்து புலிகள் சரணடைவது தொடர்பாக எந்தத் தகவலையும் நான் பெறவில்லை!" என்று பசில் ராஜபக்ஷே மறுத்திருக்கிறார். இப்படி வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது உலக சமுதாயத்தின் முன் மறைக்கப்படுகிறது. ஆனால், அந்தக் கொலைக்கு முக்கியமான சாட்சியாக 'சண்டே டைம்ஸ்' செய்தியாளர் மேரி கெல்வின் இருக்கிறார். உண்மையில் அன்று நடந்தது என்ன என்பதை அவர் உலகத்தின் முன்னால் சொல்லிவிட்டார்.

"இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் கடைசியாக புலிகள் நிலைகொண்டு இருந்த மிகச் சிறிய காட்டுப் பகுதியில் இருந்து மே 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் எனக்கு சேட்டிலைட் போனில் அழைப்பு வந்தது. இயந்திரத் துப்பாக்கி சத்தங்களைப் பின்புறத்தில் என்னால் கேட்க முடிந்தது. எட்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு நடேசன், புலித்தேவனைத் தெரியும். அவர்களும் ஏனைய 300 போராளிகளும் அவர்களது குடும்பங்களும் தங்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சியாக என்னிடம் பேசினார்கள். 'ஆயுதங்களைக் கீழே போட நாங்கள் தயார். எங்களது பாதுகாப்புக்கு அமெரிக்கா அல்லது பிரிட்டன் உத்தரவாதம் தர வேண்டும். தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை முன் வைக்க வேண்டும் ஆகிய மூன்று நிபந்தனைகளுடன் சரணடையத் தயார்' என்று நடேசன் என்னிடம் சொன்னார்.

அமெரிக்கா, பிரிட்டன் அதிகாரிகளிடம் பேசிய நான், அப்போது கொழும்பில் இருந்த ஐ.நா. சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியாரிடம் பேசினேன். அவர் இந்தத் தகவலை இலங்கை அரசுக்குச் சொல்வதாகச் சொன்னார். இது நடேசனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பதுங்கு குழிக்குள் சிரித்தபடி தாங்கள் இருக்கும் படத்தை எடுத்து புலித்தேவன் எனக்கு அனுப்பிவைத்தார். அதன்பிறகு எந்தத் தகவலும் இல்லை. அதிகாலை ஆகிவிட்டது. 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள்' என்று நம்பியாரிடம் மீண்டும் சொன்னேன். 'நான் ஜனாதிபதியிடம் பேசிவிட்டேன். வெள்ளைக் கொடியைப் பிடித்தபடி அவர்கள் வந்தால் போதும்' என்று நம்பியார் என்னிடம் சொன்னார். லண்டனில் இருந்து நடேசனுக்கு போன் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து அவருக்கு சொல்லச் சொன்னேன். அவர்களாலும் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால், அதற்குள் அங்கு எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அன்று மாலை அவர்களது உடல்களைத் தான் டி.வி-யில் பார்த்தேன்.

இதற்கிடையில் இலங்கை எம்.பி. ஒருவரை நடேசன் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவர் ஜனாதிபதிக்குப் பேசியிருக்கிறார். சரணடைந் தால் முழு பாதுகாப்புடன் நடத்தப்படுவார்கள் என்று அவரும் சொல்லியிருக்கிறார். அதன்படி நம்பிக்கையுடன் நடந்து போயிருக்கிறார் நடேசன். ஆனால், 6.20 மணிக்கு அனைத்தும் முடிந்தது. சில பயங்கரவாத நடவடிக்கைகளால் புலிகளைச் சர்வதேச நாடுகள் தடை செய்திருந்தாலும், நடேசனும் புலித்தேவனும் தமிழர் உரிமைப் பிரச்னைக்கு ஓர் அரசியல் தீர்வையே விரும்பியிருந்தார்கள். அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தமிழர்களுக்கு நம்பிக்கையான அரசியல் தலைவராகி இருப்பார்கள்!" என்று சொல்லியிருக்கிறார் மேரி கெல்வின்.

நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் சுமார் 300 பேர் சரணடைய வந்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்ததும் ராணுவம் சுட ஆரம்பித்தது. இதில் நான்கைந்து பேர் மட்டுமே தப்பிக்க முடிந்ததாம். நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணி. ராணுவம் சுட்டதைப் பார்த்த அவர், சிங்களத்தில் கத்தியிருக்கிறார். "நடேசன் சரணடைய வருகிறார். அவரை ஏன் சுடுகிறாய்?" என்று கேட்டிருக்கிறார். அந்த நொடியில் பறந்து வந்த குண்டு அவரையும் பலி வாங்கியது. புலிகளிடம் ஆறு சிங்கள் ராணுவ வீரர்கள் பணயக் கைதிகளாக ஐந்து ஆண்டுகளாக இருந்தார்கள்.இனி தப்பிக்க வழியில்லை என்று தெரிந்ததும் மே 15-ம் தேதி அதிகாலையில் அந்த ஆறு பேரையும் அனுப்பிவைத்தார்கள் புலிகள். ஆனால், நடேசனின் மனைவி சிங்களப் பெண்மணி என்று தெரிந்தே கொன்றது ராணுவம். "இந்த அரக்கத்தனத்தில் தனக்குப் பங்கு இல்லை. மேலும், கடைசி மூன்று நாட்கள் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது" என்கிறார் ஃபொன்சேகா. அப்படியானால், மூன்று நாட்கள் நடந்தவை உலகத்தின் முன்னால் நிரூபிக்கத்தக்க போர்க்குற்றங்களாக இருப்பதால், அவர் தப்பிக்க முயற்சிக்கிறார்.

இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமை அமைப்பான பி.யு.சி.எல்-லின் தமிழகப் பொறுப்பாளராக இருக்கும் வழக்கறிஞர் சுரேஷ், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணங்களைச் சேகரித்து, உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுசேர்க்கும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். "வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றார்கள் என்று நாங்கள் சொன்னபோது நம்ப மறுத்தார்கள். ஆனால், இன்று சரத் ஃபொன்சேகாவே ஒப்புக்கொண்டுவிட்டார். மகிந்தாவுக்கும் ஃபொன்சேகாவுக்கும் நடக்கும் உள்சண்டையால் இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமை அறிக்கைப்படியும் ஜெனிவா வார் கன்வென்ஷன்படியும் நடேசன் உள்ளிட்ட சரண் அடைந்த புலிகள் கொல்லப்பட்டது மாபெரும் குற்றம். போர்ச் சூழலில் தொடர்புடைய எதிர்த்தரப்பினர் சரணடையும்போது அவர்களது உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் உண்டு. அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்று இருக்கிறது. நடேசனுடன் அப்பாவிப் பொதுமக்களும் பெண்களும் போயிருக்கிறார்கள். அவர்களும் சுடப் பட்டுள்ளார்கள். எனவே, இவை அப்பட்டமான மனித உரிமை மீறல். போர்க்குற்றம்தான். அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் நடக்க இருக்கும் கூட்டத்தில் இதைப் பதிவு செய்வேன்!" என்று சொல்கிறார் சுரேஷ்.

இலங்கைத் தேர்தல் முடிவதற்கு முன் இன்னும் எத்தனை கோரங்கள் வெளியில் வந்து உலகை உலுக்கப்போகின்றவோ?! அப்போதும்கூட உலக நாடுகளிடம் மயான அமைதிதான் நிலவுமோ என்னவோ?!

Tuesday, December 15, 2009

இறுதிக்கட்டப் போர் ரகசியங்கள்




ஒட்டிக் கிடந்தவர்கள் முட்டிக் கொள்வதன் விளைவாக, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போர் ரகசியங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனச் சொல்லி, அதற்கான சூழலையும் விளக்கி வந்தது ஜூ.வி.! இதோ அரசியலில் குதித்திருக்கும் ஃபொன்சேகா, தன் முன்னாள் நண்பர் ராஜபக்ஷேவுக்கு எதிராகத் திருவாய் மலரத் தொடங்கிவிட்டார்!

இது வரை தமிழ் உணர்வாளர்கள் கூறி வந்த குற்றச்சாட்டுகளை, கூட்டுக் கொடுமை நடத்தியவர்களில் ஒருவரான ஃபொன்சேகாவே சொல்லியிருப்பதுதான் இதில் விசேஷம்!

கடந்த 11-ம் தேதி கட்டுப்பணம் (வேட்பாளர் டெபாசிட்) செலுத்திய ஃபொன்சேகா, உடனே ஐ.தே.முன்னணி தலைவர்களுடன் பிரசார வியூகம் பற்றி விவாதிக்கத் தொடங்கி விட்டார். அதில், 'எப்படியும் சிங்கள வாக்குகள் பாதி நமக்கு வந்து விடும். தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைப்போம். அதன்படி, இறுதிக்கட்ட யுத்த விவகாரங்களை வைத்து அரசியல்நடத்துவது தான் தோதான அணுகுமுறையாக இருக்கும்!' என முடிவெடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், கொழும்புவில் இருக்கும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் நம்மிடம் சில விஷயங்களை முன்வைத்தனர்.

''போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், ராணுவ அதிரடிப் படைப்பிரிவு தளபதி ரமேஷ் ஆகியோர் ராணுவத்திடம் சரணடைவதற்காக செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாகவும், நார்வே தூதுவர் எரிக் சோல்கிம்

மூலமாகவும் சில முயற்சிகளை மேற்கொண்டது உண்மைதான். மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேலின் தோழியும், புலிகள் இயக்கத்துக்கு சில காலம் சர்வதேசத் தொடர்புகளின் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டவருமான கெவின் என்பவரும் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். இதில் எரிக், அதிபரின் ஆலோசகரான பசிலிடம் பேசிய பிறகு, பசில் போய் அதிபரிடம் பேசினார். கிட்டத்தட்ட 10,000 புலிகள் ராணுவத்திடம் சரணடையும் பட்சத்தில், அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதாக அதிபரும் அனுமதியளித்தார். இதன்படிதான், 58-வது படையணியின் தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவிடம் இவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் என உத்தரவு வந்திருக்கிறது.

மே 17-ம் தேதி அதிகாலை வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் வெள்ளையுடை அணிந்து, வெள்ளைக் கொடிகளைத் தாங்கியவாறு அவர்கள் வெளியில் வந்தனர். இந்த நேரத்தில் இந்த விஷயம் கோத்தபயவுக்கு தெரியவும், சவேந்திர சில்வாவை அழைத்து எல்லோரையும் சுட்டுக் கொல்லும்படி அவர்தான் உத்தரவிட்டி ருக்கிறார். அதன்படியே, அத்தனை பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது, இதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளார் ஃபொன்சேகா. ராணுவத் தளபதியான தான், அப்போது களத்தில் இல்லை என்பதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்!'' என்றார்கள்.

ஃபொன்சேகாவின் இந்த அதிரடியைத் தொடர்ந்து மீடியாக்களை சந்தித்திருக்கிறார் அமைச்சர் மகிந்தா சமரசிங்கே. ''ஃபொன்சேகா தேசத்துரோகி ஆகி விட்டார். போரின்போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த யாரையும் ராணுவம் கொல்லவில்லை என கடந்த ஜூலை 10-ம் தேதி ஃபொன்சேகாவே ஓர் அறிக்கையில் கூறியிருந்தார். இப்போது முரண்பட்டு வேறு தகவலைச் சொல்வதால், மக்களுக்கு அவர் மீதான நம்பகத்தன்மை குறைவதுதான் நடக்கும்!'' என பாய்ந்திருக்கிறார்.

இலங்கை அரசு தரப்பின் கிடுகிடுப்பை ரசித்தபடி இருக்கும் 'புதிய அரசியல்வாதி' ஃபொன்சேகா, அடுத்தடுத்து மேலும் சில பிரசார குண்டுகளை போடவும் தயாராக இருக்கிறாராம். இது தொடர்பாக ஐ.தே.க-வின் எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோ
''ஃபொன்சேகா, சாதாரணமான ஒரு விஷயத்தைத் தான் முதல்ல சொல்லியிருக்காரு. அடுத்து, கடற்படை தளபதி சூசையின் மனைவி குடும்பத்துடன் கைது செய்யப்பட்டபோது நடந்த விஷயங்கள், 57-வது படைப்பிரிவு தலைமையகத்தில் வைத்து பொட்டு அம்மானின் குடும்பத்துக்கு நிகழ்ந்த கொடூரம், புலிகளின் முக்கியக் கட்டளைத் தளபதிகள் 67 பேர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமை, தற்போது ஃபோர்த் ஃப்ளோரில் பாலகுமாரன் உள்ளிட்ட புலிகளின் அரசியல்பிரிவு தலைவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், மாணிக் ஃபார்ம் முகாமில் ஒரே நேரத்தில் 500 இளம் தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயங்கரம், பிரபாகரனுக்கு இறுதி நிமிடங்களில் நடந்த கொடூரங்கள்... இப்படி வரிசையாக யுத்த ரகசியங்களை வகைப்படுத்தி வைத்திருக்கிறார் ஃபொன்சேகா. இவை தொடர்பான ஒலி நாடாக்களும், சிங்கள ராணுவத்தினரின் செல்போன் பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட சி.டி-க்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இது தவிர, எந்தக் குற்றமும் செய்யாத, பாவமும் அறியாத அப்பாவித் தமிழர்கள் 2 லட்சம் பேரை போரில் கொல்ல வேண்டிய நெருக்கடி ஏன் வந்தது? அந்த உத்தரவைக் கொடுத்தது யார்? இந்தக் கேள்விகளுக்கும் ஃபொன்சேகா சில தெளிவுகளை ஏற்படுத்துவார்! நடந்த விஷயங்களில் சிலவற்றுக்குத் தானும் பொறுப்பேற்று, அதற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கவும் அவர் தயாராகி வருகிறார்!'' என்கிறார்கள். ஃபொன்சேகா சொல்வதை தமிழ் மக்கள் அப்படியே நம்புவார்களா, தெரியாது! ஆனால், மோதிக் கொள்ளும் இரண்டு பெருந்தலைகளும் மாறி மாறி உண்மைகளை வெளியிடும்போது, ஈழத்துக் கொடுமை குறித்து இன்னும் பல வயிற்றெரிச்சலான காட்சிகள் நம்முன் விரியும். தாங்கிக் கொள்ளத் தயாராவோம்!

தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன



தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிறிதொரு இடத்தில் இவ்வாறான சூழ்ச்சி சதிவலை காரணமாக பாலச்சந்திரன் உட்பட, துவாரகாவையும் இலங்கை இராணுவத்தினர் கொடூரமாக கொலைசெய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. துவாரகா என நம்பப்படும் இந்த உடல் நிர்வாணமாக்கப்பட்டு உள்ளதால், இப்புகைப்படதை நாம் முழுமையாக வெளியிட முடியவில்லை. சர்வதேசத்தின் சதிவலையில், சிக்கி இறுதிநேரத்தில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது. இதில் இந்தியா பெரும் பங்கு வகித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு நாள் கழித்து ஏன் தற்போது இந்தப் படம் வெளிவரவேண்டும் என்ற சந்தேகங்கள் மேலோங்கியுள்ளன. குறிப்பாக தமிழர்களைக் கவர சரத் பொன்சேகா தற்போது புலிகளின் தலைவர்களைச் சுடச்சொன்னது கோத்தபாய தான் என்று கூறிக் கொள்கிறார். தம்மிடம் தவறு இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முயல்கிறார். இன் நிலையில் சிங்கள இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியதாகக் கூறப்படு சில படங்களையும், மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும், சிலர் கசிய விட்டுள்ளனர் என்பதே உண்மை.

இதுபோல பல வீடியோக்கள் இலங்கை இராணுவத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. அனைத்தும் போர்க்களத்தில் இறுதி நாட்களில் எடுக்கப்படவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது உண்மையிலேயே துவாரகாவின் படமா என்பதை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை, அவருடைய மூக்கு மற்றும் புருவம் போன்ற உருவ அடையாளங்கள் சில ஒத்துப்போவதையே இந்த உடலம் காட்டி நிற்கிறது. துவாரகா என்று கூறப்படும் இவ் உடலம் நிர்வாணமாக்கப்பட்டு, கொலைசெய்யபட்டுள்ளமையானது ஒரு ரத்தவெறிபிடித்த சிங்கள காடையரின் மனப்போக்கை நமக்கு உணர்த்தி நிற்கிறது. தமிழ்ப் பெண்களை நிர்வானப்படுத்தி அவர்களை மானபங்கப்படுத்தி சிங்கள இனம் காட்டும் குரோதம் சொல்லில் அடங்காதவை, வார்த்தையால் விவரிக்க முடியாத கொடுமை.

சரணடைய வந்தவர்களை ஈவு இரக்கமின்றி கொலைசெய்யும் சிங்கள வெறியர்களுடனா நாம் இனியும் சமஷ்டி தீர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்வோம் என்றும் நினைக்க முடியும் ? ரத்தம் உறைகிறதா நாம் தமிழனாகப் பிறந்து பட்ட துன்பங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறோமா ? பிரிவுகளிலும் பிளவுகளிலும் ஊறி நிற்கிறோமே அன்றி ஒற்றுமையாக , சிங்களவனை எதிர்க்க இன்னும் தயாரில்லை, இன்னும் எத்தனை எத்தனை எம்குலப் பெண்களின் , சிறுவர்களின் இளைஞர்களின் உடலங்களைப் படமாகக் காட்டப் போகிறதோ சிங்களம்,

இன்று இந்த நாள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் ! தமிழனாக நாம் பிறந்ததால் பட்ட கஷ்டங்கள் போதும், தடைகளை உடைத்து தமிழீழம் காண நாம் ஒன்றுபட்டு செயப்படுவோம் என்று, புலம் பெயர் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமது பிள்ளைகளுக்கு எமது போராட்டம் பற்றிய வரலாற்றை சொல்லி வளர்க்கவேண்டும், புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் கல்வி நிலையங்களிலும் வரலாற்றுப் பாடம் புகட்டப்படவேண்டும், அதில் எமது போராட்ட வரலாறு கற்பிக்கப்படவேண்டும், இன்று நாம் இல்லையேல் எமது பிள்ளைகள் தமிழீழ போராட்டத்தைக் கொண்டுசெல்லவேண்டும் ! இன்று தொடக்கம் 50 ஆண்டுகள் ஆனாலும் சரி போராட்டம் ஒன்று புதிதாக ஆரம்பமாகவேண்டும் ! அதுவே நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாகும்.

Saturday, December 12, 2009

'ராஜபக்ஷே தலையில் இடிவிழ...!'




இலங்கை அதிபர் ராஜபக் ஷேயின் அதிபர் நாற் காலிக்கு வேட்டு வைக்க, அங்கே அதிரடித் திட்டங்களை அரங்கேற்றி வருகிறார் முன்னாள் தளபதி ஃபொன்சேகா. இதற்கிடையில், ராஜபக்ஷேயின் தலையில் 'இடிவிழ வேண்டி'(!)... ராமேஸ்வரத்தில் யாகம் நடத்தத் தயாராகி வருகிறது இந்து மக்கள் கட்சி!

டிசம்பர் 13-ம் தேதியன்று ஏற்பாடாகி இருக்கும்இந்த யாக நிகழ்ச்சியில்... பழ.நெடு மாறன், ம.நடராஜன், மதுரை ஆதீனம், இலங்கை எம்.பி- யான சிவாஜிலிங்கம், ம.தி.மு.க-வின் அரசியல் ஆய்வுமைய செயலாளர் செந்தில் அதிபன், பெங்க ளூரு ராம்சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் சிறகடிப்பதால், பரபரப்பாகிக் கிடக்கிறது ராமேஸ்வரம்.

இந்த வினோத வேள்வி குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சரவண னிடம் பேசினோம். ''உலகம் முழுவதும் நடந்த அறப்போராட்டங்களால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமை களை தடுக்க முடியவில்லை. ராஜபக்ஷேயின்இனவெறி யால் இலங்கையில்

ஆயிரக்கணக் கான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படித்தான் புராண காலத்தில் புத்தநந்தி என்பவர் தலைமையில் புத்த குருமார்கள் ஒன்று கூடி திருஞானசம்பந்தரை கொலை செய்யத் திட்டமிட்டனர். அவர் களின் தலையில் இடிவிழ வேண்டும் என, ஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தை சம்பந்தர் சரணாலயர் இறைவன் முன் பாடினார். அந்த வேண்டுதல் பலித்து, தப்பெண்ணம் கொண்டிருந்த புத்த குருமார்களின் தலையில் இடி விழுந்து அவர்களை அழித்தது. அதுபோல இலங்கை தமிழர்களின் உயிர்பலிக்குக் காரணமான ராஜபக்ஷேயின் தலையில் இடிவிழ வலியுறுத்தி 'தமிழ் திருமுறை ஞானவேள்வி' நடத்துகிறோம். பிறகு, இலங்கையில் அல்லல்படும் தமிழர்களின் நலனுக்காகவும், அங்கு தனித்தமிழ் ஈழம் மலர வேண்டியும் ராமநாதசுவாமிக்கு புனிதநீர் அபிஷேகம் செய்து இறைவனை இறைஞ்சுகிறோம். இதில் தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் பலரும், தமிழ்ப்பற்று கொண்ட சான்றோர்களும் பங்கேற்கின்றனர். முழுக்க முழுக்கத் தமிழிலேயே நடக்க இருக்கும் இந்த வேள்வியை முடக்க போலீஸ் ஏக கெடுபிடிகளை செய்கிறது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு திட்டமிட்டபடி வேள்வியை நடத்தியே தீருவோம்!'' என்றார்.

சமீபத்தில் இலங்கை அரசின் ஏற்பாட்டின் பேரில் அங்குள்ள கோயில் பூசாரிகளுக்கு வழிபாட்டுப் பயிற்சி அளித்துவிட்டு வந்திருக்கும் பஷி சிவராஜனிடம் பேசினோம். ''இந்து மதத்தில் வேதம், ஆகமம், தாந்திரிகம், பௌராணிகம் ஆகிய நான்கு முறைகளில் இறைவனை வழிபடலாம். அதனடிப்படையில் பௌராணிக முறைப்படி நடக்க இருக்கும் இந்த வேள்விக்கு, இறைவன் நல்ல பலன் தருவார். மக்கள் ஒன்றுகூடி மனமுருகி இறைவனுக்கு விடுக்கும் வேண்டுதலின் பலனாக இலங்கையில் தமிழர்கள் சிங்களர்களுக்கு இணையாக வாழ வழி பிறக்கும். ஆனால், தனிப்பட்ட ஒரு மனிதரின் அழிவுக்காக இந்த வேள்வியை பயன்படுத்தாமல் இருந்தால் இன்னும் சிறப்பு பெறும்!'' என்றார்.

தமிழ் திருமுறை ஞானவேள்வி குறித்து மதுரை ஆதீனத்திடம் பேசினோம். ''இலங்கை தமிழர்களின் சுபிட்சத்துக்காக இந்து மக்கள் கட்சியினரால் நடத்தப்படும் வேள்வியில் நானும் பங்கேற்க உள்ளேன். ஆனால், ராஜபக்ஷே அழிய வேண்டும் என்ற வேண்டுதலில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. ஓர் உயிரை பறித்துத்தான் மற்றவர் வாழ வேண்டும் என்பதில் நான் ஏற்புடையவன் அல்ல. எனவே, இலங்கைத் தமிழர்கள் இன்னல்கள் தீர்ந்து இன்புற வாழவேண்டும் என்பதையே இந்த வேள்வியின் மூலம் இறைவனிடம் வேண்டுவேன்!'' என்றார்.

Wednesday, December 9, 2009

மாட்டிக்கிட்ட ஃபொன்சேகா மருமகன்!


சிங்கள ராணுவத்தின் ஹீரோ நானே!'' என்ற அறைகூவலோடு சேர்த்து, ''ராஜபக்ஷே கொடுக்கிற வாக்குறுதிகளைவிட அதிகப்படியான நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்து காட்டுவேன்!'' என்று சொல்லி, தேர்தல் பிரசாரத்தை அட்வான்ஸாகவே தொடங்கிவிட்ட சரத் ஃபொன்சேகாவுக்கு... கெட்ட காலமும் கூடவே தொடங்கி விட்டது!

அவருடைய மருமகன் தனுனா திலகரத்னே இப்போது அமெரிக்க போலீஸின் பிடியில். கப்பென்று அவரைக் கைது செய்திருக்கும் அமெரிக்க அதிகாரிகள், பகீர் ஆயுத வியாபாரக் குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியிருக்கிறார்கள்!

தனுனா திலகரத்னே அமெரிக்காவில் இருந்தபடியே இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை செய்கிறார் என்பது கடந்த சில மாதங்களாக இலங்கைப் பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்த கசப்பான குற்றச்சாட்டு. ''மாமனார் ராணுவத் தளபதி. மருமகன் ஆயுத சப்ளையர். இலங்கை ராணுவத் தரப்பிலிருந்து பறக்கிற ஒவ்வொரு தோட்டா விலிருந்தும், ஷெல்லில் இருந்தும் தளபதியின் மருமகன் லாபமாக அள்ளிக் குவிக்கிறார். தனுனா திலகரத்னே வாட கைக்கு

எடுத்திருந்த கொழும்பு ஃபிளாட்டில் தற்போது தங்கி யிருப்பது அவருடைய ஆயுத ஏஜென்ட்டான அகமது நிசார்!'' என்று கூறி வந்தனர் சில பத்திரிகையாளர்கள். ''உயிரை அர்ப்பணித்து நாட்டுக்காக நாம் ஆயுதம் ஏந்திக் கொண்டிருக்க, தளபதியின் மருமகன் நோகாமல் அதைக் காசாக்குகிறாரா?'' என்ற குமுறல் சிங்கள ராணுவத்தினர் மத்தியில் பரவலாக இருந்து வந்ததாம்.

''அகமது நிசார் போல ராணுவ பேரத்துக்கான ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு ஏஜென்ட்களை தனுனா திலகரத்னே வைத்திருக்கிறார்.. சிங்கள ராணுவததின் விங் கமாண்டர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து உக்ரைனிலிருந்து விமானம் வாங்கியது, ராணுவ உடுப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை சீனாவிலிருந்து வாங்கியது என்று கமிஷன் பேரம் விளையாடியிருக்கிறது!'' என்றும் ராணுவத்தின் மத்தியில் ஒரு பேச்சு இருந்ததாம். அதெல்லாம், தனுனா கைதான நிலையில் இப்போது வெளிப்படையான விவாதமாக அங்கே அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் புள்ளியின் தொடர்புகளும் வெளி வரலாம் என்று கூறப்படுகிறது.

''சிங்கள ராணுவ வீரர்களுக்கான உணவு சப்ளை கான்ட்ராக்டிலும் பலே ஊழல்கள் நடந்திருக்கின்றன. மோசமான பாக்கெட் உணவை மலேஷியத் தமிழர் ஒருவர் மூலமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய் ததில் பல கோடிகள் விளையாடியிருக்கிறது. அந்த உணவை சாப்பிட்டு செரிமானம் இல்லாமல் நம் வீரர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதை சப்ளை செய்த ஏஜென்ட்கள் ஐரோப்பிய உயர்தட்டு ஹோட்டல்களில் ஷாம்பெயின் குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்!'' என்று ராணுவ வீரர்கள் மத்தியில் கொதிப்பான ஒரு கடிதமும் சில காலத்துக்கு முன் சுற்றில் விடப்பட்டிருந்ததாம்.

''வாங்கிய ஷெல்களில் கால்வாசி வெடிக்காமலே போனது. இதனால், விடுதலைப் புலிகள் தாக்கியபோது பதிலடி கொடுக்கத் தவறி அநியாயமாக நமது வீரர்கள் பலர் உயிரைவிட்டிருக்கிறார்கள்!'' என்று இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள் ராணுவத்துக்குள்.

சரத் ஃபொன்சேகாவின் மகள் அப்ஸராவின் கணவர்தான் இந்த தனுனா திலகரத்னே. ஒக்லஹாமா மாநிலத்தில் எட்மன்டு என்ற நகரில் 'ஐ-கார்ப் இன்டர் நேஷனல்' என்ற கம்பெனி நடத்தும் இவர், 'கம்ப்யூட்டர் தொடர்பான பாகங்களை விற்கும் கம்பெனி' என்று போலியாக அரசு அனுமதி பெற்று, கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவந்தார் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு!

இதுபற்றி விஷயம் அறிந்தவர்கள், விளக்கமாக சில தகவல்களைக் கூறினர் -

''அமெரிக்காவில் 'ஹெச்-1 பி' எனும் வேலை விசாவில்தான் இருக்கிறார் தனுனா திலகரத்னே. தன் பார்ட்னர் குவிண்டா குணரத்னேவின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்து, அவரையே தன் புது கம்பெனியின் தலைவராக 'நியமித்து' மோசடி செய்துள்ளார். மேலும், தனுனா வேலை விசாவைப் பெறுவதற்காக, போலியாக ஒரு கம்பெனியை உருவாக்கி அதைக் காட்டியே விசா பெற்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஃபிளவர் மவுன்ட் நகரில் 'பிரிட்டிஷ் போர்னியோ டிஃபன்ஸ்' என்ற நிறுவனத்தையும் துவக்கி, மெக்ஸிகோ வழியாக இலங்கைக்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து ஆயுத சப்ளை செய்ய பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அதை முழுக் குடியுரிமை பெற்ற அமெரிக்கர்கள்தான் செய்ய முடியும். இவரோ வேலைக்கான விசாவில் வந்துவிட்டு, ஆயுத விற்பனை நடத்தியிருக்கிறார்!'' என்கிறார்கள். ''தனுனா திலகரத்னேவின் ஏஜென்ட்டான அகமத் நிசார் மூலம் பெற்ற வெடிகுண்டுகளில் 40 சதவிகிதம் வெத்துவேட்டு!'' என்று இலங்கையின் 58-வது பிரிவு பிரிகேடியர் சூரஜ் பன்சாஜியா மற்றும் பிரிகேடியர் சிவேந்திரா சில்லா ஆகியோர் அதிபர் ராஜபக்ஷேயிடம் புகார் கூறியுள்ளதும் இப்போது கவனிக்கத் தக்கது!

தனுனாவின் பாகிஸ்தான் தொடர்புகளைத் துருவும் அமெரிக்க அரசு, இவருக்கு அல்கொய்தா மற்றும் தாலிபன்கள் தொடர்புண்டா என்றும் ஆராய்வதாக ஒரு தகவல் கிளம்பி ஃபொன்சேகா வட்டாரத்துக்குப் புளியைக் கரைத்திருக்கிறது.

மருமகன் கதை இப்படி டாப் கியரில் போகிறது... மாமனார் ஃபொன்சேகாவோ அமெரிக்காவில் 'கிரீன் கார்டு' உள்ள, நிரந்தர தங்கும் உரிமை பெற்றவர்!

''ஃபொன்சேகாவின் மருமகன் என்ன செய்து வந்தார் என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு இப்போதுதான் தெரிய வந்ததா என்ன? ராஜபக்ஷேவுக்கு எதிரான போர்க் குற்ற வாக்குமூலத்தை ஃபொன்சேகாவிடமிருந்து அழுத்தம் திருத்தமாகப் பெறுவதற்கும், இலங்கை தேர்தல் களத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிராக அவரை வெறியோடு சுழல வைப்பதற்காகவும்தான் மருமகன் விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறது அமெரிக்கா! மருமகன் சேர்த்த பணத்தை ஃபொன்சேகா உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றினார்களா என்ற கோணத்திலும் அடுத்த கட்ட விசாரணையைக் கொண்டு போகக்கூடும். அப்புறமென்ன... ஃபொன்சேகா முழுக்க முழுக்க அமெரிக்கா கீ கொடுக்கும் பொம்மையாக மாற வேண்டியதுதான்!'' என்கிறார்கள் அமெரிக்காவில் உள்ள விவரமான இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள்.

Tuesday, December 8, 2009

ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ நிவாரணக்கிராமங்களுக்கு இன்று விஜஜம்

ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ நிவாரணக்கிராமங்களுக்கு இன்று விஜஜம்,பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளே செல்வதற்கான அனுமதி அனைவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.அருணாச்சலம் முகாமில் அனைத்து மக்களை சந்திக்கும் அவர் அங்கே தமிழில் மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.இதன் காரணமாக அனைத்து கிரவல் வீதிகள் அனைத்தும் தார் போட்டு செப்பனிடப்படுகின்றன.