Thursday, December 17, 2009

யாழிலிருந்து சகல வாகனங்களும் கட்டுப்பாடுகள் இன்றி ஏ-9 பாதையால் பயணிக்க அனுமதி: யாழ்.அரச அதிபர்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஏ-9 பாதை போக்குவரத்துச் சம்பந்தமாகப் பின்வரும் ஏற்பாடுகள் இன்று முதல் (18.12.2009) நடைமுறைக்கு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

1. ஏ-9 பாதையூடாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தனியார் வாகனங்கள் உட்பட சகல வாகனங்களும் காலை 6.00 மணியில் இருந்து பிற்பகல்; 4.00 மணிவரை கட்டுப்பாடுகள் இன்றி பயணத்தை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2. வவுனியா மற்றும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை கட்டுப்பாடுகள் இன்றி யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் சகல பொதுப் பேருந்துகளும் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் சகல தனியார் பேருந்துகளும் யாழ்.தனியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் தொடரணி சேவை இன்றி பஸ்களில் பயணிகள் ஏற்றப்பட்ட உடன் நேரடியாக ஏ-9 பாதையூடாக வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கலாம்.

இவ் வீதியால் பயணிக்கும் வாகனங்கள் தேவைக்கு ஏற்ப இடைக்கிடை இராணுவத்தின் சோதனை நிலையங்களில் பரிசோதிக்கப்படும்.

இப்பாதையில் பயணத்தை மேற்கொள்ளும் சகல வாகன சாரதிகள், நடத்துநர்கள், உதவியாளர்கள், பயணிகள் யாவரும் இச் செயற்பாட்டிற்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டப்படுகின்றனர். இத்தகவல் யாழ. மாவட்ட கட்டளைத்தளபதியினால் நேற்று மாலை (17.12.2009) யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்ட

No comments:

Post a Comment