பெப்ரவரி 1ம் திகதி விடுதலைப்புலிகள் புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான கனரக ஆயுதங்கள் அடங்கிய படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. | |
இதில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா சிறப்பு படைப்பிரிவினர் மன்னாகண்டல் மற்றும் கேப்பாபுலவு ஆகிய பகுதிகளில் முகாமிலிருந்து புதுக்குடியிருப்பை பகுதியை கைப்பற்றும் நோக்கில் இறுதித் தாக்குதலுக்கு தயாராகி இருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் சிறப்பு படையணிகள் இராணுவத்தின் பின்வளங்களை ஊடறுத்து பாரிய முற்றுகைத் தாக்குதலை கடந்த முதலாம் திகதி மேற்கொண்டனர். இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்: இதனை அறிந்த விடுதலைப்புலிகள் அதிகாலை வேளையில் முகாமின் பின்தளப்பகுதி ஊடாக ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதல் 3 ம் திகதிவரை தொடர்ந்தது. இதன்போது படையினர் எதிர்பார்க்காமல் இருந்த நிலையில் நடத்தப்பட்ட திடீர்த்தாக்குதலினால் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பலியாகினர். பல கனரக படையப்பொருட்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. அத்துடன் யுத்த டாங்கிகள், யுத்த துருப்புக் காவிகள், கவச வாகனங்கள், ட்றக் வண்டிகள், உழுபொறிகள் உட்பட சிறீலங்கா படைகளின் 20 வழங்கல் ஊர்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டன.
| |
|
Friday, February 6, 2009
புதுக்குடியிருப்பில் புலிகள் மேற்கொண்ட ஊடறுப்பு தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான படையினர் பலி;பெருமளவில் ஆயுத தளபாடங்கள் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment