Wednesday, February 11, 2009

இலங்கையில் வெற்றி யாருக்கு

ராஜபக்சவும், பிரபாகரனும், இலங்கையும் ஒரே ராசி (விருச்சிகம்) என்று கூறியிருந்தீர்கள். ஜாதக ரீதியான வேறுபாடுகளில் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?

பதில்: மேஷம், ரிஷபம் சேர்ந்து விருச்சிக ராசி பிறந்திருக்கிறதா அல்லது கடகம், கன்னி சேர்ந்து விருச்சிகம் வந்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் மனிதர்களில் எந்த ராசியும், எந்த ராசியும் சேர்ந்து இந்த (குழந்தை) ராசி பிறந்துள்ளது என்பது ரொம்ப முக்கியம்.

இதில் பிரபாகரன் விருச்சிக ராசி, அனுசம் நட்சத்திரம். பொதுவாக அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் கொள்கை/துறையில் உறுதியாக இருப்பார்கள். அது போராடும் துறையாக இருந்தாலும், துறவறம் மேற்கொள்வதாக இருந்தாலும் அதில் பிடிப்புடன் கடைசி வரை இருப்பார்கள். விடுதலை வேட்கையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் போராடி வருவதால்தான் வெற்றி, தோல்வியின்றி ஈழப் போர் நீண்டு கொண்டே செல்கிறது.

கோச்சார கிரகங்களின் படி பார்த்தால் ஒரே ராசிக்காரர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் இருக்கும். ஆனால் பிறக்கும் போது இருக்கக் கூடிய கிரக அமைப்புகளின் படி கணிக்கப்படும் தசா புக்தி பலன்கள் மாறுபடும். இதில் புலிகள் தலைவருக்கு அது சாதகமாக இருக்கிறது.

நவாம்சத்தை வைத்துப் பார்த்தாலும் அந்த நாடு அவருக்கு இடம் கொடுக்கும். புறம் தள்ளுவதற்கான வாய்ப்பு இல்லை.

No comments:

Post a Comment