Friday, January 30, 2009
வன்னி மோதலில் 4 இந்திய இராணுவ வல்லுநர்கள் காயம்
இந்தச் செய்தி முதலில் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த குலோபல் தமிழ் விசன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டதாகவும், இந்தியப் படையினர் 4 பேரும் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டதாகவும் தமிழ்நெட் கூறுகிறது.
இதையடுத்து கொழும்பில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் இந்தச் செய்தியை இன்று (வெள்ளிக்கிழமை) தாங்கள் உறுதிப்படுத்தியாகவும், தகவல் அறியும் உரிமைக்கு சிறிலங்க அரசினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக இந்தியப் படையினர் பற்றிய மேல் விவரங்களை அறிய முடியவில்லை என்றும் தமிழ்நெட் கூறுகிறது.
சிகிச்சைபெற்று வரும் இந்தியப் படையினர் களத்தில் சிறிலங்கப் படையினருக்குத் தேவையான சிறப்பு உதவிகளைச் செய்து வந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து சிறிலங்காவிற்கு இராணுவ பீரங்கிகளும் படையினரும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, அதை எதிர்த்துத் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியப் படையினர் காயமடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியாவில் அமைந்துள்ள சிறிலங்கப் படையினரின் வன்னித் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில், சிறிலங்க விமானப் படையில் பணியாற்றிய இரண்டு இந்திய ராடார் இயக்குநர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழருக்குப் பாதுகாப்பான ஒரு இடமும் பாதுகாப்பில்லை - ஐ.நா.
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை என ஐநா. தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள ஐ.நா மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்டன் விஸ் இலங்கையில் தமிழர்களுக்குப் பாதுகாப்பான பகுதி என்று எதுவுமே இல்லாத நிலையில் அவர்கள் வெளியேறி எங்கே போவார்கள்? எனவே இந்தப் போர் நிறுத்தத்தை புலிகள் ஏற்பதற்கு வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொழும்புவிலிருந்து தொலைபேசி மூலம் பேட்டி அளித்துள்ள கார்டன் விஸ் மேலும் கூறியுள்ளதாவது: போர் நிறுத்தம் தொடர்பான அழைப்புகளுக்கு புலிகள் தரப்பில் இருந்து பதிலே இல்லை. அப்பாவி மக்களை விடுவிக்க 48 மணி நேரம் கெடு விதித்து சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ள போர் நிறுத்தத்திற்கு புலிகள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வன்னித் தமிழர்கள் இந்தப் போர் நிறுத்தத்தை எந்த அளவு வரவேற்பார்கள் என்றும் புரியவில்லை என்றார்.
இதனிடையே போர் பகுதியில் உள்ள குழந்தைகள் மட்டுமே பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்படுவதாக ஐ.நா குழந்தைகள் அமைப்பான் யுனிசெப் அதிகாரி ஒருவர் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் இலட்சக்கணக்கான தமிவர்கள் இராணுவத் தாக்குதலில் சிக்கித் தவிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, அப்பாவி மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது சிறிலங்கா அரசின் கடமை, அதை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
Thursday, January 29, 2009
தமிழ்நாட்டியில் முத்துக்குமார் தியாகசாவு அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
![]() | ![]() |
| |
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார். ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை போகும் இந்திய அரசினைக் கண்டித்து முழக்கம் எழுப்பிய படியே தன் உடலில் மண்ணெணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். உடல் வெந்த நிலையில் மருத்துவமனையில் காவல்துறையால் முத்துக்குமார் சேர்க்கட்டார். கவலைக்கிடமாக இருந்த நிலையில் இவர் பின்னர் உயிரிழந்துள்ளார். முத்துக்குமார் ஒரு ஊடகவியலாளர் எனவும் "பெண்ணே நீ" இதழில் பணியாற்றுகின்றார் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
புலிகளின் சுனாமித் தாக்குதல்
![]() | ![]() |
| |
கல்மடுகுளம் அணைக்கட்டினை உடைத்தெறிந்து அதனூடாக புலிகள் நடத்திய தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ""முல்லைத்தீவை கைப்பற்ற 8 இடங் களிலிருந்து முன்னேறி வருகிற ராணு வத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் ஆலோசித்த போது, கல்மடுகுளம் அணைக்கட்டினை தகர்ப்பதன் மூலம் ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தமுடியும் என்று புலிகளின் கடற்படை தளபதி சூசை யோசனை தெரிவித்துள்ளார். அணையை உடைப்பது மட்டுமல்லாமல் பாய்ந்தோடும் வெள்ளத்தில் படகுகளை செலுத்தி தாக்குதல் நடத்தலாம். இதில் தப்பிக்கும் ராணுவத்தினர் தர்மபுரம் நோக்கித்தான் ஓடி வரவேண்டும். அங்கேயும் அவர்களை வளைத்து தாக்குதல் நடத்தினால்... ராணுவத்திற்கு நிச்சயம் பெரிய இழப்புகள் ஏற்படுமென்றும் சூசை விவரித் துள்ளார். அதாவது படைபலத்தை இழக்காமல், ஆள் சேதமில்லாமல், அணைக்கட்டை உடைத்து எதிரிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதும் ஒருவகை போர் யுக்திதான் என்றும் முக்கிய தளபதிகள் விவாதித்துள்ளனர். இதனை பிரபாகரன் ஒப்புக்கொள்ளவே... அந்த யுக்தி தக்க நேரத்தில் கையாளப்பட்டுள்ளது!'' என்கின்றன வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். அதன்படியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி அறிவிப்பு செய்த இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா, ""விசுவமடு பகுதியில் உள்ள கல்மடு குளம்அணைக்கட்டை புலிகள் வெடிவைத்து தகர்த்துள்ளனர். அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 4 அடி உயரத்திற்கும் மேலாக சீறிப்பாய்ந்துள்ளது வெள்ளம். இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் படையணியினர் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் ராணுவத்திற்கு எவ்வளவு இழப்புகள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அப்பகுதியிலுள்ள படையணியினரோடு தொடர்பு கள் துண்டிக்கப்பட்டுள்ளது'' என்று வெளிப் படையாக அறிவித்தார். இந்த அறிவிப்பு 24, 25 தேதிகள் வரை இலங் கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சம்பவம் குறித்த பரபரப்புகள் அடங்கவில்லை. இதற்கு காரணம்... இந்த சம்பவத்தில் 500-ல் ஆரம்பித்து 1000, 1200, 2000 என ராணுவத்தினர் பெரிய அளவில் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிற செய்தி பரவியதுதான். கல்மடுகுளம் அணைக்கட்டு பற்றி வன்னி பகுதியில் விசாரித்தபோது, ""முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ-35 நெடுஞ்சாலைக்கு தென் மேற்கு பகுதியில் இருக்கிறது விசுவமடுகுளம். இதன் அருகே உள்ளதுதான் கல்மடுகுளம் நீர்த்தேக்கம். ஏ-35 சாலை வழியாக ராமநாதபுரம், தர்மபுரம், விசுவமடுகுளம் ஆகிய பகுதிகளை சுற்றி ஓடுகிற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதுதான் இந்த நீர்த்தேக்கம். இது நாலரை கிலோமீட்டர் சதுர பரப்பளவு கொண்டது. கடந்த மாதம் இப்பகுதியில் பொழிந்த கனமழையால் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. முல்லைத்தீவை முழுமையாக முற்றுகை யிட்டு பல வழிகளில் முன்னேறி வருகிற ராணுவம், கிளிநொச்சிக்கு அருகே உள்ள இரணைமடு விலிருந்து ராமநாதபுரம் வழியாக ஏ-35 நெடுஞ் சாலையை அடைவதற்காக முன்னேறியது. இந்த வழியில் ஏ-35 சாலையை அடையவேண்டுமானால் ராமநாதபுரம் அடுத்துள்ள விசுவமடுகுளத்தை கைப்பற்றி அதனை கடக்க வேண்டும். கடந்த ஒருவார மாக இந்த பகுதியில் சண்டை உக்கிர மாக இரு தரப்புக்கும் நடந்து வருகிறது. இந்த சூழலில்தான் 24-ந்தேதி நள்ளிரவு விசுவமடுகுளத்தை நோக்கி ஆட்லெறி தாக்குதல் நடத்திக்கொண்டே ராணுவம் முன்னேற... நேரம் நள்ளிரவைத் தாண்டி கடந்தது. கல்மடுகுளத்தை கடந்துவிட்டால் விசுவமடு குளத்தை நெருங்கிவிடலாம். கல்மடுகுளம் அணைக்கட்டை நெருங்கத் துவங்கியது ராணுவம். அப்போது நேரம் 1.40. திடீரென்று பெருத்த சத்தத்துடன் அணைக்கட்டு வெடித்து சிதற... திடீரென உருவான சுனாமிபோல் நீர்த்தேக்கத்தின் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. கல்மடுகுளத்தை நெருங்கி வந்த ராணுவத்தினர் இதில் சிக்கிக்கொண்டு தத்தளித்துள்ளனர். அப்போது, நீர்த்தேக்கத்தில் தயாராக 5 படகுகளில் காத்திருந்த தற்கொலை கடற்புலிகள் வெள்ளத்தின் பாய்ச்சலோடு படகுகளை ஆக்ரோஷமாக செலுத்தினர். படகுகளில் வைத்திருந்த ஆட்லெறி ஆயுதங் களை கொண்டு சரமாரியாக தாக்குதலை நடத்தினர். புலிகளின் செயற்கை சுனாமியை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய ராணுவத் தினரால், எதிர்பாராத இந்த தாக்குதலையும் சமாளிக்கமுடியவில்லை. இரவு நேரமென்பதால் தாக்குதல் எங்கிருந்து வருகிறது என்பதை அவர்களால் அவதானிக்கமுடியவில்லை. வெள்ளத்திலும் தாக்குதலிலும் தப்பியவர்கள் கல்மடுகுளத்திற்கு மேலே உள்ள தர்மபுரம் பகுதிக்குள் நுழைய... அங்கு ஏற்கனவே சண்டை நடந்து வருவதால் இவர்களை எதிர் பார்த்திருந்ததுபோல அவர்களை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தி யுள்ளனர் புலிகள். இப்படி இயற்கை சீற்றத்தை உருவாக்கி யும் பாய்ந்து செல்லும் நீரிலே பயணித்து தாக்குதல் நடத்தியும், தப்பிப்பவர் களை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தியும் என ஒரே நிகழ்வில் 3 வித அட்டாக்குகளை நடத்தியிருப்பதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்'' என்று வன்னியிலிருந்து தகவல்கள் கிடைக் கின்றன. புலிகளின் இந்த யுக்தியை ஒப்புகொள்கிற இலங்கை ராணுவத்தினர், ""எங்களுக்கு பெரியளவில் இழப்புகள் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் மருத்துவமனைகளில் கேஷுவாலிட்டி அதிகரித்திருக்கும்'' என்று மறுக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன், ""கல்மடு குளம் அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் ராணுவத்திற்கு பெரியஇழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததையடுத்து கொழும்பிலிருந்து வன்னி பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தது'' என்பதை சுட்டிக்காட்டுகிறார். கல்மடுகுளம் அணைக்கட்டு உடைக் கப்பட்டதில் ராணுவத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்குமோ என்று அதிர்ச்சியடைந்த அதிபர் ராஜபக்சே அவசரம் அவசரமாக சரத்பொன்சேகா உள்ளிட்ட ராணுவ தளபதிகளுடன் தீவிர ஆலோசணை நடத்தி னார். முதல் கட்ட ஆலோசனையில், "ஆணையிறவு பகுதியிலிருந்து 374 படைப் பிரிவுதான் விசுவமடு நோக்கி முன்னகர்வு தாக்குதல்களை நடத்தியது. அந்த படைப்பிரி வில் 3000 படையினர் இருந்துள்ளனர். தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வெள்ளம் அப்பகுதிகளை சூழ்ந்திருப்பதால் தண்ணீர் வடிந்தபிறகுதான் நமக்கான இழப்பு தெரியவரும்' என்று ராணுவத்தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது என்பதாக கொழும்பி லுள்ள ராணுவ வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. இதற்கிடையே கல்மடுகுளம் அணைக் கட்டு உடைக்கப் பட்ட சம்பவத்தில் ராணுவத்திற்கு எதிராக செய்தி எழுதக்கூடாது என்று இலங்கை பத்திரி கைகளை எச்சரித் துள்ளார் அதிபர் ராஜபக்சே. அதனால் பல பத்திரிகைகள் யூகமாக கூட இதனைப்பற்றி எழுதவில்லை. உண்மையில் என்னதான் நடந்தது? என்று புலிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ""அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 1000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 700 உடல்களிலிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தவர் களின் உடல்கள் ராணுவகட்டுப்பாட்டு பகுதிகளில் கிடக்கிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த அதிபர் ராஜபக்சே, இதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி 300 பேரை கொன்றுள்ளார். இத்தனைக்கும் ராஜபக்சே அறிவித்த பாதுகாப்பான பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை நடத்தி தனது பழிவாங்கும் உணர்ச்சியை தணித்துக்கொண்டிருக்கிறார். அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் ராணு வத்தின் இழப்புகள் பற்றி 26-ந்தேதி வெளிப் படையாக அறிவிக்க இருந்தோம். ஆனால் குழந்தைகள், முதியவர்கள், சிறுவர்கள் என 300 பேர் கொல்லப்பட்டிருப்பதால் இந்த மனித அவலம் வெளி உலகத்திற்கு தெரி யாமலே போய்விடுமென்பதால்தான் அணைக் கட்டு விவகாரத்தை அறிவிக்காமல் தவிர்த் துள்ளோம்'' என்று தெரிவிக்கிறது புலிகள் தரப்பு. |
புலிகளின் சுனாமித் தாக்குதல்
![]() | ![]() |
| |
கல்மடுகுளம் அணைக்கட்டினை உடைத்தெறிந்து அதனூடாக புலிகள் நடத்திய தாக்குதலில் 2000-த்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. ""முல்லைத்தீவை கைப்பற்ற 8 இடங் களிலிருந்து முன்னேறி வருகிற ராணு வத்தை எதிர்கொள்வது குறித்து முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் ஆலோசித்த போது, கல்மடுகுளம் அணைக்கட்டினை தகர்ப்பதன் மூலம் ராணுவத்தினருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தமுடியும் என்று புலிகளின் கடற்படை தளபதி சூசை யோசனை தெரிவித்துள்ளார். அணையை உடைப்பது மட்டுமல்லாமல் பாய்ந்தோடும் வெள்ளத்தில் படகுகளை செலுத்தி தாக்குதல் நடத்தலாம். இதில் தப்பிக்கும் ராணுவத்தினர் தர்மபுரம் நோக்கித்தான் ஓடி வரவேண்டும். அங்கேயும் அவர்களை வளைத்து தாக்குதல் நடத்தினால்... ராணுவத்திற்கு நிச்சயம் பெரிய இழப்புகள் ஏற்படுமென்றும் சூசை விவரித் துள்ளார். அதாவது படைபலத்தை இழக்காமல், ஆள் சேதமில்லாமல், அணைக்கட்டை உடைத்து எதிரிகளுக்கு இழப்புகளை ஏற்படுத்துவதும் ஒருவகை போர் யுக்திதான் என்றும் முக்கிய தளபதிகள் விவாதித்துள்ளனர். இதனை பிரபாகரன் ஒப்புக்கொள்ளவே... அந்த யுக்தி தக்க நேரத்தில் கையாளப்பட்டுள்ளது!'' என்கின்றன வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். அதன்படியே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி அறிவிப்பு செய்த இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் உதய நானயக்கரா, ""விசுவமடு பகுதியில் உள்ள கல்மடு குளம்அணைக்கட்டை புலிகள் வெடிவைத்து தகர்த்துள்ளனர். அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 4 அடி உயரத்திற்கும் மேலாக சீறிப்பாய்ந்துள்ளது வெள்ளம். இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் படையணியினர் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் ராணுவத்திற்கு எவ்வளவு இழப்புகள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. அப்பகுதியிலுள்ள படையணியினரோடு தொடர்பு கள் துண்டிக்கப்பட்டுள்ளது'' என்று வெளிப் படையாக அறிவித்தார். இந்த அறிவிப்பு 24, 25 தேதிகள் வரை இலங் கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சம்பவம் குறித்த பரபரப்புகள் அடங்கவில்லை. இதற்கு காரணம்... இந்த சம்பவத்தில் 500-ல் ஆரம்பித்து 1000, 1200, 2000 என ராணுவத்தினர் பெரிய அளவில் கொல்லப்பட்டுவிட்டனர் என்கிற செய்தி பரவியதுதான். கல்மடுகுளம் அணைக்கட்டு பற்றி வன்னி பகுதியில் விசாரித்தபோது, ""முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ-35 நெடுஞ்சாலைக்கு தென் மேற்கு பகுதியில் இருக்கிறது விசுவமடுகுளம். இதன் அருகே உள்ளதுதான் கல்மடுகுளம் நீர்த்தேக்கம். ஏ-35 சாலை வழியாக ராமநாதபுரம், தர்மபுரம், விசுவமடுகுளம் ஆகிய பகுதிகளை சுற்றி ஓடுகிற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதுதான் இந்த நீர்த்தேக்கம். இது நாலரை கிலோமீட்டர் சதுர பரப்பளவு கொண்டது. கடந்த மாதம் இப்பகுதியில் பொழிந்த கனமழையால் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. முல்லைத்தீவை முழுமையாக முற்றுகை யிட்டு பல வழிகளில் முன்னேறி வருகிற ராணுவம், கிளிநொச்சிக்கு அருகே உள்ள இரணைமடு விலிருந்து ராமநாதபுரம் வழியாக ஏ-35 நெடுஞ் சாலையை அடைவதற்காக முன்னேறியது. இந்த வழியில் ஏ-35 சாலையை அடையவேண்டுமானால் ராமநாதபுரம் அடுத்துள்ள விசுவமடுகுளத்தை கைப்பற்றி அதனை கடக்க வேண்டும். கடந்த ஒருவார மாக இந்த பகுதியில் சண்டை உக்கிர மாக இரு தரப்புக்கும் நடந்து வருகிறது. இந்த சூழலில்தான் 24-ந்தேதி நள்ளிரவு விசுவமடுகுளத்தை நோக்கி ஆட்லெறி தாக்குதல் நடத்திக்கொண்டே ராணுவம் முன்னேற... நேரம் நள்ளிரவைத் தாண்டி கடந்தது. கல்மடுகுளத்தை கடந்துவிட்டால் விசுவமடு குளத்தை நெருங்கிவிடலாம். கல்மடுகுளம் அணைக்கட்டை நெருங்கத் துவங்கியது ராணுவம். அப்போது நேரம் 1.40. திடீரென்று பெருத்த சத்தத்துடன் அணைக்கட்டு வெடித்து சிதற... திடீரென உருவான சுனாமிபோல் நீர்த்தேக்கத்தின் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. கல்மடுகுளத்தை நெருங்கி வந்த ராணுவத்தினர் இதில் சிக்கிக்கொண்டு தத்தளித்துள்ளனர். அப்போது, நீர்த்தேக்கத்தில் தயாராக 5 படகுகளில் காத்திருந்த தற்கொலை கடற்புலிகள் வெள்ளத்தின் பாய்ச்சலோடு படகுகளை ஆக்ரோஷமாக செலுத்தினர். படகுகளில் வைத்திருந்த ஆட்லெறி ஆயுதங் களை கொண்டு சரமாரியாக தாக்குதலை நடத்தினர். புலிகளின் செயற்கை சுனாமியை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய ராணுவத் தினரால், எதிர்பாராத இந்த தாக்குதலையும் சமாளிக்கமுடியவில்லை. இரவு நேரமென்பதால் தாக்குதல் எங்கிருந்து வருகிறது என்பதை அவர்களால் அவதானிக்கமுடியவில்லை. வெள்ளத்திலும் தாக்குதலிலும் தப்பியவர்கள் கல்மடுகுளத்திற்கு மேலே உள்ள தர்மபுரம் பகுதிக்குள் நுழைய... அங்கு ஏற்கனவே சண்டை நடந்து வருவதால் இவர்களை எதிர் பார்த்திருந்ததுபோல அவர்களை சுற்றி வளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தி யுள்ளனர் புலிகள். இப்படி இயற்கை சீற்றத்தை உருவாக்கி யும் பாய்ந்து செல்லும் நீரிலே பயணித்து தாக்குதல் நடத்தியும், தப்பிப்பவர் களை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தியும் என ஒரே நிகழ்வில் 3 வித அட்டாக்குகளை நடத்தியிருப்பதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்'' என்று வன்னியிலிருந்து தகவல்கள் கிடைக் கின்றன. புலிகளின் இந்த யுக்தியை ஒப்புகொள்கிற இலங்கை ராணுவத்தினர், ""எங்களுக்கு பெரியளவில் இழப்புகள் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் மருத்துவமனைகளில் கேஷுவாலிட்டி அதிகரித்திருக்கும்'' என்று மறுக்கின்றனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன், ""கல்மடு குளம் அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் ராணுவத்திற்கு பெரியஇழப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததையடுத்து கொழும்பிலிருந்து வன்னி பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தது'' என்பதை சுட்டிக்காட்டுகிறார். கல்மடுகுளம் அணைக்கட்டு உடைக் கப்பட்டதில் ராணுவத்திற்கு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்குமோ என்று அதிர்ச்சியடைந்த அதிபர் ராஜபக்சே அவசரம் அவசரமாக சரத்பொன்சேகா உள்ளிட்ட ராணுவ தளபதிகளுடன் தீவிர ஆலோசணை நடத்தி னார். முதல் கட்ட ஆலோசனையில், "ஆணையிறவு பகுதியிலிருந்து 374 படைப் பிரிவுதான் விசுவமடு நோக்கி முன்னகர்வு தாக்குதல்களை நடத்தியது. அந்த படைப்பிரி வில் 3000 படையினர் இருந்துள்ளனர். தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வெள்ளம் அப்பகுதிகளை சூழ்ந்திருப்பதால் தண்ணீர் வடிந்தபிறகுதான் நமக்கான இழப்பு தெரியவரும்' என்று ராணுவத்தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது என்பதாக கொழும்பி லுள்ள ராணுவ வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. இதற்கிடையே கல்மடுகுளம் அணைக் கட்டு உடைக்கப் பட்ட சம்பவத்தில் ராணுவத்திற்கு எதிராக செய்தி எழுதக்கூடாது என்று இலங்கை பத்திரி கைகளை எச்சரித் துள்ளார் அதிபர் ராஜபக்சே. அதனால் பல பத்திரிகைகள் யூகமாக கூட இதனைப்பற்றி எழுதவில்லை. உண்மையில் என்னதான் நடந்தது? என்று புலிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ""அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் 1000-த்திற்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 700 உடல்களிலிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தவர் களின் உடல்கள் ராணுவகட்டுப்பாட்டு பகுதிகளில் கிடக்கிறது. இதனை அறிந்து ஆத்திரமடைந்த அதிபர் ராஜபக்சே, இதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி 300 பேரை கொன்றுள்ளார். இத்தனைக்கும் ராஜபக்சே அறிவித்த பாதுகாப்பான பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீதே இந்த கொடூர தாக்குதலை நடத்தி தனது பழிவாங்கும் உணர்ச்சியை தணித்துக்கொண்டிருக்கிறார். அணைக்கட்டு உடைக்கப்பட்டதில் ராணு வத்தின் இழப்புகள் பற்றி 26-ந்தேதி வெளிப் படையாக அறிவிக்க இருந்தோம். ஆனால் குழந்தைகள், முதியவர்கள், சிறுவர்கள் என 300 பேர் கொல்லப்பட்டிருப்பதால் இந்த மனித அவலம் வெளி உலகத்திற்கு தெரி யாமலே போய்விடுமென்பதால்தான் அணைக் கட்டு விவகாரத்தை அறிவிக்காமல் தவிர்த் துள்ளோம்'' என்று தெரிவிக்கிறது புலிகள் தரப்பு. |
Tuesday, January 20, 2009
கடற்புலிகளின் தாக்குதலில் டோறா மூழ்கடிப்பு
சிறீலங்கா கடற்படையின் ரோந்து அணி மீது நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் டோறா அதிவேகத் தாக்குதல் கலம் ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.
கடற் கரும்புலிகளால் இந்த சுப்பர் டோறா மூழ்கடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் செய்திகள் தெரிவிக்கின்றன. முழுமையான செய்திகள் பின்னர் அறியத்தரப்படும்.
கண்டுபிடித்தது புலிகளின் விமானமல்ல, காணாமல்போன சிறிலங்காவின் விமானம்


நெத்தலியாற்றில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 35 படையினர் பலி; 60 பேர் காயம்
Saturday, January 17, 2009
தருமபுரத்தில் மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: கவச பீரங்கி ஊர்தியை களத்தில் இறக்கினர் புலிகள்: 51 படையினர் பலி; 150 பேர் க
கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். இம் மோதலின் போது தமது கவச பீரங்கி ஊர்தியையும் விடுதலைப் புலிகள் பாவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரம் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் சிறப்பு தாக்குதல் கொமாண்டோக்கள் கனரக சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்ந்தனர்.
இவர்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இன்று பிற்பகல் 2:00 மணியளவில் படையினரின் நகர்வுகள் யாவும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
[படம்: விடுதலைப் புலிகள்][படம்: விடுதலைப் புலிகள்][படம்: விடுதலைப் புலிகள்][படம்: விடுதலைப் புலிகள்]
இம் மோதலின் போது கவச பீரங்கி ஊர்தியையும் விடுதலைப் புலிகள் பாவித்துள்ளனர்.
இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.
களமுனையில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.
40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி - 01ஆர்பிடி எல்எம்ஜிக்கள் - 02ஆர்பிஜி - 01ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 02ஆர்பிகே எல்எம்ஜி - 01
உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Friday, January 9, 2009
Monday, January 5, 2009
பரந்தனில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம்
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:00 மணி தொடக்கம் மும்முனை முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுகளுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி இன்று பிற்பகல் படையினரின் நகர்வுகளை முறியடித்தனர்.
இதில் சிறிலங்கா படையினர் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.
படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:
பிகே எல்எம்ஜி - 01ஏகே எல்எம்ஜி - 01ஆர்பிஜி - 01ரி-56 ரக துப்பாக்கிகள் - 04
உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக இந்திய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய "றோ"
ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.ஐ. மற்றும் யூ.என்.ஐ. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" பிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்திய ஆங்கில மற்றும் தமிழ் ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்டன.
சிறிலங்கா அரச தரப்பு ஊடகமான டெய்லி நியூசுக்கு சிறிலங்கா படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து:
பரந்தன் மற்றும் கிளிநொச்சியைத் தொடர்ந்து 58 ஆவது படைப் பிரிவினர் பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையில் ஆனையிறவை நோக்கி முன்னேறுகின்றனர்.
ஆனையிறவிலிருந்து 2.5 கிலோ மீற்றர் தொலைவிலேயே படைத்தரப்பு நிற்கிறது.
ஏ-9 பாதையை முழுமையாக கைப்பற்றும் நிலையில் படைத்தரப்பு உள்ளது. 58 மற்றும் 57 ஆவது படையணிகளும் பரந்தன் கிழக்கு மற்றும் கிளிநொச்சியிலிருந்து 5 கிலோ மீற்றர் தொலைவில் முல்லைத்தீவு நோக்கி முன்நகர்ந்துள்ளது.
முல்லைத்தீவு நகரத்தை நோக்கி 59 ஆவது படையணியும் நகர்ந்துள்ளது.
முல்லைத்தீவு நகரின் மையப் பகுதியிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவிலேயே படைத்தரப்பு உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மீட்பு: சிங்கள மாணவர்களுக்கு விளக்கம்
இது தொடர்பாக கல்வி அமைச்சு சகல சிங்கள பாடசாலைகளுக்கும் சுற்று நிருபம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
படைத்தரப்பினது வெற்றி மற்றும் சிங்கள தேசியம் என்பவை குறித்து விளக்கமளிக்குமாறு அந்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை நாள்தோறும் தொடர்கின்றபோதும் அனைத்துலக சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளையும் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
- டிசம்பர் 17 இல் வட்டக்ககச்சி பகுதியில் 4 முறை சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் ஏதிலிகளாயினர்.
- டிசம்பர் 19 இல் முள்ளிவாய்க்கால் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். அதே நாளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் முல்லைத்தீவு பொதுமருத்துவமனை நாசமடைந்தது. மருத்துவப் பணியாளர் இருவரும் காயமடைந்தனர்.
- டிசம்பர் 20 இல் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வட்டக்கச்சியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் குடியிருப்புக்கள் நாசமடைந்தன. இதே நாளில் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புக்களை இலக்கு வைத்து வான்படையினர் 8 குண்டுகளை வீச மீன்பிடி படகுகளும் தளபாடங்களும் அழிந்து போயின.
- டிசம்பர் 25 நத்தார் நாள் கிளிநொச்சி பொது மருத்துவமனையை இலக்கு வைத்து சிறிலங்கா படைத்தரப்பு மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் பலர் உயிர் தப்பினர்.
- டிசம்பர் 27 இல் சிறிலங்கா வான்படையினர் இயக்கச்சி, இரணைமடு மற்றும் வட்டக்கச்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 24 வயது இளம்பெண் கொல்லப்பட்டார். 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். 18 வயது இளம்பெண் இரு கால்களையும் இழந்தார்.
- டிசம்பர் 30 இல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கிளிநொச்சி மருத்துவமனை கடும் சேதமடைந்தது.
- டிசம்பர் 31 இல் சிறிலங்கா படையினர் முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 16 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். கரைச்சி பகுதியில் அதே நாளில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
- ஜனவரி 1 இல் புதுவருடப் பிறப்பு நாளில் மீண்டும் முரசுமோட்டை மற்றும் கண்டாவளை பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.
- ஜனவரி 2 இல் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இரு நோயாளர் காவு வாகனங்களும் 13 பொதுமக்களும் படுகாமயடைந்தனர். அதே நாளில் முரசுமோட்டை 3 ஆம் கட்டையில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
- ஜனவரி 3 ஆம் நாள் வன்னி புளியம்போக்கணை பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.
வன்னிப் பெருநிலப்பரப்பில் 3 இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளக அகதிகளாகி உள்ளனர்.
ஜெனீவா போர் அறமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு இனப்படுகொலையை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவது போர்க்குற்றமாகும். ஆனாலும் இது தொடர்பில் அனைத்துலக சமூகம் தொடர் மௌனம் காத்து வருகிறது. மாறாக சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளை வழங்கி வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சியில் "மாடுகளும் தெரு நாய்களும்" மட்டுமே உள்ளன: சிங்கள ஊடகம்
இது தொடர்பாக சிங்கள ஆங்கில ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்ட கிளிநொச்சி நகருக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொழும்பிலிருந்து அனுராதபுரம் வான்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் உலங்குவானூர்தி மூலம் மாங்குளம் சென்றடைந்தனர். அதன் பின்னர் ஏ-9 வீதி வழியாக கிளிநொச்சி சென்றடைந்தனர்.
கிளிநொச்சி நகரானது கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சற்று தொலைவில் துப்பாக்கிச் சண்டையும் எறிகணை வீச்சு சத்தமும் கேட்டவாறு உள்ளது.
கிளிநொச்சி நகரில் தெருநாய்கள் மட்டுமே திரிந்து கொண்டிருக்கின்றன. கைவிடப்பட்ட கால்நடைகளையும் காண முடிந்தது.
நாளுக்கு நாள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி சுருங்கி வருகிறது என்று கிளிநொச்சி படை நடவடிக்கைக்கு தலைமை வகித்த ஜெகத் டயஸ் கூறினார்.
"விடுதலைப் புலிகளின் இதர பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். பிரபாகரனை விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார் அவர்.
முல்லைத்தீவை கைப்பற்றியதும் வடக்கில் தேர்தல்: டலஸ் அழகப்பெருமா
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
யாழ். குடநாட்டில் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வடபகுதியில் முல்லைத்தீவை படையினர் கைப்பற்றிய பின்னர் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரான ஆறு மாதங்களில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெயர்ந்த 300,000 மக்களை மீளக்குடியமர்ந்தும் நடவடிக்கைகள் மிகவும் பெரிய நடவடிக்கையாக அமையலாம். அதன் பின்னர் மக்கள் கணக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் அங்கு நடத்தப்படும்.
படையினர் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முல்லைத்தீவை கைப்பற்றியதும், அங்கு அரசின் நிர்வாக செயற்பாடுகள் தொடங்கும் என்றார் அவர்.
பேச்சுவார்த்தை மூலம் புலிகளை பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்: ஐ.தே.க.
கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது:
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
படையினர் பெற்ற வெற்றி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இந்த வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம்தான்.
2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து விடுதலை புலிகளை சமாதான பேச்சு நடத்தியதனால்தான் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இன்று படையினரால் மீட்க முடிந்தது.
அப்போது செய்துகொண்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சியும் அமைச்சர்களும் விமர்சித்தார்கள். ஆனால் இன்று அதன் பயனை அவர்கள் அனுபவிக்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இதனை மறந்து விடக்கூடாது. இன்று படையினர் பெற்ற வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் என்றார் அவர்.
100 படையணிகள்- 50 ஆயிரம் படையினர்- 6 ரெஜிமெண்டுகளுடன் முல்லைத்தீவுக்கு செல்கிறோம்: சரத் பொன்சேகா
கொழும்பு ஆங்கில ஊடகமான த நேசனுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
வன்னிப் போர்க்களத்தில் ஈழப் போர் - 4 இல் மிகப் பெரிய சமராக முல்லைத்தீவு சமர் இருக்கும்.
பிரபாகரனுக்கு இரண்டே வழிகள் தான் இப்போது உள்ளன. ஒன்று நாட்டைவிட்டு தப்பியோட வேண்டும். அல்லது தற்கொலை செய்ய வேண்டும். பிரபாகரனை உயிரோடு பிடிப்பது என்பது மிக அதிக சாத்தியமற்றது.
சிறிலங்கா படையானது ஆனையிறவை நோக்கி நகர்கிறது. பரந்தன் மற்றும் முல்லைத்தீவு இடையேயான ஏ-35 வீதியில் முரசுமோட்டையை இலக்கு வைத்திருக்கிறோம்.
விடுதலைப் புலிகளை மீண்டும் ஒன்று சேர விடமாட்டோம் என்றார் சரத் பொன்சேகா.
கொழும்பு தாக்குதல்: சிறிலங்கா வான்படைத் தளபதிக்கு வைக்கப்பட்ட இலக்கா?
அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா வான்படையின் தளபதி ஏயார் மார்சல் றொசான் குணதிலக்க, தலைமையகத்துக்கு திரும்பிய போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியது முதலில் பெண் என அடையாளம் காணப்பட்டது. ஆனால் தாக்குதலை நடத்தியது ஆண் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
Friday, January 2, 2009
கொழும்பில் விமானப்படை அலுவலகம் முன்பாக குண்டு வெடிப்பு
Thursday, January 1, 2009
புதுவருட நாளில் சிறிலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதலில் 6 அப்பாவி பொதுமக்கள் படுகொலை; 27 பேர் காயம்
![]() |
முரசுமோட்டை வெளிக்கண்டல் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வியாழக்கிழமை காலை 8:30 நிமிடத்துக்கும் பின்னர் முற்பகல் 11:30 நிமிடத்துக்கும் மீண்டும் பிற்பகல் 4:30 நிமிடத்துக்கும் என மூன்று தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன. நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் வாழ்ந்து வந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இக்குண்டுத் தாக்குதலை நடத்தின. இதில் பெண் ஒருவர் உட்பட 6 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலின் போது குழந்தைகளும் சிறுவர்களும் பேரவலத்துக்கு உள்ளாகியுள்ளனர். பொதுமக்களின் 17 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன் 9 கடைகள் சேதமடைந்துள்ளன. பயணிகள் பேருந்து ஒன்றும் சேதமாகியுள்ளது. வெள்ளத்தினால் காப்பழிகளில் நீர் நிரம்பியதனால் பொதுமக்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகினர். முரசுமோட்டையில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று நடத்திய தாக்குதலில் 4 பொதுமக்களை படுகொலை செய்துள்ளதுடன் மேலும் 15 பேரை படுகாயப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் அதே பகுதியில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தி 6 பொதுமக்களை படுகொலை செய்துள்ளதுடன் மேலும் 27 பேரை காயப்படுத்தியுள்ளது. நேற்றும் இன்றும் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களின் மூலம் தமிழின அழிப்பினை திட்டமிட்டு மேற்கொண்டு வருவதனையே அதன் இலக்காகக் கொண்டுள்ளதாக வன்னி செய்தியாளர் தெரிவிக்கின்றார். துரைசாமி பிரசாந்தன் (வயது 48) முத்துலிங்கம் செல்வராசா (வயது 28) சரவணமுத்து இராசையா (வயது 67) வேலுப்பிள்ளை அன்ரனி ஜோர்ஜ் (வயது 36) இராசையாக வாசுகி (வயது 28) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். செல்வரட்ணம் (வயது 28) அற்புதராசா (வயது 66) நிர்மலதீபன் (வயது 20) கருநேசன் (வயது 32) தம்பிப்பிள்ளை (வயது 60) ஜெயலட்சுமி (வயது 45) புஸ்பலதா (வயது 55) விஜயகுமார் (வயது 28) நாகேஸ்வரன் (வயது 45) மைக்கல் தீபன் (வயது 17) மைக்கல் (வயது 36) அரிதாஸ் (வயது 28) றஜிந்தன் (வயது 08) சின்னவன் (வயது 16) மகாலிங்கம் (வயது 50) இரதன் (வயது 18) அ.நாகம்மா (வயது 62) சு.ரதி (வயது 30) ஜெயறஞ்சினி (வயது 42) யோகலிங்கம் (வயது 48) விக்கினேஸ்வரன் (வயது 36) ரங்கன் (வயது 26) புஸ்பராசா (வயது 36) விதுரன் (வயது 32) ஆகியோர் காயமடைந்துள்ளனர். பெருமளவில் மக்கள் காயமடைந்த நிலையில் அவசரமாக உயிர் காக்க குருதி தேவைப்படுவதாக தருமபுரத்தில் இயங்கும் கிளிநொச்சி பொதுமருத்துவமனை வேண்டுகோள் விடுத்துள்ளது. |
புலிகளை வெல்ல முடியாது; தனிமைப்படுத்த வேண்டும்: சிறிலங்காவுக்கு அமெரிக்க தூதுவர் அறிவுரை
![]() |
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்கடித்துவிட முடியாது. அரசாங்கம் பேச்சுக்களை நடத்துகிறதா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் அரசாங்கம் அப்படியான திட்டத்தில் இல்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ்த் தரப்பிடம் பேச்சுக்களை நடத்தி ஒரு தீர்வுக்கு அரசாங்கம் முன்வரலாம். இதில் வெற்றி பெற்றுவிட்டால் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம். கொழும்புக்கு நான் வந்தபோது எண்ணற்ற கடத்தல்கள்- காணாமல் போதல்கள் நடைபெற்றன. இப்போது குறிப்பிடும்படியான அளவுக்கு அமைதியாக உள்ளது. அத்தகைய நிகழ்வுகள் இப்போது இங்கு இல்லாமல் போனாலும் கிழக்கு மற்றும் வவுனியாவில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. இராணுவ வழித் தீர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. அரசியல் வழியிலான தீர்வை முன்வைக்காத வரையில் பொதுமக்கள்- உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள். அரசியல் தீர்வை இப்போது முன்வைத்தால் புலிகளை ஒடுக்க உதவியானதாக இருக்கும். சிறிலங்காவின் அனைத்துக் கட்சிக் குழு என்பது தேக்க நிலையடைந்து விட்டது. ஒரு ஆண்டாகவே 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாகவே கூறி வருகிறன்றனர். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் புலிகளுக்கு உதவி செய்யக் கூடிய புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். அனைத்துலக சமூகத்துடனான சிறிலங்காவின் தொடர்பாடல்கள் நல்ல முறையில் உள்ள போதும் வடக்கு பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை. தமிழக முதல்வர் கவலை தெரிவித்திருந்தார். வடபகுதிக்கு உணவு உளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஐ.நா. சபை குழுவை அப்பகுதிக்கு அனுப்பி நிலைமைகளை அறிய அரசாங்கம் உதவ வேண்டும் என்றார் அவர். |
சிங்கள ராணுவத்தின் காம வெறியாட்டம்
இதற்கிடையே நம் மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது ஒரு வீடியோ காட்சி. `இதயபலம் இருந்தால் மட்டும் பாருங்கள்' என்ற எச்சரிக்கையுடன் அதை அனுப்பியிருந்தார் இலங்கை வாசகர் ஒருவர். அந்த வீடியோ காட்சியை நாம் பார்த்தபோது, கிளிநொச்சியில் விழுந்து வெடிக்கும் ஆயிரமாயிரம் குண்டுகளின் அதிர்வை விட நம் நெஞ்சில் பேரதிர்வு!
அந்த வீடியோ காட்சியில் பதுங்கு குழிகளுக்குள் சில பெண்புலிகள் சடலமாக விழுந்து கிடக்கிறார்கள். அ

மீண்டும் கேமரா பெண்புலிகளின் உடல்களைக் காட்டுகிறது. அங்கே அவர்களின் மார்பகம், பிறப்புறுப்புகளில் கத்திமுனையால் ரத்தக் கோலம் போடப்பட்டிருக்கிறது. சற்றுத் தொலைவில் மேலும் இரண்டு பெண்புலிகள் சடலமாகக் கிடக்கிறார்கள். `அந்த உடைகளையும் கழட்டுடா கழட்டுடா' என சிங்கள

சிங்களச் சிப்பாய்களின் இந்த சின்னப்புத்திக்கு என்ன காரணம்? என்ற நம் கேள்விக்கு வன்னிப் போர் நிலவரம் குறித்த சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டு விளக்கமளித்தனர் இலங்கை வட்டாரத்தினர் சிலர்.

``இந்தியாவிலிருந்து போர்நிறுத்தம் என்ற கோரிக்கையுடன் பிரணாப் முகர்ஜி வருவதற்குமுன் எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றிவிட வேண்டும்' என்பது சிங்கள ராணுவத்திற்கு பிரதமர் ராஜபக்ஷே இட்டிருக்கும் கட்டளை. பிரணாப் முகர்ஜியின் வருகை தாமதமாவதற்கும் இதுதான் காரணம். இந்நிலையில், கிளிநொச்சியைப் பிடிக்க, சந்திரசிறீ, ஜெகத், ஜெயசூரிய என்ற மூன்று மேஜர் ஜெனரல்கள், ஐந்து பிரிகேடியர்கள், ஏழு கர்னல்கள், பதினேழு லெப். கர்னல்கள் மற்றும் பல்வேறு டிவிஷன்களைச் சேர்ந்த எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் அங்கே குவிக்கப்பட்டனர்.
கிளிநொச்சியைச் சுற்றி மலையாளபுரம், குஞ்சு பரந்தன், புலிக்குளம், முறிகண்டி ஆகிய நான்கு இடங்களில் நள்ளிரவு தாண்டி இரண்டுமணியளவில் கடும்மழையில், கும்மிருட்டில் இந்தப் படைகள் காத்திருந்தன. யாழ் மாவட்டம் கிளாலியில் ஒரு தாக்குதலைத் தொடங்கி புலிகளின் கவனத்தை அங்கே திசைதிருப்பி விட்டு, இந்த நான்கு முனைகள்

அதன்படி கிளாலியில் போர் தொடங்கியதாகப் போக்குக் காட்டிவிட்டு, இந்த நான்கு இடங்களிலும் புலிகளின் முன்னணி காவலரண்களை உடைத்துக் கொண்டு ஆரவாரமாக முன்னேறியது சிங்கள ராணுவம். அவ்வளவுதான், அவர்கள் மேல் ஆக்ரோஷமாக வந்து அடித்தது ஒரு புலியலை! சுதாரிப்பதற்குள் சுனாமியாக வந்து அடித்தது மற்றொரு அலை. அந்த பலத்த அடியால் பஞ்சு பஞ்சாகச் சிதைந்து, சின்னாபின்னமாகிப் பறந்தது சிங்களப் படை.
அதிகாலை நேரம்! `கிளிநொச்சி பிடிபட்டது' என்ற இன்பச் செய்திக்காக காதுகளைத் தீட்டிக் கொண்டு கொழும்பில் காத்திருந்தது ராணுவ உயர்வட்டம். ஆனால் ஹெலிகாப்டர்கள் இரைச்சலோடு பறக்க, ஆம்புலன்ஸ்கள் அலறிக்கொண்டு அங்குமிங்கும் ஓட, சண்டையின் ரிசல்ட் என்ன என்பது ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்குப் புரிந்து விட்டது.

அடம்பன் பகுதியில் கிளிநொச்சியை நோக்கி முன்னேறிய ஐநூறு பேர் அடங்கிய ராணுவம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. முறிகண்டியில் முழுக்க முழுக்க பெண்புலிகளின் அணி மட்டுமே களமாடி பலத்த உயிர்ச்சேதத்தை ராணுவத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. பல இடங்களில் புலிகளின் மண் அரண்களை ஒட்டிய அகழித் தண்ணீரில் செத்து மிதந்து கொண்டிருந்தன சிங்களச் சிப்பாய்கள் பலரது உடல்கள். எதிர்பார்க்காத மரண அடி இது!
நான்காவது ஈழப்போர் என்று கூறப்படும் இந்தச் சண்டையில் இதுவரை பன்னிரண்டாயிரம் சிப்பாய்கள் பலியாகியிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பி. பாலித்த ரங்க பண்டார என்பவரே கூறியிருக்கிறார். புலிகள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று முழக்கமிடும் இவரே இப்படிக் கூறியிருப்பது அதிர்ச்சியின் உச்சம். இன்னொரு எம்.பி.யான மங்கள சமரவீர என்பவரோ, கொழும்பு, அநுராதபுரம் மருத்துவமனைகளில் முறையே 1,265 மற்றும் 700 படையினர் இருப்பதாகக் கூறியுள்ளார். பொல நறுவை, காலி, காரம்பிட்டிய, களுத்துறை, நாகொட, வவுனியா, மன்னார் மருத்துவமனைகளில் உள்ள ராணுவச் சிப்பாய்களின் கணக்கு அவருக்குக் கிடைக்கவில்லை போலும்.
``இதுவரை பதினான்காயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதில் பன்னிரண்டாயிரம் பேர் புலிகளின் பீரங்கி மற்றும் மார்ட்டர் தாக்குதலில் காயமடைந்தவர்கள். இவர்களில் எட்டாயிரம் பேர் மீண்டும் களத்திற்குச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்'' என்று சொல்லியிருக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகாவின் ஊடகர் திஸ்ஸ ரவீந்திர பெரேரா. இதன்மூலம், எஞ்சிய ஆறாயிரம் பேர் இனி நடமாட முடியாதவர்கள் என அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு `தெளிவாக' அடிவாங்கிய பிறகும் `கிளிநொச்சியைப் பிடித்தே தீருவோம்' என்று கொழும்பில் பாதுகாப்பாக உள்ள அரசு உயர்வட்டம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்க, களத்தில் தொடர்ந்து அடிவாங்கும் ராணுவத்தினரோ ஆற்றமுடியாத ஆதங்கத்தில் இருக்கிறார்கள். அந்த வெறித்தனம், கோபம், கொந்தளிப்பைத்தான் வீரமரணமடைந்த பெண்புலிகளிடம் அவர்கள் `காட்டி' வருகிறார்கள். இப்படிச் சில்லுண்டித்தனம் செய்வதற்காகவே சிங்கள சிப்பாய்கள் பலர் சிறிய ரக கேமராக்களைச் சொந்தமாக வைத்திருக்கிறார்கள்'' என்றார்.
கடந்த வாரம் வாங்கிய உச்சகட்ட அடிக்குப் பிறகு வான்வழித்தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கிறது இலங்கைப்படை. பெரும்பாலும் இரவுநேரத்தில் பறந்து முதலில் ஒரு வெளிச்ச குண்டையும், பிறகு நிஜ குண்டையும் அது வீசிவருகிறது. முன்பு விமானத் தாக்குதல்களின் போது வன்னித் தமிழர்களுக்குப் பதுங்கு குழிகள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தன. இப்போது அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. `பாராசூட் குண்டு' என்ற பெயரில் விமானப்படை வீசும் புதுவகை குண்டுகள் தரையிலிருந்து மேலே ஐம்பது மீட்டர் தொலைவிலேயே வெடித்துச்சிதறி கீழே விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பாராசூட் குண்டு விழுந்து வெடித்தால் தரையில் படுத்திருப்பவர்கள், பதுங்கு குழிகளில் இருப்பவர்கள் கூட தப்ப முடியாது. கடந்த வியாழனன்று விசுவமடு என்ற இடத்தில் வீசப்பட்ட பாராசூட் குண்டால் பல வீடுகள் சேதமாகின. ஓடிப் பதுங்க முடியாத எண்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் கொத்துக்கொத்தாக மடிந்து போயின.
இதற்கிடையே புலிகள் அரசியல் பிரிவுத் தலைவரான நடேசன், ``வன்னி நிலப் பரப்பிற்கு ஊடாக வரும் ராணுவத்தினரை மீள திரும்ப விடுவதற்கில்லை. அந்த சபதத்தை ஏற்று புலிகள் நிற்கிறார்கள். இது இறுதியான காலகட்டம்'' என்று பேசி, ராஜபக்ஷே தரப்புக்கு மேலும் பீதியைக் கிளப்பி விட்டிருக்கிறார்.
நிலைமை இவ்வாறிருக்க, புலிகளின் பிரதம ஆயுத முகவரான கண்ணாடி பத்மன் (கே.பி.) என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், அவர் பங்குக்கு ஓர் அதிரடியை நடத்திக் காட்டியிருக்கிறார். மூன்று புலி பிரதிநிதிகளை கனடாவிலிருந்து உக்ரேன் நாட்டுக்கு அனுப்பி, அதிநவீன ஆயுதங்களை வாங்கிய அவர், ஒரு கப்பல் மூலம் அவற்றை முல்லைத்தீவு கடல்பகுதியில் மர்மமான முறையில் இறக்கிக் காட்டியிருக்கிறார். தகவலை தாமதமாகத் தெரிந்து, இலங்கை விமானப்படை மற்றும் கடற்படைக் கப்பல்கள் அங்கே விரைந்த போது அந்த `ஆயுதக் கப்பல்' மாயமாகி விட்டது. அதில் அதிநவீனரக ஆயுதங்களைத் தவிர, புலிகளின் விமானப் படைக்குத் தேவையான எரிபொருளும் வந்து இறங்கியிருப்பதாகக் கேள்வி. இலங்கைப் படையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு புலிகள் எப்படி ஆயுதங்களை இறக்கினார்கள் என்று புரியாமல் விழிக்கிறார்கள் சிங்கள அதிகாரிகள்.
இந்தநிலையில,் கடந்த சனிக்கிழமை காலை ஐந்து மணியளவில் முல்லைத்தீவை நோக்கி பெரும்படையை நகர்த்தி அங்கும் முதுகு முறிபட்டுத் தவிக்கிறது சிங்கள ராணுவம். அங்கு நடந்த சண்டையில் அறுபது ராணுவத்தினர் பரலோக பிராப்தியடைந்து, எழுபத்தைந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் விமான குண்டுவீச்சு நடத்தியிருக்கிறது இலங்கைப்படை.
வன்னிப் போர் உச்சகட்ட நிலையை அடைந்திருக்கும் இந்தநிலையில், இந்திய `ரா' உளவு அமைப்பின் முன்னாள் செயலாளரான பி.ராமன், ``ராணுவத்தினருக்கு மரண முற்றுகைக் களமாக கிளிநொச்சி இருக்கிறது'' என்று கருத்துக் கூறியிருக்கிறார்.
``இனிமேலும் தாங்காது என்ற நிலையில் தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன் `போர் நிறுத்தம்' என்று இலங்கை அரசு பெருங்குரலெடுத்து கத்தப்போவது நிஜம்'' என்கிறார்கள் வன்னிப் போரை உன்னிப்பாக கவனித்து வரும் போர்க்கள அவதானிகள். நாமும் அதைப் பார்க்கலாம்.