Tuesday, January 20, 2009

கண்டுபிடித்தது புலிகளின் விமானமல்ல, காணாமல்போன சிறிலங்காவின் விமானம்



இரணைமடுக்குள அணைக்கட்டுப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த சனிக்கிழமையன்று (17) தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் என சிறிலங்கா பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தற்போது அது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானம்தான் என்பதை சிறிலங்கா கண்டுபிடித்துள்ளது.


சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றுக்குரியன என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இன்று தெரிவித்தது. புலிகளின் விமானமொன்றின் சிதைவுகளை இரணைமடுவில் தாம் கண்டுபிடித்துள்ளதாக முன்னர் தாம் வெளியிட்ட செய்தி தவறு என்றும் அச்சிதைவுகள் சில வருடங்களுக்கு முன் வீழ்த்தப்பட்ட சிறிலங்கா வான்படை விமானத்தினதே என்றும் சிறிலங்கா படைகள் அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment