![]() |
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை 6:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் மூலம் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலினால் படையினர் பலத்த இழப்புக்களுடன் அவர்கள் கைப்பற்றியிருந்த அரண் பகுதியை கைவிட்டு ஓடினர். இதன் பின்னர் அந்த இரண்டு கிலோ மீற்றர் நீளமான முன்னரண் பகுதி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது. இதில் சிறிலங்கா படைத்தரப்பில் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடைப்பட்ட களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன. இந்த அதிரடித் தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 38 உடலங்கள் இரண்டு கட்டங்களாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று எடுக்கப்பட்ட 15 உடலங்களும் நாளை கையளிக்கப்படும் என வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. |
Sunday, December 21, 2008
சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர் முன்னரண் விடுதலைப் புலிகளால் மீட்பு: 60 படையினர் பலி; 150 பேர் காயம்; 15 உடலங்கள் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment