Wednesday, December 10, 2008

முள்ளியவளையில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: அதிர்ச்சியில் முதியவர் பலி



முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலின் அதிர்ச்சியில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

மணலாறில் நிலைகொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை முள்ளியவளை மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து தொடரான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் எறிகணைகள் மக்களின் வாழ்விடங்கள் மீது வீழ்ந்து வெடித்ததால் முதலாம் வட்டாரம் முள்ளியவளையைச் சேர்ந்த இராசையா பரமேஸ்வரி (வயது 70) என்பவர் உயிரிழந்துள்ளார்.

No comments:

Post a Comment