![]() |
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: அளம்மில் பகுதியில் இருந்து சிறிலங்கா படையினர் முல்லைத்தீவை நோக்கி நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடன் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி பிற்பகல் 1:00 மணியளவில் படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர். இதில் சிறிலங்கா படையினர் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 16 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:
உள்ளிட்ட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் சிறிலங்கா படையினர் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30பேர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர். |
Monday, December 29, 2008
முல்லைத்தீவை நோக்கிய படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 65 படையினர் பலி; 120 பேர் காயம்; 17 உடலங்கள் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment