Wednesday, March 18, 2009

வித்தியாதரனுக்கு 3 மாத தடுப்புக் காவல் உத்தரவு


கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மரணச்சடங்கொன்றில் வைத்து கடத்தப்பட்டு பின்னர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட பிரபல ஊடகவிலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று புறக்கோட்டை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வித்தியாதரன்
மீது தொடர் விசாரணைகள் இடம்பெறுவதனால் அவரது தடுப்புக் காவலை நீடிக்குமாறு காவற்துறையினர் வலியுறுத்தியதை அடுத்து நீதவான் ஜெகான் பலப்பிட்டிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவுஸ்ரேலிய எஸ்பிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் வித்தியாதரன் பயங்கரவாதி எனவும் அவரைக் காப்பாற்ற முயல்வோரின் கரங்களும் ரத்தக்கறை படிந்ததாக கருதப்படும் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment