Wednesday, March 18, 2009

விசுவமடுவில் இருந்து விடுமுறையில் சென்ற சிங்கள இராணுவ வீரர் இடம்பெய்ர்ந்த தமிழர்களின் வீடுகளில் கொள்ளையடித்த பெறுமதியரன நகையுடன் சிக்கினார்


தம்புத்தேகம சோதனைச் சாவடியில் பொலிசார் நடத்திய சோதனையின் போது இராணுவ வீரரொருவரிடமிருந்து சுமார் முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கைப்பற்றப்பட்டன.

முல்லைத்தீவு, விஸ்வமடுவில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இவர், தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போதே தம்புத்தேகம சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனைக்குட்படுத்தப்பட்டார்.
இவரிடமிருந்து தங்க மாலைகள், வளையல்கள், காதணிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்டுள்ள இவர் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிக்குப் பொறுப்பான பொலிஸ் இன்ஸ்பெக்டர் எச்.டபிள்யூ,டபிள்யூ. குமாரசிறி தெரிவித்தார்.

No comments:

Post a Comment