Tuesday, March 17, 2009

உலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் - கர்ப்பிணிப்பெண் உடல் சிதறிப்பலி - கருவிலிருந்த குழந்தையும் சிதறிய பரிதாபம்


பாதுகாப்பு வலயத்தில் சிங்கள கொடூர இராணுவத்தினர் நடத்தியுள்ள கோர எறிகணை தாக்குதலில் உலகில் எங்குமே நடைபெறா கோரச் சாவை தமிழினம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

நேற்று செவ்வாய்கிழமை நிகழ்ந்த படுகொலை ஒன்று ஈழத்தமிழினம் இதுவரை சந்தித்தாரத கொடூரம். படையினர் ஏவிய எறிகணையொன்று ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.


தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது.

தமிழினப் படுகொலையை மெளனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம், இந்தப் படுகொலையை எவ்வாறு நியாயப்படுத்தப்போகின்றதோ..?

அண்மையில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கருவில் உள்ள குழந்தையொன்று காயமடைந்த நிலையில் பிறந்தது. மருத்துவர்களின் தீவிர சத்திரசிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment