Sunday, March 15, 2009

வன்னியில் மழையினால் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள சிறிலங்கா படையினர்: கொழும்பு ஊடகம்

sri-lanka-rainவன்னிப்பெரு நிலப்பரப்பில் கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் சிறிலங்கா படையினர் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னிப் பகுதியில் கடந்த வாரம் பெய்த கடுமையான மழையினால் சிறிலங்கா படையினரின் நடவடிக்கைகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

சாலை பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலங்கள் பல அழிவடைந்துள்ளதுடன் பதுங்குகுழிகளும் நீரினால் நிரம்பியுள்ளன.

இதேவேளையில் தனது முன்னணி பாதுகாப்பு நிலைகளை பார்வையிடச் சென்ற 11 ஆவது சிறிலங்கா இலகு காலாட் படை பற்றலியனின் கட்டளை அதிகாரி லெப். கேணல் கீத்சிறி எக்கநாயக்க பயணம் செய்த உழவூர்தி குளம் ஒன்றில் நிரம்பி பாய்ந்த நீரினால் அடித்துச் செல்லப்பட்டது.

உழவூர்தியின் சாரதி காணாமல் போனபோதும், கட்டளை அதிகாரி நீந்தி கரை சேர்ந்தார். இவர், பின்னர் காலை 6.00 மணிவரை அங்கு தங்கியிருந்த பின்னர் அங்கிருந்து நகர முற்பட்ட போது விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகள் அங்கு வீழந்து வெடித்துள்ளன.

அப்பகுதியில் மறைந்திருந்த விடுதலைப் புலிகளே அதிகாரியின் நிலையிடம் தொடர்பான தகவல்களை வழங்கியிருக்க வேண்டும்.

பின்னர், அவர் மற்றுமொரு உழவூர்தியின் உதவியுடன் வெளியேற முற்பட்ட போதும், அந்த உழவூர்தியும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அதன் பின்னர் குளத்திற்கு குறுக்காக கயிறு ஒன்றை கட்டுவித்த படையினர் அதிகாரியை மீட்டு எடுத்துள்ளனர்.

பிறிதொரு சம்பவத்தில் சாலை பகுதியில் இருந்து புதுமாத்தளன் பகுதியில் உள்ள படையினரின் நிலைகளை பார்வையிடச் சென்ற 55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரசன்ன டீ சில்வா மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மென்டக்க சமரசிங்க ஆகியோரும் பாதகமான காலநிலையினால் பெரும் நெருக்கடிகளை சந்தித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment