Tuesday, March 10, 2009

விடுதலைப் புலிகள் சனிக்கிழ்மை நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்


விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி இடம்பெற்று வருகின்ற ராணுவ நடவடிக்கைகள் முக்கியமானதோர் பரிணாமம் மிக்க கட்டத்தை எய்தியிருப்பதாக படைத்தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தெரிய வருகின்றது.

இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாணத்திலிருந்து சுண்டிக்குளம் ஊடாக சாலை வரை முன்னேறியுள்ள 55 வது படையணிகள் மீது

விடுதலைப் புலிகள் சனிக்கிழ்மை நள்ளிரவு முதல் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக இந்த ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது சாலை பகுதியில் அதிகளவு ஆய்தங்களை விடுதலைப்புலிகள் கைப்ப்பற்றியுள்ளதாகவும்.மேலும் சுதந்திரபுரம், விஷ்வமடுவில் சமர்கள் இடம்பெறுவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இராணு அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளுடன் நேற்றிரவு முதல் மூண்ட மோதல்கள் தற்போது வரை நீடித்துக் கொண்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அகோரம் மிக்கதாகக் காணப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்தார்.

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ராணுவத்தின் 55வது படைப்பிரிவு சேதங்களைச் சந்தித்திருப்பதாக அவர் தகவல்களை வெளியிட்ட போதிலும் உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

எனினும் ராணுவத்தினரின் கணிசமான படைக் கலசங்கள் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்திருப்பதாக மற்றுமோர் உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்புத் தரப்புச் செய்தி தெரிவிக்கின்றது. 4ம் கட்ட ஈழப் போரின் முக்கிய பரிமாணம் தற்போது எய்தப்பட்டு வருவதாக படைத்தரப்பு கூறுகின்ற போதிலும் விடுதலைப்புலிகள் தம் மீதான முற்றுகையை உடைத்துக் கொள்வதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அந்தப் படையதிகாரி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக தமது கொமாண்டோக்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை மெற்கொள்வதாகவும் தற்கொலைப் படையாளிகளே பெருமளவில் களப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் படைத்தரப்பிடையே பெரும் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்த அந்தப் படையதிகாரி இந்த மோதல் தற்போது வரை தொடர்வதால் சேதங்கள் தொடர்பான விபரங்களைத் தம்மால் திரட்ட முடியாமல் இருப்பதாகவும் எனினும் உயிரிழந்த காயமடைந்த படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவு இருக்கும் எனவும் காயமடைந்த படையினரை அகற்றும் பணி மிகத் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்தப் பகுதிகளில் மோதல்கள் மூண்ட வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக சாலை சுண்டிக்குளம் மற்றும் புதுக்குடியிருப்பை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. சாலை வரையான தமது கடற்பகுதியை விஸ்தரிப்பதற்கும் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் தமது பிரதேசங்களின் எல்லைகளை விஸ்தரிப்பதற்குமே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வதாக அந்தப் படையதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பகுதிகளில் படைநடவடிக்கைகளை புதுக்குடியிருப்புச் சந்தி வரை படையினர் நோக்கி மேற்கொள்கின்ற போதிலும் இந்த மோதல் படைத்தரப்பிற்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ள ஓர் நகர்வாக அமைந்திருந்ததாக 58வது படைப்பிரிவுடன் தொடர்புடைய தரப்புகள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகள் ஒவ்வோர் தனியார் வீடுகளில் இருந்தும் வீடு வீடாகத் தாக்குதல்களை நடத்துவதாகவும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 2 அல்லது 3 படையினர் உயிழந்தோ அல்லது களத்திலிருந்து அகற்றப்படும் நெருக்குவாரங்கள் இருந்ததாகவும் படைத்தரப்புக் கூறுகின்றது. இதனால் புதுக்குடியிருப்பை நோக்கிய நகர்வில் அப்பகுதியிலுள்ள வீடுகள் முற்றாகவோ அல்லது கணிசமாகவோ அழிந்து சேதமடைந்துள்ளன.

படையினர் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு வீடுகளைத் தகர்த்த பின்னரேயே முன்னகர்வுகளை மேற்கொள்வதாகவும் விடுதலைப்புலிகள் வீடுகளில் இருந்தே தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் அதனாலேயே இந்தத் தாக்குதலை படைத்தரப்பு மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளும் இலங்கை ராணுவத்தினருக்கும் அக்கினிச்சுவாலை எனும் ராணுவ நடவடிக்கைகள் 2000 ஆம் ஆண்டு முகமாலையிலிருந்து ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்கினிச்சுவாலையின் போது அந்தப் பகுதியில் எந்த வகையில் சேதங்கள் ஏற்பட்டதோ அதேயேளவு சேதங்கள் புதுக்குடியிருப்புப் பகுதயிலும் ஏற்பட்டுள்ளதாக படைத்தரப்புக் கூறுகின்றது.

விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதல்; தொடர்பாக எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளாத போதிலும் யுத்த களமுளை அடுத்து வரும் நாட்களில் மிகவும் கடுமையானதும் மோசமானதுமாகவுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment