வன்னிப்பெரு நிலப்பரப்பில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களில் 78 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 188 பேர் காயமடைந்துள்ளனர். |
மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர். இதேவேளையில் புதுக்குடியிருப்பு, பச்சைப்புல்மோட்டை, வலைஞர்மடம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று காலை தொடக்கம் பிற்பகல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. 30 நிமிடத்துக்கு ஒரு தடவை என மாறி மாறி வந்த சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தின. வான்குண்டுத் தாக்குதல்களில் மட்டும் 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் எறிகணைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் 188 பேர் காயமடைந்துள்ளனர். |
Tuesday, March 17, 2009
வன்னியில் 30 நிமிடத்துக்கு ஒரு தடவை வான்குண்டுத் தாக்குதல்; எறிணைத் தாக்குதல்: 78 தமிழர்கள் படுகொலை; 188 பேர் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment