Thursday, March 12, 2009

பொய் செய்திகளினால் தடுமாறும் இலங்கை இராணுவம்!


poralikal20kalamunai1விடுதலைப் புலிகளை 37 சதுர கி.மீ துரத்திற்குள் முடக்கிவிட்டோம் என்று கூறிய இராணுவம் அதே வாயால் நிலை தடுமாறி அவர்கள் தம்மை ஊடறுத்துத் தாக்குகிறார்கள் என்றும் அறிவித்துள்ளது. இராணுவத்தால் முடக்கப்பட்டுவிட்ட விடுதலைப் புலிகள் எப்படி ஊடறுத்தத் தாக்குகிறார்கள் என்ற கேள்விக்கு பொய் செய்திகளை பரப்புவோரால் பதிலளிக்க முடியவில்லை.

இவ்வளவு மோசமான போர் நடைபெறும்போது மரணித்த, காயமடைந்த இராணுவத்தினரின் தொகை மிகவும் சொற்பமாக இருக்கிறது. போரில் மரணமும் காயமும் அடையாத மந்திரவாதிகளாக சிங்கள இராணுவம் சண்டையிடுவது போன்ற மாயை உருவாக்கப்பட்டிருப்பதையே சிங்கள இராணுவத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்யன்று சிறீலங்கா படையினர் விசுவமடு பகுதியில் அமைத்திருந்த ஆட்டிலறி தளத்தையே விடுதலைப்புலிகள் துவம்சம் செய்திருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இராணுவம் மடிந்துள்ளது.

தொடர்ந்து இலங்காபுவத் செய்திகளை கேட்டு அலுத்துப்போன சிங்கள மக்களுக்கு வெற்றி கானல் நீராகி வருவது போன்ற உண்மையின் உணர்வு மெல்ல மெல்ல மணக்கத் தொடங்கிவிட்டது. சிங்கள பிரதமர் போர் முடிவடைய மேலும் ஒரு வருடம் வேண்டுமென கூறியுள்ளது அதற்கு ஓர் உதாரணம். இருப்பினும் அவர் கூறியது சரியான கணிப்பாகவே உள்ளது. விடுதலைப்புலிகள் போரை வெற்றியுடன் முடித்து வைக்க ஒரு வருடம் தேவை என்று அவர் கருதியுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

சிங்கள அரசிற்கும், அதற்கு துணை போகும் உலக சமுதாயத்திற்கும் சின்னஞ்சிறிய ஈழத் தமிழினமே புதிய பாடத்தை தரவேண்டும் என்பதுதான் விதியென்றால் அதை யார்தான் தடுப்பது. பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானுக்கு விழுந்த அடி உலகத்தில் உள்ள எல்லார் முதுகிலும் விழுந்தது என்று கூறுவார்கள். அதுபோல உலக மாந்தர் அனைவர் முதுகிலும் விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்திற்குப் போடும் அடி விழப்போகிறது என்பதே தர்மத்தின் குரலாகும்.

இப்போது விடுதலைப் புலிகளும் சிங்கள இராணுவமும் ஆளையாள் பார்க்கக் கூடிய இடை வெளியில்தான் நிற்கிறார்கள். ரஸ்யாவில் நாஜிப்படைகள் லெனின்கிராட்டை முற்றுகையிட்டபோது சுமார் ஒரு மில்லியன் மக்கள் பட்டினியாலும், போரினாலும் மடிந்தார்கள். ஆனால் ரஸ்யர்கள் மன உறுதி தளராமல் அந்தப் போரில் வென்றார்கள். ஜேர்மனியருக்கு லெனின்கிராட் போரே சாவு மணியாக அமைந்தது.

லெனின் கிராட் போரில் தனது சிpய மகள் இறந்துவிட அவளை தூக்கிக் கொண்டு ஜேர்மனிய நாஜிப் படைகளை நோக்கி நடக்கிறான் ஒரு ரஸ்யத் தந்தை. நாஜிகள் அவளை சுடுகிறார்கள்இ உடல் சல்லடையாகிப் போகமகளுடன் வீழ்கிறான் அந்தத் தந்தை. அதுபோல காட்சிகளை இப்போது வன்னியில் நடைபெறக் காண்கிறோம்.

களத்தில் வீழ்ந்து கிடக்கும் மாவீரர்களையும், மானம் குலையாத தமிழீழ மக்களையும் பார்க்கும்போது கண்ணீர் விட்டே வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை என்ற பாரதி பாடலே காதுகளில் ஒலிக்கிறது.

இந்த மண் எங்களின் சொந்த மண் !
இதன் எல்லைகள் மீறி யார் வந்தவன் !
பாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கிறது.

நீதிக்கு இது ஒரு போராட்டம் ! - இதை
நிச்சயம் உலகம் பாராட்டும் !
இந்த வரிகளும் விரைவில் நிஜமாகக் காண்பர் ஈழத் தமிழர்.

No comments:

Post a Comment