Tuesday, March 31, 2009

புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப்படை கடும் சமர்: முறியடிக்கப்பட்ட புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்


புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிழக்கு மற்றும் ஆனந்தபுரத்தில் சிறீலங்காப் படையினரின் பாரிய முற்றுகை நடவடிக்கை .

தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 7 நாட்களும் நடத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதல்களில் 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர்

படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அறிவித்துள்ளது.

வன்னியில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மைய நாட்களாக புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மற்றும் ஆனந்தபுரத்தில் இரு தரப்பினர் இடையே கடுமையான சமர் இடம்பெற்று வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் தாக்குதல்கள், எறிகைணத் தாக்குதல்கள், பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், டாங்கித் தாக்குதல்கள், ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதல்கள் மற்றும் கனரக கனோன் ரகத் தூப்பாக்களின் சூட்டாதரவுடன் நாளாந்தம் சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படும் படை நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து வருகின்றனர்.

இரணைப்பாலையில் உள்ள செந்தூரன் சிலையடியை இரு தரப்பினரும் 10 அதிகமான தடவைகள் மாறி மாறி கைப்பற்றியுள்ளனர். இப்பகுதி ''ஸ்ரானின் கிராட்'' மாறியுள்ளதாக விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஒருவர் பதிவு இணையத்திடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

புதுக்குடியிருப்புப் பகுதியில் நாளாந்தம் நூற்றுக்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் பல நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்து வருகின்றனர்.

இப்பகுதியில் யுத்தத்திற்காக களமிறக்கப்பபட்ட சிறீலங்காப் படையினரின் 57-வது படைப்பிரிவும், 58-வது படைப்பிரிவும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவாக 53-வது படைப்பிரிவையும் 55-வது படைப்பிரிவையும் சிறீலங்காப் படை அதிகாரி களமிறக்கியுள்ளனர். 57-வது, 58-வது படைப்பிரிவில் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுவிட்டனர்.

தற்பொழுது படையினருக்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் காரணமாக களத்தில் நிற்கும் படைத் தளபதிகளுக்கும் கட்டளை மையத் தளபதிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று வருக்கின்றது.

படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது நாள் ஒன்றுக்குப் பல தடவைகள் வான்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றது.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்கள் நெருங்கிய நேரடித் துப்பாக்கி மோதல்களாகவே மாறியுள்ளதால், சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் தென்னிலங்கையிலிருந்து சிறீலங்கா ஊர்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு படையினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வன்னிக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தற்போது ஆவேசத்துடன் படையினருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment