Thursday, March 19, 2009

ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ‐ முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி:


un20tankஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென முன்னாள் சட்ட மா அதிபரும், அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு தலைவருமான சிவாபசுபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவிலியன் இழப்புக்களை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் யுத்த வலயத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியில் பேரவலத்தை எதிர்நோக்கியிருக்கும் சிவிலியன்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி அவசர கடிதமொன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்தும் வரும் இலங்கையைச் சேர்ந்த புத்திஜீவிகள் பலர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment