புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்கள் மற்றும் படையப் பொருட்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
குறிப்பாக விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புக்கள் தொடர்பாக போர்க் களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடியாக தொடர்பு கொண்டு வினவியதாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. கனரக ஆயுதங்களை வன்னி போர்முனையில் படையினர் பயன்படுத்தவில்லை என்றும் அதனாலேயே படையினருக்கு கடந்த சில நாட்களில் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன என்றும் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன கொழும்பில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. |
Thursday, March 12, 2009
புதுக்குடியிருப்பு, விசுவமடுவில் சிறிலங்கா படையினருக்கு அதிக இழப்பு: அறிக்கை சமர்ப்பிக்குமாறு சரத்துக்கு மகிந்த உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment