Tuesday, March 30, 2010

வெள்ளைக்கார மச்சான் வேட்டு ஒண்ணு வச்சான்



நித்திய ஆனந்தாவுக்கு எதிராக, 'பிளாக்மெயில்' சீடர் தர்மானந்தா ஒரு பக்கம்

குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க... 'குடைச்சல் நம்பர் டூ'வாக கடல் தாண்டி குபீரென்று பாய்ந்திருக்கிறது புது தோட்டா! இது அச்சு அசல் அமெரிக்க பிரஜை ஒருத்தரின் கைங்கரியம்! அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர்!

கலிஃபோர்னியாவில் அட்டார்னி ஜெனரல் ஜெரி ப்ரவுனுக்கு இவர் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலில், அதிரடியாக பல குற்றச்சாட்டுகள் நித்தியானந்தா மீது!

'ஐயா அட்டார்னி ஜெனரல் அவர்களே,

நித்தியானந்தா என்ற சாமியார் அமெரிக்காவில் பல கிளைகள் வைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பலே மோசடிகள் செய்து வருகிறார். நித்தியானந்தா ஃபவுண்டேஷன், லைஃப் ப்ளிஸ் ஃபவுண்டேஷன், நித்ய யோகா, வேதிக் டெம்பிள், தியானபீடம் ஃபவுண்டேஷன் என்று அவர் பலவகையிலும் நிறுவி பல குற்றங்கள் செய்து வருகிறார். அதையெல்லாம் நீங்கள் விசாரித்து உரிய தண்டனையை அவருக்குத் தரவேண்டும். அதற்கான பக்கா சாட்சியாக நானே வந்து எல்லாம் சொல்லத் தயார்! 2003-ம் வருடம் தொடங்கி, ஆறு வருடங்கள் அவரோடு ஒட்டி உறவாடிய பக்தன் என்ற முறையில் எனக்கு பல ரகசியங்கள் தெரியும்...' என்கிறது, இந்த டக்ளஸ் மெக்கெல்லர் எழுதியதாகச் சொல்லப்படும் கவரிங் லெட்டர்!

எல்லாம் போச்சு சாமியாராலே!

செக்ஸ் க்ரைம், மோசடிகளோடு சேர்த்து 'ஹவாலா' டைப்பிலான 'மணி லாண்டரிங்' விவகாரத்திலும் நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி திகில் கிளப்புகிறது இந்தக் கடிதம். 'அந்த சாமியாராலேதான் என் வேலை போச்சு. என்னைவிட்டு என் பொண்டாட்டிபோயிட்டா! இப்ப நான் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிக்கிறேன் அவராலே! தேவைப்பட்டா இந்தியாவின் எந்த கோர்ட்டிலும் போய் நின்றுகூட இதைப் பற்றியெல் லாம் நான் விவரமாகச் சொல்லத் தயார்' என்று போட்டுத் தாக்குகிறது அந்தக் கடிதம்!

நித்ய பிரபாவாகிய நான்...

வெள்ளைக்கார குடைச்சல் பார்ட்டி தன் கடிதத்தோடு கொடுத்திருக்கும் நீளமான டாகு மென்ட்டில் விவகாரம் செம ஹாட்டாகவேவிவரிக்கப் பட்டிருக்கிறது.

''2003-ம் வருஷத்துலதான் எனக்கு நித்தியானந்தா அறிமுகமானாரு. இந்து மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டால அவரோட ஐக்கியமானேன். என் பெயரை 'நித்ய பிரபா' என்றே சாமியார் மாத்தி வெச்சாரு. அமெரிக்காவுல அவர் ஆசிரமம் தொடங்கியபோது, அதுல டெலிபோன் ஆபரேட்டர் வேலையில தொடங்கி அத்தனை வேலைகளையும் நானே செஞ்சுருக்கேன். நித்திய ஆனந்தாவுக்கு விசா கிடைக்காத சமயத்துல நான்தான் பெரும் முயற்சி எடுத்து அவருக்கு அமெரிக்காவுக்கு விசா கிடைக்க ஏற்பாடு செஞ்சேன்.

எனக்கு சொந்தமான 'சான்ஜோஸ்' வீட்டிலும் நித்தியானந்தா தங்குவாரு. அந்த சமயத்துல அமெரிக்காவை சேர்ந்த பல இளம் பெண்கள்அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவாங்க. முதலில் எனக்கு இதெல்லாம் தப்பா தோணவே இல்ல.

ஆனால், நான் நித்திய ஆனந்தாவோடு இப்படி இழைவது என் மனைவிக்கு ஏனோ பிடிக்கலை. அவரைவிட்டு விலகி வரும்படி அந்த மகராசியும் பல தடவை சொன்னா... நான்தான் பாவி, கேட்காமப் போயிட்டேன். அதனால அவ டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டா. அவளுக்கு ஏன் நித்தியானந்தாவைப் பிடிக்கலன்னு அப்ப எனக்கு தெரி

யலை...'' என்று புலம்பும் அந்த டக்ளஸ் மெக்கெல்லர் கடிதம்... ஜிலுஜிலுப்பாக மேற்கொண்டு போகிறது.

யார் அந்த நடிகை..?

''2007-ம் ஆண்டு நித்தியானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிஃபோர்னியாவுக்கு கூட்டிட்டுவந்தாரு. சினிமாவுல எனக்கு பெருசா ஈடுபாடு இல்லை. அதனால அவங்க பேருஎனக்கு நினைப்பில் இல்லே. ஆனா, திருமணம் செய்தவங்கன்னு மட்டும் தெரியும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கியிருந்தாங்க. அந்த நடிகைக்கும் நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததைநான் புரிஞ்சுக்கிட்டேன். அதைப்பத்தி அவரிடமே கேட்டேன். 'கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்'னு என்கிட்ட சிரிச்சுக்கிட்டே சொன்னாரு...'' என்று சொல்லும் புகார் கடிதம்,

''பிறகு ஆசிரமத்துக்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுக் கிட்டதையும் என்னால உணர முடிஞ்சுது. பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ மறுக்கவோ இல்லை'' என்று கலாய்க்கிறது!

அடங்காத ஆசை...

மேற்கொண்டு சொல்லப்படுகிற குற்றச்சாட்டு, தூக்கிப்போட வைக்கிற ரகம்!

''கலிஃபோர்னியாவின் ஒரு பகுதியில் சனாதன் தர்மா கோயில் என்று ஒன்று இருக்கு. இந்த கோயில்ல நித்தியானந்தாவோட பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே சகல வசதிகளோட கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக் காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது. பயிற்சிப் பட்டறை நடக்குற சமயத்துல அடிக்கடி ரெஸ்ட் எடுக்க அந்த அறைக்குள்ள போயிடுவாரு. அமெரிக்காவுல வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கு மட்டும் அந்த அறைக்குள் அனுமதி. தமிழ்ப் பெண்கள் மீது அவருக்கு அப்படி ஓர் அடங்காத ஆசை!

அந்த அறைக்குள்ள போனா என்ன நடக்கும்ணு என்னைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பெண்களும் விருப்பப்பட்டுத்தான் போயிட்டு வருவாங்க.

அதேபோல, மான்ட்க்ளேயர் ஏரியாவுலதான் வேதிக் டெம்பிள் இருக்கு. அங்கேயும் கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே நித்தியானந்தாவுக்கு ஓர் அறை உண்டு. இந்த அறையின் சாவி அவரது உதவியாளரான மா நித்ய கோபிகாகிட்ட இருக்கும். அமெரிக்க

என்.ஆர்.ஐ-யான நித்ய கோபிகாவோட ஒரிஜினல் பெயர் வித்யா விஸ்வநாதன்.

அந்த வேதிக் டெம்பிளுக்குள்ள இருக்கிற சொகுசு அறைக்கு யாரெல்லாம் போகவேண்டும் என முடிவெ டுக்கும் அதிகாரம் நித்ய கோபிகா கையிலதான் இருந் தது. விதவிதமான பெண்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான வேலையை செய்ததே கோபிகாதான்!'' என்று குபீர் கிளப்புகிறது அமெரிக்க குடைச்சல் புகார்.

தயாராக மூன்று பெண்கள்...அதோடு விட்டால்தானே..!

''நித்தியானந்தாவின் ஆன்மிக போதனை களில் நம்பிக்கை கொண்டு அவரிடம் வந்துசேர்ந்த கலிஃபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்த மூன்று பெண்களை வலுக் கட்டாயமாக பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் அவர். அந்தப் பெண் களிடம் விசாரித்தால் நிச்சயமாக புகார் கொடுக்க முன்வருவார்கள். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டு,

''இந்தியாவில் ஒரு விதமான போதனைகளை செய்யும் இந்த சாமியார், அமெரிக்காவில் மட்டும் கிளுகிளு பாலிஸியைத்தான் ஓப்பனாக போதிப்பார். 'உலகத்துக் கான அத்தனை பலன்களையும் செக்ஸ் ஆய்வுகள் மூலம் மட்டுமே பெற்றுத் தரமுடியும். அதற்கான ஆராய்ச்சியில்தான் நான் இறங்கியிருக்கிறேன். அதோடு, எந்தப் பிரச்னைகளையும் செக்ஸ் மூலம் தீர்க்க முடியும் என்பதை நான் உணர்ந் திருக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்வார் சாமியார்'' என்று பத்த வைக்கிறது!

வயிற்று வலி... விளக்கு ஒளி!

நம்மூர் கிளுகிளு கதைகளில் வருகிற மாதிரியே ஒரு எபிஸோடையும் எடுத்து விடுகிறார் இந்தடக்ளஸ் மெக்கெல்லர். ''ஒருநாள் இரவு நான் ஆசிரமத்துக்குப் போயிருந்தேன்.அப்போது கதவுகள் மெள்ளத் திறந்திருக்க... எட்டிப் பார்த்தேன். உள்ளே தீப விளக்கின் வெளிச்சத்தில் இரண்டு பெண்கள் முழு நிர்வாணமாக இருக்க... அவர்களுடன் ஆனந்த நிலையில் இருந்தார் நித்திய ஆனந்தா. எல்லாம் முடியும் வரை(?) அமைதியாகக் காத்திருந்தேன்.

தாண்டவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தவர், 'அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் தீராத வயிற்று வலி இருந்திருக்கு. அதை சரி பண்ணுவதற்குத்தான் இந்த சிகிச்சை கொடுத்தேன். அதனாலதான் மின்சார லைட் இல்லாம தீப விளக்கு வெளிச்சத்தில் அவங் களுக்கு சக்தி கொடுத்தேன். இனி அவங்களுக்கு வயித்து வலியே இருக்காது' என்று சிரித்தபடி சொன்னார், சான்ஸை பயன்படுத்திய சாமியார். எனக்குத் தெரிஞ்சு அமெரிக்காவுல மட்டும் ரெண்டு வருஷத்துல எப்படி யும் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நித்தியானந்தா இப்படி ஆனந்த டிரீட்மென்ட் கொடுத்திருப்பாரு.

உலகம் முழுக்க இப்போ அவரோட லீலைகளைப் பத்தி பிரச்னைகள் கிளம்பியிருக்கு. அதனாலநாங்களும் இங்கே நடந்த சம்பவங்களை உங்களோட கவனத்துக்கு கொண்டு வந்துட்டோம். நீங்க நடவடிக்கை எடுங் கய்யா...'' என்று கலிஃபோர்னிய அட்டார்னி ஜென ரலுக்கு எழுதப்பட்ட கடிதம் பவ்யமாக முடிகிறது.

விதவை பெண் வில்லங்கம்...

சேலம் மாவட்டத்தில் ஒரு ஏரியாவிலுள்ள வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் விதவை ஒருவரையும் சாமியாருக்கு எதிராக உசுப்பிவிட முடியுமா என்று அவருக்கு எதிரான பார்ட்டிகள் தீவிரமாக முயல்கின்றன. இந்த எதிர்த் தரப்பு பார்ட்டிகள் சொல்வது இதைத்தான் -

''கணவன் இழந்த பெண் அவர். தனிமை சோகம் தாளமுடியாமல் மனஆறுதல் தேட சாமியாரின் பிடதி ஆசிரமத்துக்குப் போனார். பிடதி ஆசிரமத்திலேயே ஒரு கட்டத்தில் சேர்ந்தும்விட்டார். வழக்கம்போல எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க... ஒரு நாள் தியான மண்டபத்தில் அந்த பெண்ணின் மீது கைகள் படர்ந்திருக்கிறது.

அன்று இரவே பள்ளியறை பூஜைக்கு அந்தப் பெண் அழைக்கப்பட்டிருக்கிறாள். பள்ளியறைக்குள் சாமியார் கொடுத்த டிரீட்மென்ட்டை பெண்ணால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். அடுத்த நாளே ஆசிரமத்திலிருந்து கிளம்பி, சொந்த ஊருக்குத் திரும்பி விட்டாராம். அந்த விதவைப் பெண் எந்த நேரமும் புகார் கொடுத்து பிரச்னையைக் கிளப்புவார் என சாமியார் தரப்பும் பயந்தது. அந்தப் பெண்மணியும் கிட்டத்தட்டஅந்த மூடில்தான் இருந்திருக்கிறார். இதற்கிடையில், சி.டி விவகாரம் வெளியாவதற்கு முன்பு சாமியார் தன் பரிவாரங்களோடு சேலம் வந்தபோது, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து மனமுருக மன்னிப்பு கேட்டுவிட்டார். மறுபடியும் ஆசிரமத்துக்கு வரும்படி அழைப்பும் விடுத்தாராம். அந்தப் பெண் மறுத்து விட்டார். ஆனால், தைரியமாக வெளியில் வந்து புகார் தரும்படி நாங்கள் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகிறோம்...'' என்கிறார்கள் இந்த எதிர்பார்ட்டிகள்.

வயசென்ன சாமீ?

இருக்கிற வில்லங்கங்கள் போதாதென்று, நித்திய ஆனந்தாவின் வயசு விவகாரத்தை வைத்தும் சிலர் பிரச்னை பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். விசா வில் ஒரு தேதி, பாலிடெக்னிக்கில் படித்தபோது ஒரு தேதி என்று அவர் மாற்றிக் கொடுத்திருப்பதாக சில ஆதாரங்களை எடுத்துக் காட்டும் அவர்கள்... 'சமீபத் தில் நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சில கோர்ட் ஆவணங்களில் வேறொரு தேதி இருக் கிறது. இதெல்லாம் சட்டத்துக்குச் செய்கிற துரோக மில்லையா?' என்று கொளுத்திப் போட... எட்டு திசையிலிருந்து வரும் பந்துகளில் எதை எப்படித் தடுத்து ஆடுவது என்று இன்னும் தீவிரமான சட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளார் நித்திய ஆனந்தா!

''டக்ளஸ் மெக்கெல்லரை அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது'' என்று கூறும் முன்னாள் ஆசிரமவாசிகள், அவர் இணையதளத்தில் வைத்துள்ள விவரமான 'பிளாக் ஸ்பாட்'டை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நித்திய ஆனந்தா ஆசிரம நிகழ்வுகள் தொடர்பான எக்கச்சக்க வீடியோ படங்கள் ('அந்த மாதிரி' எதுவும் இல்லை!), சாமியார் பற்றிய கடும் விமர்சனங்கள் என்று விவரமாகவே தொகுத்து வைத்துள்ளார் இந்த அமெரிக்க அதிரடி மச்சான்!

''2007 நித்யானந்தா நடத்திய பயிலரங்கத்தில் கலந்து கொண்ட போது 'திடீர் முக்தி' கொடுக்கிறேன் பேர்வழி...என்று அவர் சில கண்கட்டு வித்தைகளை நடத்தினார். சாம்பிராணி நெருப்பில் போதை திரவியங்களை கலந்து மயக்கத்தை ஏற்படுத்தியிருப்பாரோ என்று இப்போது தோன்றுகிறது'' என்று இவர் தன் புகாரில் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் போதை மருந்து குற்றம் செமத்தியான கடுமையோடு டீல் செய்யப்படும் என்பதால், ஆசிரம தரப்பு ரொம்பதான் கவலையோடு இதை கவனிக்கிறதாம்.

ஏதோ சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்ததுபோல, ''நான் அவரிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். என்னைப் போல பல அமெரிக்க பக்தர்களையும் நித்தியானந்த சாமியார் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார்'' என்றும் தன் புகாரில் புலம்பியிருக்கிறாராம் மெக்கெல்லர்.

நன்றி: ஜீனியர்விகடன்

No comments:

Post a Comment