Monday, September 15, 2008

அக்கராயன் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முறியடிப்பு: 22 படையினர் பலி,பெருமளவு ஆயுதங்கள் மீட்பு


அக்கராயன் பகுதியை வல்வளைப்பு செய்யும் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முறியடிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 22 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் உடலங்களுகம் படைக் கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
திங்கட்கிழமை காலை 5 மணி முதல் திருமுறிகண்டி - அக்காராயன் வீதியில் உள்ள முதலாம் கட்டை மற்றும் இரண்டாம் கட்டை ஆகியவற்றை ஆக்கிரமிக்கும் நோக்குடன் வல்வளைப்பு நகர்வுகளில் சிறீலங்காப் படையினரின் 57 படைப் பிரிவில் 3 பற்றாலியன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இப் படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகள் முறியடிப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.
இந்த முன்னகர்வு முறியடிப்புத் தாக்குதல்களில் 22 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 53 படையினர் காயமடைந்துள்ளன. ஆனால் படையினரின் இழப்பு இதை விட அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறியடிப்புத் தாக்குதலில் விடுவிக்கப்பட்ட இடங்களில் கொல்லப்பட்ட படையினரது உடலங்களும், பெருமளவான படைக் கருவிகள் மற்றும் வெடிபொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

பி.கே எல்.எம்.ஜி - 04
பி.கே எல்.எம்.ஜி ரவைக்கூடுகள் - 2
ஏ.கே எல்.எம்.ஜி - 03
ஏ.கே எல்.எம்.ஜி ரவைக்கூடுகள் - 03
ராங்கி எதிர்ப்பு உந்துகணை செலுத்தி (LAW) - 03
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி - 03
ஏ.கே ரி56-2 ரகத் துப்பாக்கிகள் - 07
ஏ.கே ரி56 ரகத் துப்பாக்கிகள் - 06
கிளைமோர்கள் - 14
ஏ.கே ரவைக்கூடுகள் - 27
ஏ.கே எல்.எம்.ஜி ரவை இணைப்பிகள்
தண்ணீர் கொல்கலன்கள்
நிற வெளிச்சக் குண்டுகள் -04
ரவைக்கூடு தாங்கிகள்

உட்பட பல ஆயுத தளபாடங்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment