Sunday, September 28, 2008

இலங்கையின் வடக்கே அதிகரித்துள்ள மோதல் குறித்து பிரித்தானியா கவனம் -லோக் மல்கோக் பிறவுன்


வீரகேசரி இணையம் 9/29/2008 10:42:43 AM - இலங்கையின் வடபகுதி அதிகரித்துவரும் மோதல்கள் குறித்து ஐக்கிய இராச்சியம் கவனம் செலுத்துவதுடன் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்க்க்கு மனிதபிமான உதவிகளை மனிதபிமான தொண்டு நிறுவனங்கள் ஊடாக தொடர்ந்தும் வழங்கவுள்ள தீர்மானத்தினை ஐக்கிய இராச்சியம் வரவேற்பதாக ஆபிரிக்க மற்றும் ஐ.நாவிற்கான பொதுநலவாய அமைச்சர் லோசட் மல்லோக் பிறவுன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுன் மற்றும் சர்வதேச அபிவிருத்தி செயலாளர் டக்ளஸ் அலக்சாண்டர் ஆகியோர் இவ்விடயம் குறித்து நியூயோர்க்கில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரயாடியுள்ளனர்.

அதேவேளை பொதுமக்களை சுதந்திரமாக நடமாடவும் வெளியேறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கிறோம். மேலும் இருத்தரப்பினரும் சர்வதேச சட்ட விதிமுறைகளிற்கு அமைவாக மனிதபிமான தொண்டு நிறுவனங்களின் சுதந்திரமான செயற்பாடுகளிற்கும் மோதல் இடம்பெறும் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து கவனத்திற்கு கொள்ள வேண்டுமென அறிக்கையில் லோட் மல்லோக் பிறவுன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment