கிளிநொச்சி பகுதியினை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். |
கிளிநொச்சியின் தெற்குப் பகுதிக்கிராமங்களான பாரதிபுரம், மலையாளபுரம் கிராம மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இ.ரஜித்குமார் (வயது 19) என்ற இளைஞரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன. ரி.காந்தரூபன் (வயது 21) என்பவர் காலை இழந்துள்ளார். வி.சதீஸ் (வயது 25) என்பவரும் ஜெகன் (வயது 30) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையும் மற்றொருவரும் இதில் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வி.சதீஸ் யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து இடம்பெயர்ந்து இப்பகுதியில் தங்கியிருந்தவர் ஆவார். கிளிநொச்சி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் மக்கள் வாழ்விடங்கள் அழிவுகளைச் சந்திக்கின்றன. |
Sunday, September 28, 2008
கிளிநொச்சியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: ஐந்து பொதுமக்கள் காயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment