Monday, September 15, 2008

அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித் தாக்குதல்: இருவர் பலி

செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் கூறியுள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள உடும்பன்குளம் படை முகாமிலிருந்து தங்கவேலாயுதபுரம் படை முகாமுக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:50 நிமிடமளவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment