Wednesday, September 17, 2008

ஏ9 வீதியில் கிளைமோர் தாக்குதல்- பொதுமக்கள் பலி

வவுனியா வடக்கு புளியங்குளம் புதூர் பகுதியில் பயணிகள் பேருந்து மீது சிறிலங்கா படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் பொது மக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 8.10 மணியளவில் பயணிகள் பேருந்து மீது கண்டிவீதியில் புளியங்குளம் புதூர் சந்தியில் வைத்து சிறிலங்கா படையினர் கிளைமோர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் மூவர் பேர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்தனர்.லலிதாராணி (வயது 28), கேதீஸ்வரன் (வயது 28), செல்வநாயகம் (வயது 48) ஆகியோர் காயமடைந்தனர்.கொல்லப்பட்டவர்கள் பெயர் விவரம் இதுவரை கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment