Tuesday, September 30, 2008

கிழக்கில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்க் காவற்துறையினருக்கு இந்தியாவில் விசேட பயிற்சி?

இந்தியாவின் புதுடெல்லி காவற்துறைப் பயிற்சி மையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்த தமிழ்க் காவற்துறை அணி ஒன்று ஓரிரு தினங்களில் இலங்கை திரும்பவுள்ளதாக கிழக்கு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு அரசாங்க கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட பின்னர் 2007ஆம் ஆணடு தனியே தமிழர்களைக் கொண்ட காவற்துறை அணி ஒன்று உருவாக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் 90க்கும் மேற்பட்ட பெண்களும் 100க்கும் மேற்பட்ட ஆண்களும் தேர்வு செய்யப்பட்டு கல்லடி பயிற்சி முகாமில் 6 மாதகால பயிற்சி வழங்கப்பட்டபின்; கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி புதிய பதவிநிலைகளைப் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

இவர்கள் இங்கு நிர்வாகப்பயிற்சிகளை மட்டுமே நிறைவு செய்த காரணத்தால் நிர்வாகக் கடமைகளுக்கு மட்டுமே பயன்படுத்த நேரிட்டது. பாட வரையறையில் 8ம் ஆண்டு வரையே படித்தவர்களாக இருந்தால் ஆண்களில் 50க்கும் மேற்பட்டவர்களைத் தேர்ந்து அவர்கள் இந்தியாவில் உள்ள புது டில்லி பயிற்சி முகாமில் ஆயுதப்பயிற்சி பெற்றுக் கொள்வதற்காக அனுப்பிவைக்கப்படடதாக தெரியவருகிறது. இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களிள் இலங்கைக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment