Tuesday, September 16, 2008

முறிகண்டியில் விமானத் தாக்குதல் 4 பேர் பலி மேலும் நால்வர் காயம்

கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டியில் இன்று காலை 10.10 மணியளவில் இடம்பெற்ற விமான தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களது சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment