Tuesday, September 30, 2008

பயங்கரவாத பேரினத்தின் சித்து விளையாட்டு??

உலகநாடுகளின் கண்டனங்களின் பின் பயங்கரவாத சிங்கள அரசு நிர்ப்பந்தத்திற்காகவும் கண்துடைப்பிற்காக சில உணவு பாரவூர்திகளை வன்னிக்கு அனுப்ப நேற்று நடவடிக்கை எடுத்திருந்தது அறிந்ததே. வன்னிக்குச் செல்லவிருந்த உணவு பாரவூர்திகளை சோதனையிட்ட இராணுவத்தினர் அப்பாரவூர்தி ஒன்றின் உள் இருந்து பெருந் தொகையான வெடிப்பொருட்கள் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களை எடுத்தச் செல்ல ஆயத்தமாயிருந்த ஒரு பாரவூர்யில் சூட்சுமமான முறையில் பெருந் தொகையான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அத்துடன் 28,000 மேற்பட்ட சிறிய ரக பட்டறிகள் (பென் டொச் பற்றரிகள்) மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சோதனையிட்ட இராணுவத்தினர் கண்டுபிடித்திருப்பதாகவும், அப் பாரவூர்திச் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் உதய நாணயக்கார ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment