Tuesday, September 30, 2008

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றார்



சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீரென சுகவீனமுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் இணை நிறுவனமொன்றினால் வழங்கப்படவிருந்த விருது வழங்கும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் சாதனைகளுக்காக அமைச்சர் தேவானந்தாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அமைச்சர் திடீரென சுகவீனமுற்றதனால் விருது வழங்கும் நிகழ்வு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக காரியாலயத்திலிருந்து ஆயத்தமான போது அமைச்சர் சுகவீனமுற்றதாக அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment