Thursday, September 18, 2008

ராஜபகஷவால் கொழும்பில் குண்டுவைக்க நியமிக்கப்பட்ட மாபியாக்குழு மர்மங்கள் சில இணையம் ஒன்றில் அம்பலம்


இன்று இலங்கையில் அரசாங்கம் வன்னி நிலத்தை மீட்டு இலங்கையை முற்று முழுதாக தன் வசப்படுத்தும் நோக்கில் தனது படை நடவடிக்கை ஆரம்பித்து பல இடங்களை கைப்பற்றி வரும் இத்தருணத்தில் வன்னி மீதான பாரிய கண்மூடித்தனமான தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. அந்தப் பாரிய போரில் பல பொதுமக்கள் கொல்லப்பட போகின்றார்கள் என்பது இங்கு நன்றாகவே புரியக்கூடிய உண்மை. அத்தருணத்தில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலர் இறக்கும் வாய்ப்பக்களே அதிகம். இந்த பாரிய தாக்குதலில் பொதுமக்கள் இறக்கும் போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்படும் என்பதை கருத்தில்க் கொண்டு உடனடியாக அந்த அழுத்தத்தை மறைப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல திட்டங்களை தீட்டியதாகவும் அதற்கு தலைமை தாங்குகிறார் இலங்கை ஜனாதிபதியின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ச அவர்கள்.

இத்தாக்குதலில் ஏற்படும் படுகொலைகளை வெளிநாடுகளுக்கு மறைக்கும் முகமாகவே வன்னியிலிருந்து தொண்டு நிறுவனம் அவசர அவசரமாக வெளியேற்றப் பட்டடனர்.

திட்டங்கள் வருமாறு

ரெயில் பஸ்களில் குண்டு வைப்பது பாடசாலைகளில் தாக்குதல் நடாத்துவது. பஸ்களில் வைத்துக் கொல்வதால் இதன் மூலம் உலகநாடுகளின் அனுதாபத்தைக் கவர முடியும். சிறுவர்களை புலிகள் கொல்வதாக சொல்லமுடியும். இதனூடாக அனுதாபத்தை அடைய முடியும் என்பது அவர்களது குறிக்கோள்.

இத்திட்டத்திற்காக 4 குழுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஒரு தமிழ்க்குழு, ஒரு முஸ்லிம் குழு, 2 சிங்களக்குழு. ஒரு குழுவில் 7இல் இருந்து 12 பேர் வரை அடங்கியுள்ள இக்குழுக்களில் தமிழ் குழுவில் 9பேர் உள்ளடங்கியுள்ளனர் என்பது தெட்டத்தெளிவான உண்மை. இத்தமிழ்க் குழுவின் தலைவர் யாழ்ப்பாணம் தொண்டமானாறைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் முன்பு புலிகள் அமைப்பில் இருந்ததாகவும் பணமோசடி காரணமாக தலைமறைவாகி திரிந்தவர்.

முஸ்லிம் குழுவின் தலைவர் அவரும் அதே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தவர். இவருடைய சகோதரன் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த குழுக்கள் செய்யப்போகும் செயல்மூலம் தமிழ்மக்களுக்கு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுவது உண்மை. இதில் பாதிக்கப்படுவது புலம்பெயர்தமிழ்மக்களே. இதைத்தடுக்கும் சக்தியாக புலிகள்தான் முன்வரவேண்டும். அதாவது வெளிநாட்டவர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றி வெளிநாட்டவர்களது உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்துடன் அனைத்துப் பாடசாலைகளும் தற்காலிகமாக மூடிக் காப்பாற்ற வேண்டும். இதைச் செய்யக்கூடிய வல்லமை புலிகளின் அறிக்கைகள் மூலமே நடைமுறைக்கு வரும் என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment