[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 01:43 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] |
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். |
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:15 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். முகாம் தாக்கி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. ரி-56-2 ரக துப்பாக்கி - 05, ரி-56 ரக துப்பாக்கி - 03 மற்றும் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர். |
Monday, October 27, 2008
செங்கலடியில் துணை இராணுவக்குழுவின் பிரதான முகாம் தாக்கியழிப்பு: 4 பேர் பலி; 6 பேர் சிறை பிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment