Wednesday, October 22, 2008

ஈரானின் அணுசக்தி தளத்தை வேவு பார்த்த புறாக்கள் சிறை பிடிப்பு

ஈரானின் நடான்ஸ் பிராந்தியத்திலுள்ள சர்ச்சைக்குரிய யுரேனியம் செறிவூட்டல் தளப்பகுதிக்கு அருகில் இரு உளவுப் புறாக்களை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சிறைப்பிடித்துள்ளதாக "எதேமாட் மெல்லி' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்பஹான் மாகாணத்தின் கஷான் நகரிலுள்ள அணுசக்திப் பிறப்பாக்க நிலையமொன்றுக்கு அருகில் வைத்தே மேற்படி புறாக்கள் பிடிக்கப்பட்டதாகவும் அவற்றுக்கு உலோக உபகரணம் அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நடான்ஸிலேயே ஈரானின் நிலத்துக்குக் கீழான மிகப் பெரிய அணுசக்தி நிலையம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தைப் பயன்படுத்தி அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முயற்சிப்பதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஈரான் அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறது

No comments:

Post a Comment