Friday, October 24, 2008

பாதுகாப்பு செயலாளர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை,அவர் சார்பில் சட்டதரணி ஆஜர்

பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் பாதுகாபு செயலாளர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை அவரது சார்பில் சட்டதரணி இந்துனில் பண்டார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் டயிள்யூ எ. கனியபெரும ஆகியோர் ஆஜரானார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் நிவாரண மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உதவி செயலாளரும் எம்.பியுமான டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டுக்கமையவே பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு இந்த நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.டாக்டர் ஜெயலத் ஜயவர்தன இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.இதனையடுத்து அவர் மேலும் தெரிவிக்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பட்ட நோட்டீஸ் தனக்கு கிடைத்துள்ளது எனினும் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு கிடைக்கவில்லை என தெரிவித்திருப்பது தமக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக டாக்டர் ஜெயலத் ஜெயவர்தன தெரிவித்தார்.

அத்துடன் இது மனித உரிமையுடன் தொடர்புடையது என்பதால் இம் முறைப்பாடு தொடர்பில் குழு ஆணைக்ழுவும் ஈடுப்பட வேண்டுமென ஓய்வு பெற்ற சட்டதரணி எதிரிசிங்கவிடம் தாம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment