விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான தமது அரசாங்கத்தின் யுத்த முனைப்புக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவையும், உதவிகளையும், வழங்கிவருவதாக சிறி லங்கா அமைச்சர் ஹெகலிய ரம்பக்வெல தெரிவித்துள்ளார்.தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சிறி லங்கா அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல சியோலில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியட்டுள்ள ரம்புக்வெல, பயங்கரவாதத்தினால் இந்தியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறி லங்காவில் விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்ததுக்கட்டவேண்டும் என்ற சிறி லங்கா அரசின் முயற்சிக்கு முழு ஆதரவையும் இந்தியா வழங்கிவருகின்றது.எனவே வடக்கில் விடுதலைப்புலிகளை வெற்றிகரமாக சிறி லங்கா படையினர் அழித்துவரும் இந்தச்சந்தர்ப்பத்தில் இந்த விடயத்தில் இந்தியா ஒருபோதும் தலையிடமாட்டாது.
அது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரையும் நிறுத்தாது என தமது அரசாங்கம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தமிழ் நாட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகளால் எந்தவித மாற்றங்களும் எற்படப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Monday, October 20, 2008
யுத்தத்திற்கு எமக்கு இந்தியாவிடமிருந்து முழுமையான ஆதரவு - கொரியாவில் ஹெகலிய
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment