Monday, October 27, 2008

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை வழிமறித்து புலிகள் தாக்குதல்: ஒருவர் பலி



அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர்.

இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment