கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். |
கொல்லப்பட்ட மூவரின் உடலங்களையும் அவர்களின் உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். பூநகரியைச் சேர்ந்தவர்களான சங்கரலிங்கம் சிவநேசன் (வயது 28) கந்தசிவம் சிவநாயகி (வயது 36) தேவநாதன் சிவரூபன் (வயது 24) ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மூவரும் பூநகரியிலிருந்து இடம்பெயர்ந்து பரந்தன் வழியாக சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். |
Tuesday, October 28, 2008
பரந்தனில் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரும் அடையாளம் காணப்பட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment