Monday, October 20, 2008

கோத்தபாய தலைமையில் சிறிலங்கா அரச குழு ஒன்று பாகிஸ்தானுக்கு விரைவு


சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான சிறி லங்கா அரசின் உயர்மட்டக்குழு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக பாதுகாப்பு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தலைமையிலான இந்;தக்குழு ஐந்து நாட்கள் பாகிஸ்தானில் தங்கிருக்கும் எனவும், அதன்போது, பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலர் கமரான் ரஷோல், பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் ஜெனரல் சாஹிட் சித்திக் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் இந்க்குழு பேச்சுக்களை நடத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானிலுள்ள ஆயுத தளபாட உற்பத்தி நிலையங்களுக்கும் இந்த சிறிலங்கா குழு விஜயம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்குமான ஆயுத உதவிகளை மேலும் வலுப்படுத்த இந்தக்குழுவின் வியஜம் அமையும் என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளிட்டுள்ளது.

No comments:

Post a Comment