Monday, October 20, 2008

கதிர்காமத்தில் சிறிலங்கா படையினரின் காவலரண் தாக்கியழிப்பு: ஒருவர் பலி



அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள கதிர்காமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கதிர்காமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதல் அணியினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அக்காவலரணில் இருந்து ஆயுதங்களும் அடையாளம் தெரியாத ஆயுதாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment